Labels
- அழைப்புப்பணி (3)
- ஆய்வுகள் (20)
- ஆன்ராயடுக்கான இஸ்லாமிய மென்பொருள்கள் (13)
- இறைவசன ஒப்பீடுகள் (3)
- இறைவசனம் & ஹதீஸ் படங்கள் (15)
- கட்டூரைகள் (42)
- கேள்வி & பதில் (4)
- துஆக்கள் (4)
- பயனுள்ள தகவல்கள் (30)
- பயான் அறிவிப்புகள் (2)
- பயான் குறிப்புகள் (4)
- பலவீனமான செய்திகள் (14)
- பிற மதங்கள் (5)
- வீடியோ (62)
தினம் ஒரு நபிமொழி
Wednesday, August 16, 2017
beautiful quran recitation Syeikh Mansour Al Salimi Surat Al Anbiya dan ...
قراءة رائعة مميزة لرفيعة المسكرية
Abdurrahman Al Oosy Beautiful Recitation مُحَمَّدٌ رَسُولُ اللَّه
Sunday, August 13, 2017
மக்தபதுஷ் ஷாமிலா மென்பொருள் - இலவச பதிவிறக்கம்
المكتبة الشاملة
உலக அளவில் மார்க்கம் பயிலுகின்ற மாணவர்களுக்கு மத்தியில் முதன்மையானதாகவும் மிகவும் பிரயோஜனமான மென்பொருளாகவும் இந்த "மக்தபதுஷ் ஷாமிலா" மென்பொருள் திகழ்கின்றது என்று சொல்லலாம்.
ஆய்வுத்தேடலுக்காக உலக அளவில் பல இலட்சக்கணக்கான மார்க்க அறிஞர்களால் பயன்படுத்தப்படும் முன்னணி மென்பொருள் இதுதான். அத்தகைய இந்த ஷாமிலா மென்பொருளை இலவசமாக பதிவிறக்கம் செய்வது எப்படி எனபதைத்தான் இந்த பதிவில் நாம் பார்க்க இருக்கிறோம்.
பெரும்பாலும் தற்போதைய சூழலில் மார்க்க கல்வி பயிலும் மாணவர்கள் இந்த மென்பொருள் சம்மந்தமான அறிவோடுதான் தமது கல்லூரியை முடித்து வெளியேறுகின்றனர்.
இந்த மென்பொருளை பற்றி அறிமுகமுள்ள நபர்களால் மட்டுமே இலகுவாக இதனை பயன்படுத்த முடியும். அவர்களுக்கான பதிவாகவே இந்தப் பதிவை நாம் பதிவிடுகிறோம்.
இந்த மென்பொருளின் அளவு 2.1 GB ஆகும். நாம் தரும் இந்த லிங்கிலுள்ள ஷாமிலா மென்பொருள் கணினிக்குரியது ஆகும்.
கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்
இந்த பக்கத்திற்கு சென்றதும் இதுபோன்றதொரு பகுதி காண்பிக்கப்படும்
இந்த பகுதியின் வலது பக்கத்தின் முன்றாவது இடத்தில் உள்ள
تنزيل الشاملة
என்ற பட்டியை கிளிக் செய்யவும்.
உங்கள் கணினிக்கு மக்தபதுஷ் ஷாமிலா பதிவிறக்கம் இப்போது ஆரம்பம் ஆகிவிடும்.
இந்த மென்பொருள் நாம் கொடுத்த லிங்கின் மூலமாக iso ஃபார்மேட்டில் பதிவிறக்கம் ஆகும். இதை உபயோகிக்கும் முறை, இன்ஸ்டால் செய்யும் முறை சிலருக்கு தெரியாமல் இருக்கலாம்.
shamila.iso ஃபார்மேட்டிலுள்ள File-ஐ Extract செய்து தான் நாம் பயன்படுத்த வேண்டும். அல்லது அந்த Flie-ஐ அப்படியே ஒரு DVD-ஆக ரைட் செய்து கணினியில் பயன்படுத்தினால் ஷாமிலா மென்பொருளை இலகுவாக இன்ஸ்டால் செய்யலாம்.
இந்த முறையை பயன்படுத்த தெரியாதவர்கள் கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து WinRAR என்ற அப்ளிகேஷனை முதலில் பதிவிறக்கம் செய்யுங்கள்
WinRAR அப்ளிகேஷனை உங்கள் கணினியில் முதலில் இன்ஸ்டால் செய்யவும்.
பின்னர் shamila.iso என்ற File-ஐ Right click செய்து Extract Files என்பதை தேர்வு செய்யவும்.
உதாரணத்திற்கு கீழே உள்ள படத்தை பார்க்கவும்
Extract Files என்பதை கிளிக் செய்தவுடன் அனைத்து பகுதியும் சிறிது நேரம் முழுமையாக Extract ஆகும். Extract முழுமையாக ஆன பிறகு அதே பெயரில் ஒரு Folder Open ஆகும். அந்த Folder-ஐ திறந்தால் கீழே உள்ளதை போன்று ஒரு பக்கம் திறக்கும்.
அதில் உள்ள setup என்பதை தேர்வு செய்து இன்ஸ்டால் செய்து கொள்ளவும்.
கணினியில் இந்த அப்ளிகேஷனுக்கான Storage Location கேட்குமாக இருந்தால் C drive-ஐ தேர்வு செய்து இன்ஸ்டால் கொடுக்கவும்.
நாம் விளக்கி இருக்கின்ற முறையை சரியாக கையாண்டால் உங்கள் கணினியில் ஷாமிலா மின்னணு நூலகம் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டு விடும்.
படியுங்கள்.... பரப்புங்கள்!!!
அன்புடன்
முஹம்மது மஷாரிக்
Thursday, August 10, 2017
இரண்டாவது திருமணம் செய்யும் போது முதல் மனைவியின் அனுமதி அவசியமா?
Saturday, August 5, 2017
அமானித மோசடி - கவணம் தேவை!
மக்களிடம் நம் ஜமாஅத்திற்கு வாங்கப்படும் நன்கொடைகளை
அவர்களிடம் எந்தப் பணிக்காக வாங்கினோமோ அது அல்லாத மற்ற பணிகளுக்குப்
பயன்படுத்துவது கூடுமா?
இஸ்லாத்தைப் பொறுத்தவரை வாக்குறுதிகளை அப்படியே நிறைவேற்ற வேண்டும்.
வாக்குறுதிகளும் அல்லாஹ்விடம் விசாரிக்கப்படும்.
பார்க்க, திருக்குர்ஆன் 2:177, 17:34, 23:8.
எனவே எந்தக் காரியத்தைச் சொல்லி நிதி திரட்டப்பட்டதோ அந்தப் பணிக்குத்தான்
செலவிட வேண்டும். நோன்புக்
கஞ்சிக்காக நிதி திரட்டி பள்ளிவாசல் கட்டுவதற்குச் செலவிட்டாலும் அது "மோசடியாகும்".
குறிப்பிட்ட ஒரு பணியைச் சொல்லாமல் ஜமாஅத்தின் நோன்புக் கஞ்சி மற்றும்
சமுதாயப்பணிகள் வகைக்கு என்று
தெளிவுபடுத்தி நிதி திரட்டினால் மற்ற சமுதாயப் பணிகளையும் சொல்லி
திரட்டியதால் இதில் எந்த மோசடியும் இல்லை.
அதுபோல் உத்தேசமாக ஒரு தொகையை நிர்ணயித்து சில பணிகளுக்கு நிதி திரட்டப்பட்டு
அதில் மீதமாகும் நிலை ஏற்படலாம்.
உதாரணமாக கூட்டுக் குர்பானிக்காக ஒரு மாட்டின் விலை இவ்வளவு அல்லது ஒரு பங்கின்
விலை இவ்வளவு என நிர்ணயம் செய்கிறோம். ஆனால் அந்த நிதியில் மாட்டின் அதிகபட்ச விலை
அடிப்படையில் நாம் நிர்ணயம் செய்கிறோம். ஆனால் விலை குறைவாக கிடைத்தால் சில
ரூபாய்கள் மீதமாகி விடும். இந்தப் பணத்தை தெருவில் வீச முடியாது என்ற அடிப்படையில்
அது போன்ற நல்ல பணிகளுக்கு பயன்படுத்தலாம் என்றாலும் நாம் நிதி திரட்டும்போதே குர்பானியில் மீதமாகும்
பணத்தை ஜமாஅத்தின் நற்பணிகளுக்கு பயன்படுத்திக் கொள்வோம் என்று விளம்பரம் செய்து
விடவேண்டும்.
இதற்கு உடன்பட்டே மக்கள் நிதி தருவதால் குர்பானி கொடுத்த பின் மீதமாவதை எந்த
நற்பணிக்கும் பயன்படுத்திக் கொள்வதில் எந்த மோசடியும் இல்லை.
அதே நேரத்தில் வேறு வகைக்குப் பணம் திரட்டுவதற்காக மக்களை ஏமாற்றும் நோக்கில்
குர்பானி, நோன்புக் கஞ்சியைப் பயன்படுத்தி பெரும் நிதி திரட்டுவதை ஏற்றுக்கொள்ள
முடியாது.
உணர்வு வார இதழ்
நவம்பர் 27 - டிசம்பர் 03, 2015.
Subscribe to:
Posts (Atom)