தினம் ஒரு நபிமொழி


இது அனுமதிக்கப்பட்டது; இது தடுக்கப்பட்டது என்று உங்கள் நாவுகள் வர்ணிக்கும் பொய்யை அல்லாஹ்வின் மீது இட்டுக்கட்டிக் கூறாதீர்கள்! அல்லாஹ்வின் மீது பொய்யை இட்டுக்கட்டியோர் வெற்றி பெறமாட்டார்கள். (அல் குர்ஆன் 16:116).

Sunday, May 17, 2015

மொத்த நபிமார்கள் எத்தனை?‎




உலகம் படைக்கப்பட்டது முதல்  நபிகள் நாயகம் (ஸல்) ‎அவர்கள் வரை அனுப்ப்ப்பட்ட மொத்த நபிமார்களின் எண்ணிக்கை ஒரு ‎லட்சத்து 24 ஆயிரம் என்று பரவலாக ஆலிம்களால் ‎சொற்பொழிவுகளில் கூறப்பட்டு வருகிறது. இதற்கு ஆதாரம் ‎உள்ளதா?‎
ஏ.சுலைமான், விருத்தாசலம்.‎
பதில்:‎
நபிமார்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்து 24 ஆயிரம் என்று ‎நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியதாக முஸ்னத் அஹ்மத், ‎தப்ரானி ஆகிய நூல்களில் ஒரு ஹதீஸ் பதிவு செய்யப்பட்டுள்ளது.‎
இது பலவீனமான ஹதீஸாகும். இதன் அறிவிப்பாளர் தொடரில் ‎அலீ பின் யஸீத் அல் ஹானி என்பவர் இடம் பெறுகிறார். இவர் ‎பலவீனமானவராவார்.‎
இது போல் மற்றொரு ஹதீஸ் இப்னு ஹிப்பான் நூலில் பதிவு ‎செய்யப்பட்டுள்ளது. இதுவும் பலவீனமான ஹதீஸாகும்.‎
இதன் அறிவிப்பாளர் தொடரில் இப்ராஹீம் பின் ஹிஷாம் ‎அல்கஸ்ஸானி என்பவர் இடம் பெறுகிறார். இவர் பொய்யர் ‎என்று சந்தேகிக்கப்பட்டவர் என்பதால் இதுவும் பலவீனமான ‎ஹதீஸாகும்.‎
அல்லாஹ் ஏராளமான நபிமார்களை அனுப்பியுள்ளான். ‎அவர்களின் எண்ணிக்கை நமக்குச் சொல்லப்படவில்லை என்பதே ‎சரியான நம்பிக்கையாகும்.‎
இந்த எண்ணிக்கையை விட அதிகமான நபிமார்கள் ‎அனுப்பப்பட்டு இருந்தால் அவர்களை நாம் மறுத்த குற்றம் ‎ஏற்படும்.‎
அதை விட குறைவான எண்ணிக்கையில் நபிமார்கள் ‎அனுப்பப்பட்டு இருந்தால் நபியல்லாதவர்களை நபி என்று நம்பிய ‎குற்றம் ஏற்படும். இதைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.
Source: www.onlinepj.com

Thursday, May 14, 2015

இறைவன் அனுமதித்த முறையில் பொருளீட்டுவோம்!


முக்கிய அறிவிப்பு - அவசரம் காட்டவும்!




அன்பார்ந்த சகோதர சகோதரிகளே, அஸ்ஸலாமு அலைக்கும் வரமத்துல்லாஹி வ பரகாத்துஹு...!

அல்லாஹ்வின் அருளால் இஸ்லாம் சார்ந்த பல பயனுள்ள ஆண்ட்ராய்டு மென்பொருட்களை நாம் தயாரித்து வெளியிட்டு வருவதை அனைவரும் அறிவீர்கள். மென்மேலும் இதுபோன்ற மென்பொருட்களை வெளியிட வேண்டும் என்ற நோக்கத்தோடு இந்த தகவலை உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன்.

நாங்கள் எங்களது கம்பெனியின் லோகோவாக ஓர் இறைவனை உணர்த்தும் ஏகத்துவ முத்திரையாக ஒரு விரலை வைத்திருந்தோம். நீங்கள் எனது எந்த மென்பொருளை திறந்தாலும் அதுதான் முதலாவதாக வரும்.

இந்த விரல் முத்திரை தற்போதைய சூழலில் சில தீவிரவாத அமைப்பினராலும் பயன்படுத்த படுவதால், இது அவர்களது இயக்கத்தின் முத்திரை என்பதை போன்றும், யாரெல்லாம் அதை பயன்படுத்துகிறார்களோ அவர்களும் அந்த தீவிரவாத அமைப்பை ஆதரிக்கின்றனர் என்பதை போன்றும் கருத்து தற்போது தமிழகத்தில் நிலவ ஆரம்பித்துள்ளது. 

முதலில் ஒன்றை பதிய வைத்து கொள்கிறேன். நான் ஒரு முஸ்லிம், அதிலும் தமிழகத்தின் சமூக பேரியக்கமான தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் ஒரு உறுப்பினரும் கூட. 
எனது ஜமாஅத் கடந்த பல வருடங்களாக இஸ்லாமியர்களுக்கும் பிற மத சகோதரர்களுக்கும் மத்தியில் நல்லிணக்கம் ஏற்படுத்த எந்த அளவிற்கு உழைத்திருக்கிறது என்பதை அனைத்து மீடிக்களும், உளவுத்துறையினரும் அறிந்துதான் வைத்துள்ளனர்.
அந்த அமைப்பை சார்ந்த நான், தீவிரவாதத்திற்கு எதிரானவன்...
தீவிரவாத அமைப்பினர் இஸ்லாமியர்களாக இருந்தாலும் அவர்களை எதிர்ப்பதில் நானும் முதலாமவன்.
எந்த தீவிரவாத அமைப்பிற்கும் நான் ஆதரவாளன் அல்ல!

அப்படி சிந்தனையை தூண்டும் வகையில் சில அயோக்கியர்கள் விரல் முத்திரையை பயன்படுத்தியதால், அந்த கயவர்களை எங்களோடு தொடர்பு படுத்தி பேசிவிடக்கூடாது (விரல் முத்திரை இஸ்லாத்தின் அடையாளமல்ல) என்பதற்காக எங்களது கம்பெனியின் லோகோ இன்றோடு மாற்றப்பட்டுவிட்டது!

#குறிப்பு:
இந்த இஸ்லாமிய மென்பொருட்கள் தடைபடாமல் உங்களை வந்தடைய வேண்டுமென்றால், இதன்மூலம் எங்களுக்கு எதுவும் பாதிப்புகள் வராமல் இருக்க வேண்டுமென்றால், இந்த தகவலை அதிகம் அதிகம் அனைத்து மக்களுக்கும் பரப்புங்கள்! 

உடனே நாங்கள் வெளியிட்ட அனைத்து மென்பொருட்களையும் அப்டேட் செய்து கொள்ளுங்கள்! அப்படி செய்தால் மட்டும் தான் அனைவரது மொபைலிலும் லோகோ மாற்றப்படும்!

தளத்திற்கு செல்லும் லிங்க்,
https://play.google.com/store/apps/developer?id=Masarik%20Apps&hl=en

அன்புடன்,
முஹம்மது மஷாரிக்.