مَنْ قَذَفَ مَمْلُوكَهُ، وَهُوَ بَرِيءٌ مِمَّا قَالَ، جُلِدَ يَوْمَ القِيَامَةِ، إِلَّا أَنْ يَكُونَ كَمَا قَالَ
நிரபராதியான தம் அடிமையின் மீது அவதூறு கூறியவருக்கு மறுமை நாளில் சாட்டையடி வழங்கப்படும். அவர் சொன்னதைப்போன்று அந்த அடிமை இருந்தால் தவிர! என்று அபுல் காசிம் (இறைத்தூதர் (ஸல்)) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல்: புகாரி 6858.
மக்கா குறைஷிகளிடம் இருந்த அன்றைய கால அடிமைகள் மனிதர்களாகவே மதிக்கப்படாத நிலையில்தான் இருந்தனர். அவர்களும் உயிருள்ள நபர்கள் என்று எண்ணிக்கூட பார்க்க மனமில்லாத வகையில் தொல்லை படுத்தப்பட்டார்கள் என்பதை நாம் அனைவரும் அறிந்துதான் இருக்கிறோம்.
அப்படிப்பட்ட அடிமைகளின் உரிமைகள் கூட பாதுகாக்கப்பட வேண்டும், அவர்கள் விஷயத்தில் அவதூறு கூறக்கூடாது என்று இறைத்தூதர் நமக்கு போதனை செய்கிறார்கள். அப்படி ஒரு மனிதர் அடிமைதானே என்று அற்பமாக எண்ணிக்கொண்டு அவதூறு பரப்பினால், அவருக்கு அல்லாஹ் மறுமையில் சாட்டையடி வழங்குவான் என்றும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறுகிறார்கள்!
ஆனால், இன்றைய கால சூழலில், தான் நேசித்த ஒரு நபர் தனக்கு ஏதாவதொரு சந்தர்ப்பத்தில் முரன்பட்டுவிட்டால், அடுக்கடுக்காக அவரைப்பற்றி மற்றவர்களிடம் அவதூறு பரப்பும் நிலையில் நம் மக்கள் மக்கள் உள்ளனர்.
மறுமையில் நாம் தண்டிக்கப்படுவோம் என்பதை அஞ்சிக் கொள்வோமாக!