தினம் ஒரு நபிமொழி


இது அனுமதிக்கப்பட்டது; இது தடுக்கப்பட்டது என்று உங்கள் நாவுகள் வர்ணிக்கும் பொய்யை அல்லாஹ்வின் மீது இட்டுக்கட்டிக் கூறாதீர்கள்! அல்லாஹ்வின் மீது பொய்யை இட்டுக்கட்டியோர் வெற்றி பெறமாட்டார்கள். (அல் குர்ஆன் 16:116).

Tuesday, October 18, 2016

நபியவர்கள் கேட்ட அழகிய பிரார்த்தனைகள் - 1



நபி(ஸல்) அவர்கள் (பின்வருமாறு) பிரார்த்தித்துவந்தார்கள்

اللَّهُمَّ اغْفِرْ لِي خَطِيئَتِي وَجَهْلِي، وَإِسْرَافِي فِي أَمْرِي، وَمَا أَنْتَ أَعْلَمُ بِهِ مِنِّي. اللَّهُمَّ اغْفِرْ لِي هَزْلِي وَجِدِّي وَخَطَايَايَ وَعَمْدِي، وَكُلُّ ذَلِكَ عِنْدِي

அல்லாஹும்ம ஃக்ஃபிர் லீ கத்தீஅத்தீ, வ ஜஹ்லீ, வ இஸ்ராஃபீ ஃபீ அம்ரீ, வமா அன்த்த அஃலமு பிஹி மின்னீ, அல்லாஹும்ம ஃக்ஃபிர் லீ ஹஸ்லீ, வ ஜித்தீ, வ கத்தாயாய, வ அம்தீ, வ குல்லு தாலிக இந்தீ.

(பொருள்: யாஅல்லாஹ்! என்னுடைய குற்றங்களையும் என்னுடைய அறியாமையால் விளைந்த தவறுகளையும் என்னுடைய செயல்களில் நான் வரம்பு மீறியதையும் நீ மன்னித்தருள்வாயாக! இவைகளைப் பற்றி என்னைவிட நீயே நன்கறிந்தவன். யாஅல்லாஹ்! நான் விளையாட்டாகவோ, வேண்டுமென்றோ, அறியாமலோ, அறிந்தோ செய்தவைகளையும் மேலும் என்னிடம் நிகழ்ந்த அனைத்து பாவங்களையும் மன்னித் தருள்வாயாக!
அறிவிப்பவர்: அபூ மூஸா அல் அஷ்அரீ(ரலி)
நூல்: புஹாரி 6399.

Friday, October 14, 2016

Surah Arrahman Recited By Sister Barah (Dead)

மக்கள் கூடும் இடத்தில் தொழுகை - 1

மக்கள் தங்களது தேவைகளை நிறைவேற்றுவதற்காக பஜார்களுக்கு செல்கின்ற பொழுது அதிக பட்சமாக அவர்கள் தொழுகையை நிறைவேற்றுவது கிடையாது. தொழுகை நேரம் கடந்த பின்னர் மிகவும் உடல் சோர்வோடு அப்படியே வீடு சென்று உறங்கி விடும் நபர்கள் தான் நம்மில் அதிகம் உள்ளனர். 

நமது பலவீனத்தின் காரணத்தினால் இவைகள் ஏற்படுகின்றன என்பது உண்மை. ஆனால் இவற்றை சொல்லி நாம் இறைவனிடம் தப்பிக்க முடியாதல்லவா.

ஆகவே இதற்கான மாற்று வழியை அறிந்து அரபு நாடுகளின் சில பகுதிகளில் மக்கள் கூடும் இடங்கள் தோறும் பாங்கு அழைப்பு கொடுக்கப்பட்டு தொழுகை நடத்தப்படுகிறது. அதிகமான மக்கள் அந்த தொழுகைகளில் கலந்தும் கொள்கின்றனர்.

இதுபோன்ற ஏற்பாடுகளை இயன்றால் நாமும் செய்யலாம் என்பது எமது அவா.