தினம் ஒரு நபிமொழி


இது அனுமதிக்கப்பட்டது; இது தடுக்கப்பட்டது என்று உங்கள் நாவுகள் வர்ணிக்கும் பொய்யை அல்லாஹ்வின் மீது இட்டுக்கட்டிக் கூறாதீர்கள்! அல்லாஹ்வின் மீது பொய்யை இட்டுக்கட்டியோர் வெற்றி பெறமாட்டார்கள். (அல் குர்ஆன் 16:116).

Thursday, July 9, 2015

ரமழான் சொற்பொழிவு - 2015


தலைப்பு : நன்மைகளை அழித்தொழிக்கும் கொடிய பாவங்கள்!
உரை : முஹம்மது மஷாரிக் தொண்டி
இடம் : வேலூர் மாவட்ட தலைமையகம்







லைலத்துல் கத்ருடைய இரவில் ஓத வேண்டிய துஆ!


Sunday, July 5, 2015

ஆண்கள் மருதானி இடுவது மார்க்கதில் ஆகுமானதா?




ஆண்கள் மருதாணி பூசக் கூடாது என்ற கருத்தில் ஒரு செய்தி அபூதாவூதில் 4280 வது எண்ணில் பதிவு செய்யப்பட்டுள்ளது. 

கைகளிலும் கால்களிலும் மருதாணி பூசிய ஒரு மனிதர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் கொண்டு வரப்பட்டதாகவும் அவர் பெண்களுக்கு ஒப்ப நடந்ததால் அவரை நாடுகடத்துமாறு நபியவர்கள் உத்தரவிட்டதாகவும் இந்தச் செய்தி கூறுகின்றது. 

இந்தச் செய்தியில் இடம் பெற்றுள்ள அபூஹாஷிம் மற்றும் அபூ யசார் ஆகிய இரண்டு அறிவிப்பாளர்களின் நம்பகத்தன்மையும் அறிஞர்களால் உறுதி செய்யப்படவில்லை. இதன் காரணத்தால் இந்தச் செய்தி பலவீனமானதாகும். 

ஆண்கள் மருதாணி பூசலாம் என்றோ பூசக் கூடாது என்றோ ஆதாரப்பூர்வமான நபிமொழிகளில் நேரடியாக்க் கூறப்படவில்லை. ஆனால் இப்பிரச்சனைக்கு சரியான தீர்வை பின்வரும் பொதுவான செய்தியிலிருந்து அறியலாம். 

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பெண்களைப் போன்று ஒப்பனை செய்து கொள்ளும் ஆண்களையும் ஆண்களைப் போன்று ஒப்பனை செய்து கொள்ளும் பெண்களையும் சபித்தார்கள் . 
அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் (ரலி), நூல்: புகாரி (5885) 

ஆண்கள் பெண்களைப் போன்று நடந்து கொள்ளக் கூடாது என்று இந்தச் செய்தி கூறுகின்றது. பெண்கள் மட்டுமே பயன்படுத்துகின்ற பொருட்களை ஆண்கள் பயன்படுத்துவதை இச்செய்தி தடைசெய்கின்றது. பெண்கள் மட்டுமே பயன்படுத்துகின்ற பொருட்கள் நாட்டுக்கு நாடு வேறுபடும். ஒரு பகுதியில் பெண்கள் மட்டும் பயன்படுத்துகின்ற பொருள் மற்றொரு பகுதியில் ஆண் பெண் இருபாலருக்கும் உரிய பொருளாக இருக்கும்.   எனவே தான் மார்க்கம் இவ்விஷயத்தில் வரையறை செய்யாமல் அந்ததந்தப் பகுதி மக்களின் கலாச்சாரத்தைப் பொறுத்து முடிவு செய்ய அனுமதி வழங்கியுள்ளது. 

உதாரணமாக தலையில் பூ வைப்பது நமது நாட்டில் பெண்கள் மட்டும் செய்யும் காரியம். ஆண்கள் யாரும் இவ்வாறு செய்வதில்லை. இந்நிலையில் ஒரு ஆண் தலையில் பூ வைத்தால் மேற்கண்ட ஹதீஸ் அடிப்படையில் இது தவறான செயலாகிறது. இதே போன்று நடைமுறையில் உள்ள மக்கள் கலாச்சாரத்தை அடிப்படையாக வைத்து ஆண்கள் மருதாணி  பூசுவது குறித்தும் நாம் முடிவு செய்ய வேண்டும். மருதாணியைப் பொறுத்தவரை அது பெண்கள் மட்டுமே பயன்படுத்தும் அலங்காரப் பொருளாக இருந்து வருகின்றது. இப்பொருளை அதிகம் பயன்படுத்தக்கூடியவர்கள் பெண்களாகவே இருக்கின்றனர். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்திலும் பெண்களே இதைக் கை கால்களில் பூசி பயன்படுத்தினர். 

சுபைஆ பின்த் அல்ஹாரிஸ் அவர்கள் பனூ ஆமிர் பின் லுஅய்’ குலத்தைச் சேர்ந்த சஅத் பின் கவ்லா (ரலி) அவர்களுக்கு வாழ்க்கைப்பட்டிருந்தார். -சஅத் (ரலி) அவர்கள் பத்ருப் போரில் கலந்து கொண்டவராவார்- விடைபெறும் ஹஜ்ஜின் போது சஅத் (ரலி) அவர்கள் இறந்து விட்டார்கள். அப்போது சுபைஆ’ கர்ப்பமுற்றிருந்தார். சஅத் அவர்கள் இறந்து நீண்ட நாட்கள் ஆகியிருக்கவில்லை; (அதற்குள்) சுபைஆ  பிரசவித்து விட்டார். (பிரசவத்திற்குப் பின் ஏற்படும்) உதிரப்போக்கிலிருந்து சுபைஆ அவர்கள் சுத்தமான போது,  பெண் பேச வருபவர்களுக்காகத் தன்னை அலங்கரித்துக் கொண்டார். அப்போது, பனூ அப்தித் தார் குலத்தில் ஒருவரான அபுஸ் ஸனாபில் பின் பஅக்கக்’ (ரலி) அவர்கள் சுபைஆ அவர்களிடம் வந்து, “திருமணம் புரியும் ஆசையில் பெண் பேச வருபவர்களுக்காக உங்களை நீங்கள் அலங்கரித்திருப்பதை நான் காண்கின்றேன். அல்லாஹ்வின் மீதாணையாக! (கணவன் இறந்த ஒரு பெண் அவனது இறப்புக்குப் பின் இருக்க வேண்டிய இத்தா’ காலமாகிய) நான்கு மாதம் பத்து நாட்கள் முடியும் வரையில் நீங்கள் (மறு)மணம் புரிந்து கொள்ள முடியாது” என்று கூறினார்கள். சுபைஆ (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்: இதை அபுஸ்ஸனாபில் என்னிடம் சொன்னதையடுத்து நான் மாலை நேரத்தில் எனது உடையை உடுத்திக் கொண்டு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் சென்றேன். அப்போது நபி (ஸல்) அவர்களிடத்தில் இது பற்றிக் கேட்டேன். அதற்கு, நீ பிரசவித்து விட்ட போதே (மணம் புரிந்து கொள்ள) அனுமதிக்கப்பட்டவளாக ஆகி விட்டாய். நீ விரும்பினால் (மறு)மணம் செய்துகொள்’ என்று நபி (ஸல்) அவர்கள் மார்க்கத் தீர்ப்பு வழங்கினார்கள். 
(புகாரி (3991) 

இந்தச் செய்தியில் சுபைஆ (ரலி) அவர்கள் அலங்காரம் செய்திருந்தார் என்று பொதுவாக்க் கூறப்பட்டுள்ளது. அவர்கள் எந்த அலங்காரம் செய்திருந்தார்கள் என்பதை அஹ்மதில் இடம்பெற்றுள்ள அறிவிப்புகள் தெளிவுபடுத்துகின்றன. 26166, 26167 ஆகிய எண்களில் அஹ்மதில் பதிவாகியுள்ள அறிவிப்புகளில் சுபைஆ (ரலி) அவர்கள் கையில் மருதாணி பூசியிருந்ததாகக் கூறப்பட்டுள்ளது. 

எனவே பெண்களின் அலங்காரப் பொருளாக உள்ள மருதாணியை ஆண்கள் பூசக்கூடாது. அதே நேரத்தில் பித்த வெடிப்பு போன்ற காரணங்களுக்காக மருந்தாக அதைப் பூசிக் கொள்வதையும் நரை முடியின் நிறத்தை மாற்றிக் கொள்வதற்காக அதைப் பூசிக் கொள்வதையும் இது கட்டுப்படுத்தாது. ஏனெனில் இதில் பெண்களுக்கு ஒப்பாக நடக்கும் தன்மை ஏதும் இல்லை.

நன்றி ஆன்லைன்பிஜே.

ஜும்ஆத் தொழுகையை விட உரை சுருக்கமாக இருக்க வேண்டுமா?




தொழுகை   ஜும்ஆத் தொழுகையை விட ஜும்ஆ உரை சுருக்கமாக இருக்க வேண்டும் என்று சில அறிஞர்கள் கூறியுள்ளனர். இவர்களைப் பின்தொடர்ந்து தற்காலத்தில் உள்ள சிலரும் இக்கருத்தை கூறிவருகின்றனர். இதற்கு இவர்கள் கீழ்கண்ட ஹதீஸை ஆதாரமாகக் கொள்கின்றனர். 

1437 حَدَّثَنِي سُرَيْجُ بْنُ يُونُسَ حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ عَبْدِ الْمَلِكِ بْنِ أَبْجَرَ عَنْ أَبِيهِ عَنْ وَاصِلِ بْنِ حَيَّانَ قَالَ قَالَ أَبُو وَائِلٍ خَطَبَنَا عَمَّارٌ فَأَوْجَزَ وَأَبْلَغَ فَلَمَّا نَزَلَ قُلْنَا يَا أَبَا الْيَقْظَانِ لَقَدْ أَبْلَغْتَ وَأَوْجَزْتَ فَلَوْ كُنْتَ تَنَفَّسْتَ فَقَالَ إِنِّي سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ إِنَّ طُولَ صَلَاةِ الرَّجُلِ وَقِصَرَ خُطْبَتِهِ مَئِنَّةٌ مِنْ فِقْهِهِ فَأَطِيلُوا الصَّلَاةَ وَاقْصُرُوا الْخُطْبَةَ وَإِنَّ مِنْ الْبَيَانِ سِحْرًا رواه مسلم 

எங்களுக்கு அம்மார் பின் யாசிர் (ரலி) அவர்கள் (ஒரு வெள்ளிக்கிழமை) சுருக்கமாகவும் செறிவுடனும் உரை நிகழ்த்தினார்கள். அவர்கள் (மேடையிரிலிருந்து) இறங்கியபோது, “”அபுல் யக்ளானே!  செறிவுடன் சுருக்கமாகப் பேசினீர்கள். இன்னும் சிறிது நேரம் பேசியிருந்தால் நன்றாயிருந்திருக்குமே?” என்று நாங்கள் கூறினோம். அதற்கு அவர்கள் “”அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் “ஒருவரின் தொழுகை நீளமாக இருப்பதும் உரை சுருக்கமாக இருப்பதும் அவரது மார்க்க அறிவிற்கு அடையாளம் ஆகும். ஆகவே, தொழுகையை நீட்டுங்கள். உரையைச் சுருக்குங்கள். சில சொற்பொழிவுகளில் கவர்ச்சி உள்ளது’ என்று கூறியதை நான் கேட்டுள்ளேன்” என்றார்கள். 
அறிவிப்பவர் : அபூவாயில் ஷகீக் பின் சலமா (ரஹ்) நூல் : முஸ்லிம் (1578) 

இந்த சம்பவத்தில் தொழுகையை நீட்டுவதும் உரையைச் சுருக்குவதும் ஒருவரது மார்க்க அறிவிற்கு அடையாளம் என்பதே நபி (ஸல்) அவர்களின் கூற்றாகும். இதை மேலலோட்டமாகப் பார்க்கும் போது தொழுகையை விட உரை சுருக்கமாக இருக்க வேண்டும் என்ற கருத்து சரி என்பது போல் தெரியலாம். ஆனால் இது தொடர்பாக வந்துள்ள ஹதீஸ்கள் அனைத்தையும் கவனத்தில் கொண்டு ஆராய்ந்தால் இந்த ஹதீஸ் இந்தக் கருத்தை தரவில்லை என்பதை சந்தேகமற அறியலாம். நபி (ஸல்) அவர்கள் நடத்திய ஜும்ஆவைப் பற்றி தெளிவாக விவரிக்கும் வகையில் ஹதீஸ்கள் உள்ளது. இவற்றை சிந்தித்துப் பார்த்தால்  அவர்கள் ஆற்றிய ஜும்ஆ உரை அவர்களின் ஜும்ஆத் தொழுகையை விட நீளமாக இருந்துள்ளதை அறியலாம். நபி (ஸல்) அவர்களின் ஜும்ஆ உரை. நபி (ஸல்) அவர்கள்  உரையை துவக்கும் போது குறிப்பிட்ட சில வாசகங்களை கூறுவது அவர்களின் வழக்கமாக இருந்துள்ளது. இதை பின்வரும் செய்தி தெளிவுபடுத்துகின்றது. 

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் உரை நிகழ்த்தும்போது, அவர்களின் கண்கள் சிவந்துவிடும்; குரல் உயர்ந்துவிடும்; கோபம் மிகுந்து விடும். எந்த அளவிற்கென்றால், எதிரிப் படையினர் தாக்குதல் தொடுக்கப்போவது குறித்து “எதிரிகள் காலையில் உங்கள் மீது தாக்குதல் தொடுக்கப்போகின்றனர்; மாலையில் உங்கள் மீது தாக்குதல் தொடுக்கப்போகின்றனர்’ என்று கூறி அவர்கள் எச்சரிக்கை விடுப்பவரைப் போன்றிருப்பார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் “”நானும் மறுமை நாளும் இதோ இவ்விரு விரல்களைப் போன்று (நெருக்கமாக) அனுப்பப்பெற்றுள்ளோம்” என்று கூறியவாறு தம்முடைய சுட்டு விரலையும் நடு விரலையும் இணைத்துக் காட்டுவார்கள். மேலும், “”அம்மா பஅத் (இறைவாழ்த்துக்குப் பின்!) உரைகளில் சிறந்தது அல்லாஹ்வின் வேதம் (குர்ஆன்) ஆகும். வழிகாட்டரில் சிறந்தது முஹம்மதின் வழிகாட்டலாகும். செயல்களில் தீயவை (மார்க்கத்தின் பெயரால்) புதிதாக உண்டாக்கப்படுபவை ஆகும். (மார்க்கத்தின் பெயரால் புதிதாக உருவாக்கப்படும்) ஒவ்வொரு புதுமையும் வழிகேடு ஆகும்” என்று கூறுவார்கள். 
அறிவிப்பவர் : ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலிரி) நூல் : முஸ்லிம் (1573) 

மேலும் நபி (ஸல்) அவர்கள் ஜும்ஆ உரையில் கஃப் அத்தியாயம் முழுவதையும் ஓதியுள்ளார்கள். இந்த அத்தியாயம் 45 வசனங்களைக் கொண்டுள்ளது. 

1440و حَدَّثَنِي عَبْدُ اللَّهِ بْنُ عَبْدِ الرَّحْمَنِ الدَّارِمِيُّ أَخْبَرَنَا يَحْيَى بْنُ حَسَّانَ حَدَّثَنَا سُلَيْمَانُ بْنُ بِلَالٍ عَنْ يَحْيَى بْنِ سَعِيدٍ عَنْ عَمْرَةَ بِنْتِ عَبْدِ الرَّحْمَنِ عَنْ أُخْتٍ لِعَمْرَةَ قَالَتْ أَخَذْتُ ق وَالْقُرْآنِ الْمَجِيدِ مِنْ فِي رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَوْمَ الْجُمُعَةِ وَهُوَ يَقْرَأُ بِهَا عَلَى الْمِنْبَرِ فِي كُلِّ جُمُعَةٍ رواه مسلم  

நான் வெள்ளிக்கிழமை அன்று “காஃப் வல்குர்ஆனில் மஜீத்’ எனும் (50ஆவது) அத்தியாயத்தை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் வாயிரிலிருந்து செவியுற்றேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஒவ்வொரு ஜுமுஆ (சொற்பொழி)விலும் இந்த அத்தியாயத்தை ஓதுவார்கள். 
அறிவிப்பவர் : அம்ரா பின்த் அப்திர் ரஹ்மான் (ரலி) அவர்களின் சகோதரி     நூல் : முஸ்லிம் (1580) 

நபி (ஸல்) அவர்கள் உரையில் வெறுமனே குர்ஆனை மட்டும் ஓதமாட்டார்கள். மாறாக குர்ஆன் வசனங்களை ஓதி அதில் உள்ள படிப்பினைகளை மக்களுக்கு விளக்குவார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் தொழுகை நடுத்தரமாக அமைந்திருந்தது  அவர்களுடைய சொற்பொழிவும் நடுத்தரமாக அமைந்திருந்தது.  (அவர்களின் சொற்பொழிவில்) குர்ஆன் வசனங்களை ஓதுவார்கள்.  மக்களுக்கு அறிவுரை செய்வார்கள். 
அறிவிப்பவர் : ஜாபிர் பின் சமுரா (ரலி) நூல் : அபூதாவுத் (928) 

இந்த ஹதீஸ்களை கவனிக்கும் போது நபி (ஸல்)  அவர்கள் குறைந்தது அரைமணி நேரமாவது ஜும்ஆ உரை ஆற்றிருப்பார்கள் என்பதை அறியலாம். 
இனி நபியவர்கள் நடத்திய ஜும்ஆத் தொழுகையின் அளவை அறிந்துகொள்வோம். 

நபி (ஸல்) அவர்களின் ஜும்ஆத் தொழுகை. 

நபி (ஸல்) அவர்கள் ஜும்ஆத் தொழுகையில் அல்ஜும்ஆ அத்தியாயத்தையும் முனாஃபிகூன் அத்தியாயத்தையும் ஓதியுள்ளார்கள். மற்றொரு முறை அல்அஃலா அத்தியாயத்தையும் அல்ஃகாஷியா அத்தியாயத்தையும் ஓதியுள்ளார்கள். 

நபி (ஸல்) அவர்கள் ஜும்ஆ தொழுகையில் “முதல் ரக்அத்தில் “அல்ஜுமுஆ’ அத்தியாயத்தையும் இரண்டாவது ரக்அத்தில் “இதா ஜாஅக்கல் முனாஃபிக்கூன்’ அத்தியாயத்தையும் ஓதினார்கள். 
அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி) நூல் : முஸ்லிம் (1591) 

அல்லாஹ்வின்  தூதர் (ஸல்) அவர்கள் இரு பெருநாள் தொழுகையிலும் ஜுமுஆவிலும் “சப்பி ஹிஸ்ம ரப்பிகல் அஃலா’ (87) மற்றும் “ஹல் அத்தாக்க ஹதீசுல் ஃகாஷியா’ (88) ஆகிய அத்தியாயங்களை ஓதுவார்கள். 
அறிவிப்பவர் : நுஅமான் பின் பஷீர் (ரலிரி) நூல் : முஸ்லிம் (1592) 

எனவே நபி (ஸல்) அவர்கள் ஆற்றிய உரையின் அளவையும் அவர்கள் நடத்திய தொழுகையின் அளவையும் ஒப்பிடுகையில் தொழுகையை விட உரை நீளமாக அமைந்திருப்பதை அறியலாம். ஜமாஅத் தொழுகையை நீட்டுவது கூடாது. மேலும் தொழுகையை நீட்டுவதும் உரையைச் சுருக்குவதும் ஒருவரது மார்க்க அறிவிற்கு அடையாளம் என்ற ஹதீஸில் கூறப்படும் தொழுகை என்பது ஜும்ஆத் தொழுகை உட்பட கூட்டாக நிறைவேற்றப்படும் கடமையான எந்தத் தொழுகையையும் குறிக்காது. மாறாக ஒரு மனிதர் தனியாகத் தொழுது கொள்ளும் உபரியான தொழுகையை குறிக்கின்றது. ஏனென்றால் ஜமாஅத் தொழுகையை நீட்டக்கூடாது என்றும் அதை சுருக்கமாகவே தொழவைக்க வேண்டும் எனவும் நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். 

706 حَدَّثَنَا أَبُو مَعْمَرٍ قَالَ حَدَّثَنَا عَبْدُ الْوَارِثِ قَالَ حَدَّثَنَا عَبْدُ الْعَزِيزِ عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ قَالَ كَانَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يُوجِزُ الصَّلَاةَ وَيُكْمِلُهَا رواه البخاري 

நபி (ஸல்) அவர்கள் தொழுகையைச் சுருக்கமாகவும் (எந்த ஒன்றும் விடுபடாமல்) பூரணமாகவும் தொழுவிப்பவர்களாக இருந்தார்கள். அறிவிப்பவர் : அனஸ் (ரலி) அவர்கள். நூல் : புகாரி (706) 

7159 حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ مُقَاتِلٍ أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ أَخْبَرَنَا إِسْمَاعِيلُ بْنُ أَبِي خَالِدٍ عَنْ قَيْسِ بْنِ أَبِي حَازِمٍ عَنْ أَبِي مَسْعُودٍ الْأَنْصَارِيِّ قَالَ جَاءَ رَجُلٌ إِلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ يَا رَسُولَ اللَّهِ إِنِّي وَاللَّهِ لَأَتَأَخَّرُ عَنْ صَلَاةِ الْغَدَاةِ مِنْ أَجْلِ فُلَانٍ مِمَّا يُطِيلُ بِنَا فِيهَا قَالَ فَمَا رَأَيْتُ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَطُّ أَشَدَّ غَضَبًا فِي مَوْعِظَةٍ مِنْهُ يَوْمَئِذٍ ثُمَّ قَالَ يَا أَيُّهَا النَّاسُ إِنَّ مِنْكُمْ مُنَفِّرِينَ فَأَيُّكُمْ مَا صَلَّى بِالنَّاسِ فَلْيُوجِزْ فَإِنَّ فِيهِمْ الْكَبِيرَ وَالضَّعِيفَ وَذَا الْحَاجَةِ رواه البخاري 

ஒரு மனிதர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்து, “அல்லாஹ்வின் தூதரே! அல்லாஹ்வின் மீதாணையாக! இன்ன மனிதர் தொழுகையை எங்களுக்கு நீண்ட நேரம் தொழுவிப்பதால் அதிகாலை(க் கூட்டு)த் தொழுகைக்கு வராமல் நான் தாமதித்துவிடுகிறேன்” என்று சொன்னார். நபி (ஸல்) அவர்கள் அன்று ஆற்றிய உரையின் போது கோபப்பட்டதைவிடக் கடுமையாகக் கோபப்பட்டு நான் ஒருபோதும் கண்டதில்லை. பிறகு அவர்கள், “”மக்களே! (வணக்க வழிபாடுகளில்) வெறுப்பூட்டுபவர்களும் உங்களில் உள்ளனர். ஆகவே, உங்களில் யார் மக்களுக்குத் தொழுவித்தாலும் அவர் சுருக்கமாகத் தொழுவிக்கட்டும். ஏனெனில், மக்களில் முதியோரும் பலவீனரும் அலுவல் உடையோரும் உள்ளனர்” என்று சொன்னார்கள். 
அறிவிப்பவர் : அபூமஸ்ஊத் அல்அன்சாரி (ரலி) நூல் : புகாரி (7159) 

நபி (ஸல்) அவர்களின் ஜும்ஆத் தொழுகை நீட்டமாக இல்லாமல் நடுத்தரமான அளவில் இருந்துள்ளது. 

1433 حَدَّثَنَا حَسَنُ بْنُ الرَّبِيعِ وَأَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ قَالَا حَدَّثَنَا أَبُو الْأَحْوَصِ عَنْ سِمَاكٍ عَنْ جَابِرِ بْنِ سَمُرَةَ قَالَ كُنْتُ أُصَلِّي مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَكَانَتْ صَلَاتُهُ قَصْدًا وَخُطْبَتُهُ قَصْدًا رواه مسلم 

நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் தொழுதுவந்தேன். அவர்களது தொழுகையும் உரையும் (நீண்டதாகவும் இல்லாமல் மிகவும் சுருக்கமானதாகவும் இல்லாமல்) நடுத்தரமாகவே அமைந்திருந்தன. அறிவிப்பவர் : ஜாபிர் பின் சமுரா (ரலி) நூல் : முஸ்லிம் (1571) 

குறித்த ஹதீஸில் தொழுகையை நீட்டுமாறு கூறப்படுவதால் இது கூட்டாக நிறைவேற்றப்படும் ஜும்ஆத் தொழுகையை குறிக்காது. எனவே இதை வைத்து ஜும்ஆத் தொழுகை உரையை விட நீட்டமாக இருக்க வேண்டும் என்று வாதிட முடியாது. ஹதீஸின் சரியான விளக்கம். 

“அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் “ஒருவரின் தொழுகை நீளமாக இருப்பதும் உரை சுருக்கமாக இருப்பதும் அவரது மார்க்க அறிவிற்கு அடையாளம் ஆகும். ஆகவே, தொழுகையை நீட்டுங்கள். உரையைச் சுருக்குங்கள். சில சொற்பொழிவுகளில் கவர்ச்சி உள்ளது’ என்று கூறியதை நான் கேட்டுள்ளேன். 
அறிவிப்பவர் : அம்மார் பின் யாசிர் (ரலி) நூல் : முஸ்லிம் (1578) 

ஒருவர் தனியாகத் தொழும் தொழுகையை அவர் விருப்பம் போல் எவ்வளவு வேண்டுமானாலும் நீட்டிக்கொள்ளலாம். இவர் தொழுகையை எந்த அளவுக்கு நீட்டித் தொழுகின்றாரோ அந்த அளவுக்கு நன்மைகள் அதிகமாக கிடைக்கின்றது. தனியாகத் தொழும்போது தொழுகையை நீட்டுவதால் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படுவதில்லை. எனவே இதை மார்க்கம் ஆர்வமூட்டுகின்றது. உரையைப் பொறுத்தவரை அது தனி நபருடன் சம்பந்தப்பட்ட விஷயமல்ல. மாறாக உரையாற்றுபவர் உரையை கேட்பவர்கள் என பலர் இதில் சம்பந்தப்படுகின்றனர். எனவே மக்கள் சடைவடைந்து விடாத வகையில் உரை இருக்க வேண்டும். உரையாற்றுபவர் அரை மணி நேரத்தில் கூற வேண்டிய விஷயத்துக்கு அரை மணி நேரம் எடுத்துக்கொண்டால் அதில் தவறில்லை. ஆனால் பத்து நிமிடத்தில் பேச வேண்டிய விஷயத்துக்கு அரை மணி நேரம் எடுத்தால் இதில் தான் நேரம் வீணாகின்றது. மக்களுக்கும் சடைவு ஏற்படுகின்றது. ஆகையால் ஒரு கருத்தை அதற்குரிய நேரத்திற்குள் முழுமையாக கூறிவிட்டால் அவர் சுருக்கமாக கூறியவராவார். அறிவாளிகளே இவ்வாறு கூறுவார்கள். ஒரு சிறிய விஷயத்துக்காக அதிக நேரம் எடுத்து வலவலவென நீட்டுவது அறிவுடையவர்களின் செயல் அல்ல. எனவே உரையை சுருக்குவதென்றால் தேவையில்லாமல் நீட்டக்கூடாது என்றும் தொழுகையை நீட்டுவதென்றால் தனியே தொழும் போது நீட்டிக்கொள்ளலாம் என்றும் புரிந்துகொள்வதே சரியானது. 
நன்றி : (SLTJ) அழைப்பு பத்திரிகை.