தினம் ஒரு நபிமொழி


இது அனுமதிக்கப்பட்டது; இது தடுக்கப்பட்டது என்று உங்கள் நாவுகள் வர்ணிக்கும் பொய்யை அல்லாஹ்வின் மீது இட்டுக்கட்டிக் கூறாதீர்கள்! அல்லாஹ்வின் மீது பொய்யை இட்டுக்கட்டியோர் வெற்றி பெறமாட்டார்கள். (அல் குர்ஆன் 16:116).

Wednesday, April 27, 2016

கொள்கை உறவுகள் கவணத்திற்கு!


அன்புள்ள கொள்கை சொந்தங்களே!
மத்ஹபு தொடர்பான பிரச்சாரம் மக்கள் மத்தியில் சூடுபிடித்து வருவதை நாம் அறிவோம்!
அதில் ஒரு அங்கமான ஒரு பெண்ணை வாடகை பேசி விபச்சாரம் செய்தால் ஹத்(தண்டனை) இல்லை என்ற ஹனஃபி மத்ஹபின் ஆபாச சட்டம், கன்சுத்தகாயிக் என்ற நூலில் இடம்பெறுகிறது.
இந்த செய்தியை மக்கள் மத்தியில் நாம் சுட்டிக் காட்டும்போது அந்த தகவல் பதியப்பட்டுள்ள பக்கத்தை தவறாக பதிவு செய்து பரப்புகிறோம்.
இதன்விளைவாக உல(று)மாக்கள் இப்படி ஒரு செய்தியே அந்த பக்கத்தில் இல்லை என்று கொக்கரிக்கின்றனர். இந்த கொக்கரிப்பு இயல்பானதுதான் என்றாலும், அந்த செய்தி எந்த பக்கத்தில் உள்ளது என்று சரியாக எடுத்து காண்பிக்க நாம் கடமைப் பட்டுள்ளோம் அல்லவா. பக்கம் தவறாக பதியப்பட்டுள்ளது என்பதற்காக அப்படி ஒரு பக்கமே அந்த கிதாபில் இல்லை என்று ஆகிவிடாதல்லவா.
ஆகவே இந்த தகவலை சூழ்நிலைக் கருதி நம் சஹாக்களுக்கு பதிவாக போடுகிறேன்.
நாம் தவறாக பதிவு செய்திருக்கும் பக்க எண் கன்சுத்தகாயிக் பாகம் 1, பக்கம் 184.
சரியான பக்க எண் கன்சுத்தகாயிக் பாகம் 1, பக்கம் 350 ஆகும். கொக்கரிப்பவர்களின் முகத்தில் தூக்கி வீசுங்கள்!
தவறான பக்க எண்ணை பதிந்துள்ளவர்கள் அதை மாற்றிக் கொள்ளவும்!

Monday, April 25, 2016

உரையை துவங்குவதற்கு முன் - அரபு மற்றும் தமிழ்!




إن الحمد لله نحمده ونستعينه ونستغفره، ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له، ومن يضلل فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمداً عبده ورسوله.
இன்னல்ஹம்(d)தலில்லாஹி நஹ்ம(d)துஹு வநஸ்தஈநுஹு வநஸ்(th)தஃபிருஹ், வநவூ(d)து பில்லாஹி மின் ஷுரூரி அன்ஃபுஸினா வ மின் ஸய்யிஆத்தி அஃமாலினா, மய்யஹ்(d)திஹில்லாஹு ஃபலா மு(dh)ழிள்ளலாஹ், வமய் யு(dh)ழ்லில் ஃபலா ஹாதியலாஹ், வ அஷ்ஹ(d)து அல்லா இலாஹா இல்லல்லாஹு வஹ்(d)தஹு லா ஷரீ(k)கலஹு வ அஷ்ஹ(d)து அன்ன முஹம்ம(d)தன் அ(b)ப்(d)துஹு வரசூலுஹ்.

முஸ்னத் அஹ்மத் 3275, ஸஹீஹ் முஸ்லிம் 1576, சுனன் இப்னுமாஜா 1892.


يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللَّهَ حَقَّ تُقَاتِهِ وَلَا تَمُوتُنَّ إِلَّا وَأَنْتُمْ مُسْلِمُونَ
سورة آل عمران :(102)
யா அய்யுஹல்ல(d)தீன ஆமனூ இத்த(q)குல்லாஹ ஹ(q)க்க(th)து(q)காத்திஹி வலா (th)தமூ(th)துன்ன இல்லா வஅன்(th)தும் முஸ்லிமூன்.
(சூரா ஆலு இம்ரான்:102)


يَا أَيُّهَا النَّاسُ اتَّقُوا رَبَّكُمُ الَّذِي خَلَقَكُمْ مِنْ نَفْسٍ وَاحِدَةٍ وَخَلَقَ مِنْهَا زَوْجَهَا وَبَثَّ مِنْهُمَا رِجَالًا كَثِيرًا وَنِسَاءً وَاتَّقُوا اللَّهَ الَّذِي تَسَاءَلُونَ بِهِ وَالْأَرْحَامَ إِنَّ اللَّهَ كَانَ عَلَيْكُمْ رَقِيبًا     سورة النساء:(1)
யா அய்யுஹன்னாஸ், இத்த(q)கூ ர(b)ப்ப(k)குமுல்ல(d)தீ (kh)ஹல(q)(k)கும் மின் நஃப்ஸிவ் வாஹி(d)தா, வ (kh)ஹல(q)க மின்ஹா ச(z)வ்ஜஹா, வ பஸ்ஸ மின்ஹுமா ரிஜாலன் கசீரவ் வ நிஸாஅ, வத்த(q)குல்லாஹல்ல(d)தீ (th)தஸாஅலூன (b)பிஹி வல்அர்ஹாம், இன்னல்லாஹ கான அலைக்கும் ர(q)கீ(b)பா.                                   
(சூரா அந்நிஸா : 1)


يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللَّهَ وَقُولُوا قَوْلًا سَدِيدًا (70) يُصْلِحْ لَكُمْ أَعْمَالَكُمْ وَيَغْفِرْ لَكُمْ ذُنُوبَكُمْ وَمَنْ يُطِعِ اللَّهَ وَرَسُولَهُ فَقَدْ فَازَ فَوْزًا عَظِيمًا
سورة الأحزاب:(71)
யா அய்யுஹல்ல(d)தீன ஆமனூ, இத்த(q)குல்லாஹ், வ(q)கூலூ (q)கவ்லன் ஸ(d)தீ(d)தா, யுஸ்லிஹ்ல(k)கும் அஃமால(k)கும் வ யஃக்ஃபிர்ல(k)கும் (d)துநூப(k)கும், வமை யு(th)த்இல்லாஹ வரசூலஹு, ஃப(q)கத் ஃபா(z)ஸ ஃபவ்(z)சன் அழீமா.
(சூரா அல்அஹ்ஸாப்:70,71)


إِنَّ أَصْدَقَ الْحَدِيثِ كِتَابُ اللَّهِ، وَأَحْسَنَ الْهَدْيِ هَدْيُ مُحَمَّدٍ، وَشَرُّ الْأُمُورِ مُحْدَثَاتُهَا، وَكُلُّ مُحْدَثَةٍ بِدْعَةٌ وَكُلُّ بِدْعَةٍ ضَلَالَةٌ، وَكُلُّ ضَلَالَةٍ فِي النَّارِ

ஃபஇன்ன அஸ்(d)(q)கல் ஹ(d)தீஸி கி(th)தா(b)புல்லாஹ், வ அஹ்ஸனல் ஹ(d)த்யி ஹ(d)த்யு முஹம்ம(d)தின் )ஸல்லல்லாஹு அலைஹி வ ஸல்லம்(, வஷர்ருல் உமூரி முஹ்(d)தசாத்துஹா, வ குல்லு முஹ்(d)தச(th)திம் பி(d)த்ஆ, வ குல்லு பி(d)த்அத்தின் ழளாலா, வ குல்லு ழளாலத்தின் ஃபின் நார்.

Wednesday, April 20, 2016

அறிந்து கொள்வோம் - பலவீனமான செய்தி!




حديث: "إذا مات أحدكم فلا تحبسوه وأسرعوا به إلى قبره، وليقرأ عند رأسه بفاتحة الكتاب وعند رجليه بخاتمة البقرة في قبره".

உங்களில் ஒருவர் மரணித்துவிட்டால் அவரை நீங்கள் தடுத்து (தாமதப் படுத்தி) வைக்க வேண்டாம், அவரை கப்ரை நோக்கி விரைவுபடுத்துங்கள், மேலும் கப்ரில் வைத்து அவரது தலைமாட்டில் சூரத்துல் பாத்திஹாவையும், கால்மாட்டில் பகரா சூராவின் கடைசியையும் ஒதுங்கள்.  
(தப்ரானி முஃஜமுல் கபீர், ஷுஅபுல் ஈமான்)


இந்த செய்தியின் அறிவிப்பாளர் தொடரில் இடம்பெறும் அய்யூப் இப்னு நுஹைக் என்பவர் ஹதிஸ்கலையில் விடப்பட்டவராவார்மேலும் இதன் தொடரில் வரும் முதல் அறிவிப்பாளரான யஹ்யா என்பவர் பலவீனமானவராவார்
(ஸில்ஸிலதுல் லஈபா) (الضعيفة 4140)