உலகில் தோன்றிய அனைத்து தீர்க்கதரிசிகளும் இஸ்லாம் கூறும்
ஓரிறைக் கொள்கையைத்தான் மக்களுக்கு போதனை செய்தார்கள். உலகில் முதலில் தோன்றிய கொள்கையும் மார்க்கமும்
இஸ்லாம் மட்டுமே. என்றாலும் இந்த வாதத்தை மறுக்கும் கிருத்தவ போதகர்கள் அறியாத
பாமரர்களை ஏமாற்றுவதற்காக ஒரு வரட்டு வாத்தத்தை தயார் செய்து வைத்துள்ளனர். அந்த
வாத்தத்தைப் பற்றி பார்ப்போம்.
கிருத்தவர்களின் வாதம்:
உலகில் தோன்றிய முதல் மதம்
கிருத்தவம் தான். இஸ்லாமியர்கள் சொல்வதைப்போல இஸ்லாம் முதலில் தோன்றிய
மார்க்கமல்ல. ஆப்ரஹாம் (இப்ராஹீம் (அலை)) என்ற தீர்க்கதரிசியின் ஒரு சந்ததியான
இஸ்மவேல் (இஸ்மாயில் (அலை)) என்பவர் மூலமாகத்தான் இஸ்லாம் என்ற மார்க்கமே
உருவானது. அவருடைய சந்ததிகள் தான் இஸ்லாமியர்கள். அதற்கு முன்னாள் வாழ்ந்த ஏனைய
தீர்க்கதரிசிகள் கிருத்துவத்தை தான் போதித்தார்கள். இதுதான் இவர்களின் வாதம். இந்த
வாதம் சில கிருத்துவர்களுக்கே தெரியாமலும் கூட இருக்கலாம். ஆழமாக தோண்டும்போது
வெடிக்கும் நீர்வீழ்ச்சிகள் போன்றதுதான் இவைகள்.
பதில்:
உண்மையில் இவர்கள் கூறுவது போன்று
தான் இஸ்லாம் உருவானதா என்றால், இப்படி அவர்கள் கூறுவதற்கு எந்த வகையான
சான்றுகளும் அவர்களிடம் இல்லை என்பதே உண்மை. இஸ்மாயில் (அலை) அவர்களுடைய
சந்ததியில் தான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வருகிறார்கள் என்பதை நாம்
மறுக்கவில்லை. ஆனால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எடுத்துரைத்த மார்க்கம்
அன்றைக்குத்தான் ஆரம்பமாகிறது என்பது தவறான புகுத்தல் ஆகும்.
நபிகள் நாயகம் (ஸல்)
அவர்கள் ஏற்கனவே இருந்த சத்திய கொள்கையை மீட்டு நினைவூட்டவே வந்தார்களே அன்றி, புதுமையான
கொள்கையாக இஸ்லாத்தை கூற வரவில்லை. அதற்கு மிகப்பெரிய சான்று நபிகள் நாயகத்தின்
தந்தை.
அதாவது, நபிகள் நாயகம் (ஸல்)
அவர்கள் இஸ்லாத்தை பற்றி எடுத்துரைக்க ஆரம்பித்த காலகட்டம் அவர்களது 40 –வது வயதாகும்.
அனஸ் பின் மாலிக்
(ரலி) அவர்கள் கூறியதாவது:
நாற்பதாவது வயதின்
தொடக்கத்தில் அவர்களை அல்லாஹ் தன் தூதராக அனுப்பினான்.
நூல் : புகாரி 4685.
நபிகளார் (ஸல்) அவர்கள் பிறப்பதற்கு முன்பே நபியின்
தந்தை இறந்து விட்டார். இதை நாம் கூறுவதற்கு காரணம், நபியின் தந்தை பெயர் “அப்துல்லாஹ்”!.
அப்துல்லாஹ் என்ற அரபிப் பெயருக்கு அல்லாஹ்வின் அடிமை என்று அர்த்தம். நன்றாக
சிந்தித்து பாருங்கள்! நபியின் பிறப்பிற்கு முன்னரே இறந்துவிட்ட அவரது தந்தையின்
பெயர் அல்லாஹ்வின் அடிமை என்று உள்ளது. அப்படியென்றால் நபிகள் நாயகம் (ஸல்)
அவர்கள் இஸ்லாம் பற்றியும், அல்லாஹ்வைப் பற்றியும் அறிமுகம் செய்வதற்கு முன்னரே,
அந்த சமூக மக்கள் அல்லாஹ்வை நம்பித்தான் வாழ்ந்துள்ளார்கள் என்று தெளிவாக
விளங்குகிறது.
என்றாலும் அந்த சமூகம் ஏராளமான வழிகேடுகளிலும்
மானக்கேடான விஷயங்களிலும் தொடராக ஈடுபட்ட காரணத்தினால் தான், அந்த சமூகத்தை
மீண்டும் சீர்படுத்த நபிகள் நாயகம் இறைவனால் தூதராக தேர்வு செய்யப்பட்டார்கள்
என்பதை புரிந்து கொள்ள வேண்டும். இவர்களின் வரட்டு வாதம் வாயடைத்துப் போக இதுவும்
ஒரு முக்கியமான சான்றாகும்.
மேலும், கிருத்தவர்கள் அதிகம் கண்டுகொள்ளாத பழைய
ஏற்பாடு நெடிகிழும் நாம் தேடிப்பார்த்தால், அதில் கூறப்படுகின்ற அனைத்து
தீர்க்கதரிசிகளும் ஒரே இறைவனான கர்த்தரையே வணங்க வேண்டும், அவருக்கு உருவங்களை
சமைக்க கூடாது, அவருக்கு இணையாக வானிலோ, பூமியிலோ, நீரிலோ எதையும் ஒப்பிடக் கூடாது
என்றே மக்களுக்கு எத்தி வைத்துள்ளனர் என்பதை நாம் கண்டுகொள்ள முடியும்.
திரித்துவக் கொள்கையோ, அல்லது தற்போது வாழ்ந்து கொண்டிருக்கும் பலவகை வேறுபாடுகள்
கொண்ட கிருத்துவக் கொள்கையோ பழைய ஏற்பாட்டில் கூறப்படவில்லை. இவற்றை அடித்து
நொறுக்கும் ஓரிறைக் கொள்கையே கூறப்பட்டுள்ளது. இதே கொள்கையைத்தான் இயேசுவாகிய ஈஷா
(அலை) அவர்களும் சொன்னார்கள். அவர்களைத் தொடர்ந்து அனுப்பப்பட்ட நபிகள் நாயகம்
(ஸல்) அவர்களும் சொன்னார்கள்.
ஆனால் கிருத்துவம் என்ற கொள்கைதான் இயேசுவுக்கு
பின்னால், இயேசுவை அடையாளப்படுத்தி பவுல் என்ற நபரால் உருவாக்கப்பட்ட மதம் ஆகும். இந்த
மதத்திற்கும் இயேசுவுக்கும் எந்த சம்மந்தமும் கிடையாது. இதை நாம் ஏதோ இவர்களைப்
போன்று சான்றுகள் இல்லாமல் முன்வைக்கவில்லை. இவர்கள் எதை வேதமென்று நம்பியுள்ளார்களோ
அதிலிருந்தே சான்றுகளை சமர்ப்பிக்கிறோம்.
இயேசுவின் கொள்கைக்கும் அவரைப்
பின்பற்றியவர்களுக்கும் எதிரியாக இருந்து கொண்டு அவர்களைத் துன்புறுத்திய பவுல்
என்பவர், பின்னாளில் தான் மனம் திரும்பியதாகவும் தனக்கு கடவுளிடமிருந்து செய்தி
வந்ததாகவும் கூறி அதனடிப்படையில் ஒரு கொள்கையைப் பிரச்சாரம் செய்தவர். (அப்போஸ்தலர்
9: 1-9).
கடவுளிடமிருந்து செய்தி வந்தது என்பதும் பவுல்
தன்னைப் பற்றித் தரும் சுய அறிக்கை மட்டுமே! அவரது பிரச்சாரங்கள் நியாயப்
பிரமாணங்களை மறுக்கும் விதமாகவும் இயேசுவின் நடைமுறைக்கு எதிராகவும் அமைந்துள்ளது!
கடவுளுக்காகத் தான் பொய் சொல்வதாகவும், தூய ஆவியால் அவர் தூண்டப்படுகிறார் என்பதற்கும் அவரது
மனச்சான்று மட்டுமே போதும் என்றும் அவர் கூறியிருக்கிறார்! (உரோமையர் 3:7,
9:1).
பவுல் உருவாக்கிய சித்தாந்தத்தை அடிப்படையாகக் கொண்டு
ஒரு மதம் பிரச்சாரம் செய்யப்பட்டது! அது பின்னாளில் கிறிஸ்தவம் என்றும் அதைப்
பின்பற்றியவர்கள் கிறிஸ்தவர்கள் என்றும் அழைக்கப்பட்டனர் என்பதே உண்மை!
இயேசுவின் பெயராகிய கிறிஸ்து என்ற வார்த்தையுடன்
சேர்த்து பிற்காலத்தில் உருவாக்கப்பட்ட ஒரு மதமே
கிறிஸ்தவம் என்பதை பைபிளின் புதிய ஏற்பாடே ஒப்புக்கொள்கிறது!
அந்தியோக்கியாவில்தான் முதல் முறையாகச்
சீடர்கள் கிறிஸ்தவர்கள் என்னும் பெயரைப் பெற்றார்கள்.
(திருத்தூதர் பணிகள் 11 : 26).
இப்போது நமக்கு விளங்கும்
எது ஆதியில் தோன்றிய மார்க்கம், எது பாதியில் புகுத்தப்பட்ட மதம் என்று.
மேலும் இஸ்மவேலிளிருந்து
பிரிந்ததுதான் இஸ்லாம் என்ற இவர்களின் வாதத்தை பைபிளே உடைக்கிறது பாருங்கள்!
யோவான்
14 அதிகாரம்
16. நான் பிதாவை வேண்டிக்கொள்வேன், அப்பொழுது என்றென்றைக்கும் உங்களுடனேகூட
இருக்கும்படிக்குச் சத்திய ஆவியாகிய வேறொரு தேற்றவாளனை அவர் உங்களுக்குத்
தந்தருளுவார்.
17. உலகம்
அந்தச் சத்திய ஆவியானவரைக் காணாமலும் அறியாமலும் இருக்கிறபடியால் அவரைப்
பெற்றுக்கொள்ளமாட்டாது; அவர் உங்களுடனே வாசம்பண்ணி உங்களுக்குள்ளே
இருப்பதால், நீங்கள்
அவரை அறிவீர்கள்.
26. என் நாமத்தினாலே பிதா அனுப்பப்போகிற பரிசுத்த ஆவியாகிய தேற்றவாளனே
எல்லாவற்றையும் உங்களுக்குப் போதித்து, நான் உங்களுக்குச் சொன்ன எல்லாவற்றையும்
உங்களுக்கு நினைப்பூட்டுவார்.
இந்த
வசனங்கள் கூறும் அந்த தேற்றவாளன் யார்???
இயேசு
சொன்ன ஓரிறைக் கொள்கையை மக்களுக்கு போதித்து, இயேசு இறைவனால் அனுப்பப்பட்ட,
நேசிக்கப்பட்ட ஒரு இறைத்தூதர் என்பதை அனைவரும் நம்பிக்கை கொள்ள வேண்டும். அவ்வாறு
நம்பாதவர் முஸ்லிமாக முடியாது, ஒரே இறைவனாகிய கர்த்தரை நம்பிக்கை கொண்டவராக
முடியாது என்று உலகிற்கு போதனை செய்த இறைத்தூதர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தான்.
அவர் தான் இயேசு சொன்ன அந்த தேற்றவாளன் என்று நாம் சொல்கிறோம். இதற்கு இன்னும்
கூடுதலான தகவலையும் தருகிறோம்.
இந்த
வசனங்களில் இடம்பெறும் தேற்றவாளன் என்ற சொல் கிரேக்க மொழியில் "Peryklytos" பெரிக்லிடோஸ் என்று இடம்பெறுகிறது. தமிழ் மொழிப்பெயர்ப்பு மற்றும்
ஆங்கில மொழிப்பெயர்ப்பு பைபிளைக் காட்டிலும் கிரேக்க மொழியில் உள்ள பைபிள் தான் முதன்மைப்
படுத்தப்படும் என்பது கிருத்துவர்களுக்கு தெரியும். காரணம் அதுதான் மூல
மொழியிலிருந்து மொழிப்பெயர்க்கப்பட்டதாக கிருத்துவர்களால் கூறப்படும்.
கிரேக்க
மொழி பைபிளில் இடம்பெறும் "Peryklytos" பெரிக்லிடோஸ் என்ற வார்த்தைக்கு ஆங்கில மொழிப்பெயர்ப்பு கொடுத்தால் "Admirable one" (புகழுக்குரியவர்) என்ற அர்த்தம் வரும்.
அதே "Peryklytos" என்ற வார்த்தையை அரபியில் மொழிப்பெயர்த்தால் அஹ்மது என்ற சொல் வரும்.
இதற்கும் அதே அர்த்தம்தான், அதுமட்டுமல்லாமல் இது நபிகள் நாயகத்தின் மற்றுமொரு
பெயரும் கூட!!!
அல்லாஹ் திருமறைக்குர்ஆனில் இயேசுவாகிய ஈஷா
(அலை) கூறியதாக கூறுகிறான்:
"இஸ்ராயீலின் மக்களே! நான்
உங்களுக்கு (அனுப்பப்பட்ட) அல்லாஹ்வின் தூதராவேன். எனக்கு முன் சென்ற தவ்ராத்தை உண்மைப்படுத்துபவன். எனக்குப் பின்னர் வரவுள்ள அஹ்மத் என்ற பெயருடைய
தூதரைப் பற்றி நற்செய்தி கூறுபவன்'' என்று மர்யமின் மகன் ஈஸா
கூறியதை நினைவூட்டுவீராக! அவர்களிடம் தெளிவான சான்றுகளைக் கொண்டு
வந்தபோது "இது தெளிவான சூனியம்'' எனக் கூறினர்.
திருக்குர்ஆன் (61:6).
ஆகவே இயேசுவால்
முன்னறிப்பு செய்யப்பட்ட அந்த தேற்றவாளன் அஹ்மது எனப்படும் நபிகள் நாயகம் (ஸல்)
அவர்கள் தான் என்பது மிகவும் உறுதியாகிறது. இயேசு முன்னறிவிப்பு செய்த தேற்றவாளன்
இயேசு எத்திவைத்த மார்க்கத்தையே மக்களுக்கு போதிப்பார். அதற்கு மாற்றமாக
ஒருக்காலும் போதிக்க மாட்டார்.
காரணம், இயேசுவே
கூறுகிறார், நான் உங்களுக்குச் சொன்ன
எல்லாவற்றையும் உங்களுக்கு நினைப்பூட்டுவார்....
அப்படியென்றால், நபிகள்
நாயகம் போதித்த மார்க்கம் இஸ்லாம். இயேசு போதித்த மார்க்கமும் இஸ்லாம் தான் என்பது
விளங்குகிறதா????
கிருத்தவம் என்பது
அனைத்து தீர்க்க தரிசிகளும் போதித்த மார்க்கமான இஸ்லாமிய கொள்கைக்கு எதிரியான பவுலால்
உண்டாக்கப்பட்ட புதிய கொள்கை, அதற்கும் இயேசுவுக்கும் சம்மந்தமில்லை என்று
விளங்குகிறதா???
இதற்குமேல் என்ன
சொல்ல என் அன்பு பாமர கிருத்துவ நண்பர்களே?????
சிந்தித்து தெளிவு
பெறுங்கள்....! நேரிய பாதையை நோக்கி வாருங்கள்....!