ஒருவர் சிரித்த முகத்தோடு மரணிப்பதை மட்டும் வைத்து அவர் வெற்றியடைந்து விட்டார் என நம்மால் முடிவெடுக்க முடியாது!
அதேபோல ஒருவர் பயந்த முகத்தோடு மரணிப்பதை வைத்தும் அவர் நஷ்டமடைந்து விட்டார் என முடிவெடுக்க முடியாது!
காரணம், மறுமையின் வெற்றி தோழ்விக்கு அல்லாஹ்வோ அவனது தூதரோ இதை அடையாளமாகக் காட்டித் தரவில்லை.
ஆனால், மரணிப்பவர் நல்லடியாராக இருந்தால் வானவரால் அவருக்கு நற்செய்தி கூறப்படும் என்று அல்லாஹ் கூறுகிறான்.
கூறப்படும் நற்செய்தியைக் கேட்டு மரணிக்கும் நபர் சிரித்திருக்கலாம் அல்லது அப்படி இல்லாமலும் இருக்கலாம் என்று நினைப்பதில் தவறில்லை...
ஆனால், இதுதான் என்று முடிவெடுத்து விடக் கூடாது!
அல்லாஹ்வே மிக அறிந்தவன்.
No comments:
Post a Comment