இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
"இறைவனால் தண்டிக்கப்பட்ட இந்த (ஸமூத் கூட்டத்தினரின்) இடத்திற்கு அழுதவர்களாகவே தவிர நீங்கள் செல்ல வேண்டாம்! நீங்கள் அழுதவர்களாக இல்லையென்றால் அவ்விடத்திற்குச் செல்லாதீர்கள்! அவர்களுக்கு ஏற்பட்டது உங்களுக்கும் ஏற்பட்டு விடக் கூடாது."
அறிவிப்பவர் : அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி),
நூல் : புகாரி 433.
அல்லாஹ்வின் தூதரின் இந்த எச்சரிக்கையை இஸ்லாமியர்களில் பலரும் மறந்து தான் செயல்படுகின்றனர். உம்ராவிற்கும் ஹஜ்ஜிற்கும் செல்லக்கூடிய உலக நாடுகள் முழுவதிலும் வாழும் முஸ்லிம்கள் இந்த அழிக்கப்பட்ட பகுதிகளுக்கும் செல்வது வழக்கம்.
ஆனால் இந்தப்பகுதிக்கு செல்வோர் என்ன நோக்கத்தோடும் எப்படிபட்ட செயலோடும் அங்கு செல்ல வேண்டும் என்று நபி (ஸல்) அவர்கள் வழிகாட்டியும் எச்சரித்தும் உள்ளார்களோ, அவைகளுக்கு பெருமளவில் இஸ்லாமிய சமூகம் மதிப்பு கொடுப்பதே இல்லை!
இதைவிடவும் கொடுமை என்னவென்றால், முகநூல் போதையில் பல இடங்களுக்கு சென்று செல்ஃபி ஃபோட்டோ எடுக்கும் மனநல பாதிப்புடையவர்கள், அல்லாஹ் தனது கோபத்தால் அழித்த இந்த இடத்தையும் விட்டு வைக்கவில்லை!
அல்லாஹ் நம்மை பாதுகாப்பானாக! விவரமற்று இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டோர் இனியாவது திருந்தி இறைவனிடம் மன்னிப்பு தேடி திரும்புங்கள்...!
No comments:
Post a Comment