புத்தகத்தை பார்வையிட கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பை பயன்படுத்தவும்.
Labels
- அழைப்புப்பணி (3)
- ஆய்வுகள் (20)
- ஆன்ராயடுக்கான இஸ்லாமிய மென்பொருள்கள் (13)
- இறைவசன ஒப்பீடுகள் (3)
- இறைவசனம் & ஹதீஸ் படங்கள் (15)
- கட்டூரைகள் (42)
- கேள்வி & பதில் (4)
- துஆக்கள் (4)
- பயனுள்ள தகவல்கள் (30)
- பயான் அறிவிப்புகள் (2)
- பயான் குறிப்புகள் (4)
- பலவீனமான செய்திகள் (14)
- பிற மதங்கள் (5)
- வீடியோ (62)
தினம் ஒரு நபிமொழி
Monday, October 19, 2015
Thursday, October 15, 2015
Monday, October 5, 2015
பொறுப்புக்களை மறந்த மணப்பெண்கள்!!!
அய்லாவின் அதிகாரியாக இருந்த ருஸைக் இப்னு ஹகீம், வாதில்குரா கிராமத்தில், தாம் ஜும்ஆ நடத்தலாமா என இப்னு ஷீஹாபுக்கு எழுதிக் கேட்டார். அப்போது நானும் அவருடன் இருந்தேன். அக்கிரமாத்தில் சூடான் நாட்டவரும் பிறரும் இருந்தனர். இப்னு ஷீஹாப், ஜும்ஆ நடத்துமாறு ருஸைக் இப்னு ஹகீமுக்குக் கட்டளையிட்டார்கள். இப்னு உமர்(ரலி) வழியாக ஸாலிம் அறிவிக்கும் பின்வரும் நபிமொழியை அதற்கு ஆதாரமாக காட்டினார்கள்.
"உங்களில் ஒவ்வொருவரும் பொறுப்பாளர்கள் தம் பொறுப்பின் கீழ் உள்ளவர்கள் பற்றி ஒவ்வொருவரும் விசாரிக்கப் படுவீர்கள். தலைவர் பொறுப்பாளியாவார். அவர் தம் குடிமக்கள் பற்றி விசாரிக்கப் படுவார்கள். ஓர் ஆண் மகன் தன் குடும்பத்துக்குப் பொறுப்பாளியாவான். தன் பொறுப்பிலுள்ளவர்கள் பற்றி அவனும் கேட்கப் படுவான். ஒரு பெண், கணவனின் வீட்டுக்குப் பொறுப்பாளியாவாள். அவள் தன்னுடைய பொறுப்பிலுள்ளவர்கள் பற்றி விசாரிக்கப்படுவாள். ஓர் ஊழியன் தன் முதலாளியின் செல்வத்துக்குப் பொறுப்பாளியாவான். அவன் தன்னுடைய பொறுப்பு பற்றி விசாரிக்கப் படுவான்."
"ஓர் ஆண் மகன் தன் தந்தையின் செல்வத்துக்குப் பொறுப்பாளியாவான்" என்றும் கூறினார்கள் எனக் கருதுகிறேன்.
நூல்:புகாரி 893.
இறைவனால் விசாரிக்கப்படும் முக்கியமான பொறுப்புக்களில் ஒன்று தான் ஒரு பெண் தனது கணவனின் குடும்பத்தைப் பராமரிப்பதாகும். ஆனால் இன்றையக்கால பெண்கள் பெருமளவில் இந்த பொறுப்பை மறந்தும் துடைத்தெரிந்தும் தான் வாழ்கின்றனர்!
கணவனின் வாசல் மிதிக்கும் சில பெண்களோ கணவனுக்கு மட்டுமே சேவையாற்றுகின்றனர். சில பெண்களோ ஒருபடி மேலாக சென்று வாசல் மிதித்த வேகத்தோடு கணவனை மட்டும் அழைத்துக்கொண்டு புதிய வாசல் தேடி சென்று விடுகின்றனர்!
திருமண உறவின்மூலம் கணவனை மட்டும் பராமரித்தால் போதுமானது என்ற சுயநல சித்தனையால் தான் இந்த விபரீதங்கள் அரங்கேறுகின்றன. இந்த விபரீத சிந்தனையை நாளை நமது வாரிசுகள் மூலம் சந்திக்கும் போதுதான் புரியும் வேதனையும் விளைவுகளும்.
எது எப்படியோ, இறைவனை உண்மையாக ஈமான் கொண்ட என் அன்புச்சகோதரிகளுக்கு சொல்கிறேன். இறைவனது கட்டளை, நீங்கள் மணமுடித்து செல்லும் கணவனின் வீட்டினருக்கு நீங்கள் பொறுப்பாளிகள். கணவனோடு மட்டும் நமது வட்டத்தை சுருக்கி கொள்ளக்கூடாது. கணவனின் தாய், தந்தை, சகோதர, சகோதரிகள் ஆகியோரும் உங்களுடைய பொறுப்பிலுள்ளவர்கள் தான்.
ஈமான் கொண்ட பெண்கள் என்றும் இந்த பொறுப்பை மறந்துவிடக் கூடாது. இறைவனது இந்தக் கேள்விக்கு முறையான பதிலளிக்க விரும்புவோர், தனது கணவனின் குடும்பத்தை முறையாக பேணுவார்கள்! பாசத்தோடும் பரிவோடும் பல இன்னல்கள் துன்பங்களுக்கு மத்தியிலும், பல வருடங்கள் பராமரித்து வளர்த்த ஒரு தாயின் மகனை அந்த தாயை விட்டும் பிரிக்க மாட்டார்கள்.
Subscribe to:
Posts (Atom)