தினம் ஒரு நபிமொழி


இது அனுமதிக்கப்பட்டது; இது தடுக்கப்பட்டது என்று உங்கள் நாவுகள் வர்ணிக்கும் பொய்யை அல்லாஹ்வின் மீது இட்டுக்கட்டிக் கூறாதீர்கள்! அல்லாஹ்வின் மீது பொய்யை இட்டுக்கட்டியோர் வெற்றி பெறமாட்டார்கள். (அல் குர்ஆன் 16:116).

Wednesday, January 27, 2016

சூரா பகரா பற்றிய பலவீனமான செய்தி - 1



من قرأ سورة البقرة؛ توج بتاج في الجنة


யார் ஒருவர் சூரத்துல் பகராவை ஓதுகின்றாரோ அவருக்கு சுவனத்தில் கிரீடம் அணிவிக்கப்படும். இந்த செய்தி பைஹகீ இமாமின் ஷுஅபுல் ஈமான்எனும் புத்தகத்தில் பதியப்பட்டுள்ளது. இதன் அறிவிப்பாளர் தொடரில் வரும் ‘முஹம்மதிப்னுல் ளவ்ஃ’ என்பவர் பொய்யன் என்று விமர்சனம் செய்யப்பட்டுள்ளார். மேலும் முஹ்ம்மதிப்னு மஹ்தீ என்பவர் நிரகரிக்கப்பட்ட செய்திகளை அறிவிக்கும் மிகப் பலவீனமான நபர் என்று விமர்சிக்கப்பட்டுள்ளார். (ஸில்ஸிலதுல் லஈபா)

ஆகவே இந்த செய்தி பலவீனமான செய்தியாகும்!

Saturday, January 16, 2016

மத வெறியன் உமா சங்கருக்கு பதில் - தொடர் 3



Pon Jesly Engineering College - ல் மாணவர்களுக்காக நடத்தப்பட்ட கேள்வி பதில் நிகழ்ச்சியில், மாணவர்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதில் அளிக்கும் விதமாக சதா இஸ்லாத்தை தொடர்பு படுத்தியே அவதூறுகளை அள்ளி வீசிய மட சாம்பிராணி  உமா சங்கருக்கு நாம் தொடராக பதில் அளித்து வருகிறோம்.

இந்த தொடரில், உமா சங்கர் குறிப்பிட்ட ஈராக்கில் ஜிஹாதிஸ்துகள் வெளியிட்ட ஃபத்வாவைப் பற்றி அலசுவோம். தெளிவாக சொல்வதென்றால் "Genital Mutilation Of Women" பெண்களின் மறை உறுப்புத் துண்டை வெட்டி எடுத்தல் (கத்னா செய்தல்) என்பதை ஈராக்கை சார்ந்த ஒரு சாரார் மார்க்க சட்டமாக வெளியிட்டு அமல்படுத்திக் கொண்டிருக்கின்றனர். இது மார்க்கத்தை முன்வைத்து செயல்படுத்தப்படுகிறது. இது கொடுமையில்லையா? இப்படி ஒரு மார்க்கம் கட்டளையிடுவது தகுந்ததா? இப்படி கூறும் மார்க்கத்தை நாம் பின்பற்றுவதா? என்பதுதான் இந்த மூடனின் வாதம். விவரமறியா இஸ்லாமிய பெயர்தாங்கிகளும் இதுபோன்ற அர்த்தமற்ற வாதங்களுக்கு எந்த எதிர்ப்பும் கூறாமல் அந்த சபையில் அமைதி காத்து விட்டனர். 

சரி, வைக்கப்பட்ட வாதத்திற்கு வருவோம்! இஸ்லாமிய ஜிஹாதிஸ்துகள் என்போர் யார் என்று உலகில் வாழும் இஸ்லாமியர்களான எங்களுக்கே தெரியாது. காரணம் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டிய அளவிற்கு அவர்கள் ஒன்றும் இறைவனால் அனுப்பப்பட்ட தூதர்கள் கிடையாது. இஸ்லாமிய மார்க்கத்தின் அடிப்படையே இறைவனின் வேதமான திருமறைக்குர்ஆனும், அவனால் நபியாக அனுப்பப்பட்ட இறுதித் தூதர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் வழிகாட்டுதலும் மட்டும் தான். இவை அல்லாத எந்தவொரு வழிகாட்டலும் மார்க்கத்தின் பெயரால் கூறப்பட்டால் அவை தெளிவான வழிகேடு ஆகும். அதை நாம் பின்பற்றக்கூடாது. இதுதான் இஸ்லாத்தின் கொள்கை. 

பெண்கள் கத்னா செய்து கொள்ளல் என்ற குழப்பம் ஈராக்கில் மட்டுமல்ல, இந்தியாவிலும் சில பகுதிகளில் வழிகேடர்களால் சொல்லப்படுகின்றன. ஈராக்கில் உள்ளவர்கள் மட்டுமல்ல, உலகிலுள்ள எவர் இஸ்லாமியக் கொள்கை சம்மந்தமாக சொன்னாலும், அது நாம் மேலே சுட்டிக்காட்டியுள்ள இரண்டு அடிப்படை அம்சங்களில் இருந்து தான் வர வேண்டும். அப்படி இல்லாமல் தன்னிச்சையாக தானே ஒன்றை உருவாக்கி அதை இஸ்லாத்தோடு ஒருவர் தொடர்பு படுத்தினால் அதை நாம் ஏற்றுக் கொள்ள மாட்டோம், எதிர்ப்போம். காரணம் அன்று முதல் இன்று வரை எந்தவொரு மாற்றமும் இல்லாமல் இறைவனால் பாதுகாக்கப்படும் தூய்மையான வேதம் திருக்குர்ஆனே எங்களது வேதம்! அதில் புதிதாக ஒன்றை செருகவோ நீக்கவோ முடியாது. கண்டவர்களும் புகுத்திவிட்டு செல்ல, சூழலுக்கு ஏற்ப நீக்கல் செருகல் செய்யப்படும் மூல மொழி அழிந்துபோன பைபிளல்ல எங்கள் வேதம்.  

இந்த அடிப்படையில் பெண்கள் கத்னா செய்தல் என்பது இஸ்லாம் கூறாத ஒரு நடைமுறையாகும். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்தில் வாழ்ந்த எந்த ஒரு பெண்ணும் அவ்வாறு செய்யவும் இல்லை. தமிழக இஸ்லாமியர்களால் இந்த செயல் எதிர்க்கப்படுகிறது எனபதும் குறிப்பிடத்தக்கது. 

எங்கோ ஒரு இஸ்லாம் விளங்கா மடையன் வெளியிட்ட ஃபத்வாவை படித்து விட்டு ஊழையிடும் உமா சங்கர், இயன்றால் இஸ்லாத்தின் மூல ஆதாரங்களில் இருந்து இதை எடுத்துக் காட்டி நிரூபிக்கட்டும்.

அடுத்ததாக தர்க்க ரீதியான பதிலுக்கு வருவோம். இஸ்லாத்தை சார்ந்த ஒரு பகுதியினர் ஒன்றை இஸ்லாம் என்று கூறி செய்து விட்டாலே அது இஸ்லாத்தில் உள்ளதுதான் என்று ஒருவன் கூறினால் அது மடத்தனத்திலும் மடத்தனமாகும். உதாரணத்திற்கு நாம் கிருஸ்துவத்தை பற்றி பேசுகிறோம் என்றால் அதற்கு பைபிளைத் தான் ஆதாரமாக கொண்டு பேச வேண்டும். அது அல்லாமல் தானாக ஒன்றை பிரச்சாரம் செய்து கொண்டு இது கிறிஸ்த்துவத்தில் உள்ளதுதான் என்றால் அது மடமையாகும். 

இன்னும் தெளிவாக விளங்க, அமெரிக்க கிருத்துவ பெண்கள் பெரும்பாலும் தமது தொப்புல்களிலும், தமது மார்புகளிலும், தமது மறை உறுப்புகளிலும் வளையம் பதித்து கொள்ளும் பழக்கம் உடையவர்கள். இந்த செயலை கிருத்தவம் தான் சொல்கிறது என்று அந்த கிருத்தவ பெண்கள் சொன்னால், இதை ஏனைய கிருத்தவர்கள் எப்படி அணுகுவீர்கள்? கிருத்தவத்தவக் கூட்டம் சொன்னாலே அது உணமையான கருத்துதான் என்பீர்களா? அல்லது உண்மை கிறித்தவக் கோட்பாடோடு ஒப்பிட்டு பார்ப்பீர்களா?

இதே நிலைப்பாட்டைத்தான் இஸ்லாத்தோடும் ஒப்பிட்டு பேச வேண்டும். சில கிருத்துவ சபை, பைபிளில் உள்ளதாக சொல்லி ஆணும் ஆணும் திருமணம் செய்வதை அனுமதிக்கிறது. மேலை நாடுகளில் இந்த கேடுகெட்ட செயல் பரவ கிருத்தவ தேவாலயங்களே பெரிதும் காரணமாக திகழ்கின்றன. இந்த கேடுகெட்ட செயலும் கிருத்துவ மதத்தின் பெயரால்தான் பரப்பப்படுகின்றன. 



இது உண்மையில் பைபிளில் கூறப்பட்டுள்ளதா இல்லையா என்பதை வெறு பதிவில் பார்ப்போம். என்றாலும் நாம் கேட்க விரும்புவது, இதுபோன்று மதத்தின் பெயரால் எவன் எதை பரப்பினாலும் அது உண்மைதான் என்று ஏற்றுக் கொள்வது அறிவுடைமையா??? அல்லது அதுபற்றி அந்த மதத்தின் மூல அடிப்படைகளில் ஆய்வு செய்து உண்மையை அறிவது அறிவுடைமையா??? 

இஸ்லாத்தின் மீதுள்ள கால்புணர்வில் ஏதோ ஒரு பகுதி மக்கள் செய்யும் மடத்தனத்தை இஸ்லாத்தோடு தொடர்பு படுத்தி விமர்சிக்கும் விஞ்ஞானி உமா சங்கரே, ஓரினச்சேர்க்கையை கிருத்துவம் தான் சொல்கிறது என்று சில கிருத்துவ பாதிரிகள் கூறும் கருத்தையும் ஏற்றுக் கொள்ளுங்கள்...! உங்கள் சபைகளில் இதை மக்களுக்கு ஆர்வப்படுத்துங்கள்...! செய்வீர்களா??? அதை எப்படி கிருத்துவத்தோடு தொடர்பு படுத்த முடியும் என்று சொல்வீர்கள் என்றால், இதே நிலைப்பாட்டை அனைத்து மதத்திற்கும் கொடுத்து விட்டு மூடிக்கொள்ளும் உமது திருவாயை.

அன்புள்ள சகோதரர்களே சகோதரிகளே! நான் வைத்திருக்கும் இந்த பதில் வாதத்தைப் படிக்கும் நபர்கள் நிச்சயம் எதார்த்தத்தை புரிந்து கொள்வார்கள் என்று நம்புகிறேன், உமா சங்கர் தனது மதத்தை மக்களுக்கு மேன்மையாக காட்டுவதற்காக, கைகளில் கிடைக்கும் ஆதாரமற்ற தகவல்களை எல்லாம் சொல்லி இன்னபிற மதங்களை கொச்சைப்படுத்தும் ஒரு கள்ளக்கிருத்து ஆவார். இன்னும் இதுபோன்று எவர் தவறாக விமர்சிப்பது நமது காதுகளுக்கு எட்டினாலும் அவர்களுக்கு இறைவனின் அருளால் சாட்டையடி(பதில்)கள் காத்துக் கொண்டிருக்கின்றன என்பதை தெரியப்படுத்தி இந்த பதில் பதிவை மூடுகிறோம்....!

என் அன்பு இஸ்லாமிய சகோதரிகளே!!!



என் அன்பு இஸ்லாமிய சகோதரிகளே!!!
நீங்கள் அணிகின்ற பல இறுக்கமான ஃபர்தாக்கள்...
(சொல்வதற்கு தயக்கப்படுகிறேன்)
உங்களின் உள்ளாடைகளை வெளிப்படுத்திக் காட்டுகிறது.
இதை அறிந்து தான் நீங்கள் உபயோகிக்கிறீர்களா???
ஒழுக்க மாண்புகளை உலகிற்கு கற்றுத் தரும் ஆடையல்லவா ஃபர்தா என்பது. தோளோடு இணைந்திருக்கும் அல்லாஹ்வின் சட்டமல்லவா ஃபர்தா என்பது.
அற்ப உலகில் சில நாட்கள் அனுபவிக்கும் அற்ப அழிந்து போகும் ஆசைகளுக்காக, 
அல்லாஹ்வின் சட்டத்தை இழிவுபடுத்த துணிவதா என் அன்பு சகோதரிகளே???

உள்ளம் வேதனைப் படுகிறது, வேலியே பயிரை மேய்வதனால்.....!

Tuesday, January 12, 2016

ஏசுவுக்கு முன்னாள் ஏது கிருத்துவம்???



உலகில் தோன்றிய அனைத்து தீர்க்கதரிசிகளும் இஸ்லாம் கூறும் ஓரிறைக் கொள்கையைத்தான் மக்களுக்கு போதனை செய்தார்கள். உலகில் முதலில் தோன்றிய கொள்கையும் மார்க்கமும் இஸ்லாம் மட்டுமே. என்றாலும் இந்த வாதத்தை மறுக்கும் கிருத்தவ போதகர்கள் அறியாத பாமரர்களை ஏமாற்றுவதற்காக ஒரு வரட்டு வாத்தத்தை தயார் செய்து வைத்துள்ளனர். அந்த வாத்தத்தைப் பற்றி பார்ப்போம்.

கிருத்தவர்களின் வாதம்:
உலகில் தோன்றிய முதல் மதம் கிருத்தவம் தான். இஸ்லாமியர்கள் சொல்வதைப்போல இஸ்லாம் முதலில் தோன்றிய மார்க்கமல்ல. ஆப்ரஹாம் (இப்ராஹீம் (அலை)) என்ற தீர்க்கதரிசியின் ஒரு சந்ததியான இஸ்மவேல் (இஸ்மாயில் (அலை)) என்பவர் மூலமாகத்தான் இஸ்லாம் என்ற மார்க்கமே உருவானது. அவருடைய சந்ததிகள் தான் இஸ்லாமியர்கள். அதற்கு முன்னாள் வாழ்ந்த ஏனைய தீர்க்கதரிசிகள் கிருத்துவத்தை தான் போதித்தார்கள். இதுதான் இவர்களின் வாதம். இந்த வாதம் சில கிருத்துவர்களுக்கே தெரியாமலும் கூட இருக்கலாம். ஆழமாக தோண்டும்போது வெடிக்கும் நீர்வீழ்ச்சிகள் போன்றதுதான் இவைகள்.

பதில்:
உண்மையில் இவர்கள் கூறுவது போன்று தான் இஸ்லாம் உருவானதா என்றால், இப்படி அவர்கள் கூறுவதற்கு எந்த வகையான சான்றுகளும் அவர்களிடம் இல்லை என்பதே உண்மை. இஸ்மாயில் (அலை) அவர்களுடைய சந்ததியில் தான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வருகிறார்கள் என்பதை நாம் மறுக்கவில்லை. ஆனால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எடுத்துரைத்த மார்க்கம் அன்றைக்குத்தான் ஆரம்பமாகிறது என்பது தவறான புகுத்தல் ஆகும். 

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஏற்கனவே இருந்த சத்திய கொள்கையை மீட்டு நினைவூட்டவே வந்தார்களே அன்றி, புதுமையான கொள்கையாக இஸ்லாத்தை கூற வரவில்லை. அதற்கு மிகப்பெரிய சான்று நபிகள் நாயகத்தின் தந்தை.

அதாவது, நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இஸ்லாத்தை பற்றி எடுத்துரைக்க ஆரம்பித்த காலகட்டம் அவர்களது 40 –வது வயதாகும்.

அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நாற்பதாவது வயதின் தொடக்கத்தில் அவர்களை அல்லாஹ் தன் தூதராக அனுப்பினான்.
நூல் : புகாரி 4685.

நபிகளார் (ஸல்) அவர்கள் பிறப்பதற்கு முன்பே நபியின் தந்தை இறந்து விட்டார். இதை நாம் கூறுவதற்கு காரணம், நபியின் தந்தை பெயர் “அப்துல்லாஹ்”!. அப்துல்லாஹ் என்ற அரபிப் பெயருக்கு அல்லாஹ்வின் அடிமை என்று அர்த்தம். நன்றாக சிந்தித்து பாருங்கள்! நபியின் பிறப்பிற்கு முன்னரே இறந்துவிட்ட அவரது தந்தையின் பெயர் அல்லாஹ்வின் அடிமை என்று உள்ளது. அப்படியென்றால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இஸ்லாம் பற்றியும், அல்லாஹ்வைப் பற்றியும் அறிமுகம் செய்வதற்கு முன்னரே, அந்த சமூக மக்கள் அல்லாஹ்வை நம்பித்தான் வாழ்ந்துள்ளார்கள் என்று தெளிவாக விளங்குகிறது.

என்றாலும் அந்த சமூகம் ஏராளமான வழிகேடுகளிலும் மானக்கேடான விஷயங்களிலும் தொடராக ஈடுபட்ட காரணத்தினால் தான், அந்த சமூகத்தை மீண்டும் சீர்படுத்த நபிகள் நாயகம் இறைவனால் தூதராக தேர்வு செய்யப்பட்டார்கள் என்பதை புரிந்து கொள்ள வேண்டும். இவர்களின் வரட்டு வாதம் வாயடைத்துப் போக இதுவும் ஒரு முக்கியமான சான்றாகும்.

மேலும், கிருத்தவர்கள் அதிகம் கண்டுகொள்ளாத பழைய ஏற்பாடு நெடிகிழும் நாம் தேடிப்பார்த்தால், அதில் கூறப்படுகின்ற அனைத்து தீர்க்கதரிசிகளும் ஒரே இறைவனான கர்த்தரையே வணங்க வேண்டும், அவருக்கு உருவங்களை சமைக்க கூடாது, அவருக்கு இணையாக வானிலோ, பூமியிலோ, நீரிலோ எதையும் ஒப்பிடக் கூடாது என்றே மக்களுக்கு எத்தி வைத்துள்ளனர் என்பதை நாம் கண்டுகொள்ள முடியும். திரித்துவக் கொள்கையோ, அல்லது தற்போது வாழ்ந்து கொண்டிருக்கும் பலவகை வேறுபாடுகள் கொண்ட கிருத்துவக் கொள்கையோ பழைய ஏற்பாட்டில் கூறப்படவில்லை. இவற்றை அடித்து நொறுக்கும் ஓரிறைக் கொள்கையே கூறப்பட்டுள்ளது. இதே கொள்கையைத்தான் இயேசுவாகிய ஈஷா (அலை) அவர்களும் சொன்னார்கள். அவர்களைத் தொடர்ந்து அனுப்பப்பட்ட நபிகள் நாயகம் (ஸல்) அவர்களும் சொன்னார்கள்.

ஆனால் கிருத்துவம் என்ற கொள்கைதான் இயேசுவுக்கு பின்னால், இயேசுவை அடையாளப்படுத்தி பவுல் என்ற நபரால் உருவாக்கப்பட்ட மதம் ஆகும். இந்த மதத்திற்கும் இயேசுவுக்கும் எந்த சம்மந்தமும் கிடையாது. இதை நாம் ஏதோ இவர்களைப் போன்று சான்றுகள் இல்லாமல் முன்வைக்கவில்லை.  இவர்கள் எதை வேதமென்று நம்பியுள்ளார்களோ அதிலிருந்தே சான்றுகளை சமர்ப்பிக்கிறோம்.

இயேசுவின் கொள்கைக்கும் அவரைப் பின்பற்றியவர்களுக்கும் எதிரியாக இருந்து கொண்டு அவர்களைத் துன்புறுத்திய பவுல் என்பவர், பின்னாளில் தான் மனம் திரும்பியதாகவும் தனக்கு கடவுளிடமிருந்து செய்தி வந்ததாகவும் கூறி அதனடிப்படையில் ஒரு கொள்கையைப் பிரச்சாரம் செய்தவர்.  (அப்போஸ்தலர்  9: 1-9). 

கடவுளிடமிருந்து செய்தி வந்தது என்பதும் பவுல் தன்னைப் பற்றித் தரும் சுய அறிக்கை மட்டுமே! அவரது பிரச்சாரங்கள் நியாயப் பிரமாணங்களை மறுக்கும் விதமாகவும் இயேசுவின் நடைமுறைக்கு எதிராகவும் அமைந்துள்ளது!
கடவுளுக்காகத் தான் பொய் சொல்வதாகவும்,  தூய ஆவியால் அவர் தூண்டப்படுகிறார் என்பதற்கும் அவரது மனச்சான்று மட்டுமே போதும் என்றும் அவர் கூறியிருக்கிறார்!    (உரோமையர் 3:7,  9:1).  

பவுல் உருவாக்கிய சித்தாந்தத்தை அடிப்படையாகக் கொண்டு ஒரு மதம் பிரச்சாரம் செய்யப்பட்டது! அது பின்னாளில் கிறிஸ்தவம் என்றும் அதைப் பின்பற்றியவர்கள் கிறிஸ்தவர்கள் என்றும் அழைக்கப்பட்டனர் என்பதே உண்மை!
இயேசுவின் பெயராகிய கிறிஸ்து என்ற வார்த்தையுடன் சேர்த்து  பிற்காலத்தில் உருவாக்கப்பட்ட ஒரு மதமே கிறிஸ்தவம் என்பதை பைபிளின் புதிய ஏற்பாடே ஒப்புக்கொள்கிறது!

அந்தியோக்கியாவில்தான் முதல் முறையாகச் சீடர்கள் கிறிஸ்தவர்கள் என்னும் பெயரைப் பெற்றார்கள்.
(திருத்தூதர் பணிகள் 11 : 26).

இப்போது நமக்கு விளங்கும் எது ஆதியில் தோன்றிய மார்க்கம், எது பாதியில் புகுத்தப்பட்ட மதம் என்று.

மேலும் இஸ்மவேலிளிருந்து பிரிந்ததுதான் இஸ்லாம் என்ற இவர்களின் வாதத்தை பைபிளே உடைக்கிறது பாருங்கள்!

யோவான் 14 அதிகாரம்
16. நான் பிதாவை வேண்டிக்கொள்வேன், அப்பொழுது என்றென்றைக்கும் உங்களுடனேகூட இருக்கும்படிக்குச் சத்திய ஆவியாகிய வேறொரு தேற்றவாளனை அவர் உங்களுக்குத் தந்தருளுவார்.

17.
உலகம் அந்தச் சத்திய ஆவியானவரைக் காணாமலும் அறியாமலும் இருக்கிறபடியால் அவரைப் பெற்றுக்கொள்ளமாட்டாது; அவர் உங்களுடனே வாசம்பண்ணி உங்களுக்குள்ளே இருப்பதால், நீங்கள் அவரை அறிவீர்கள்.


26. என் நாமத்தினாலே பிதா அனுப்பப்போகிற பரிசுத்த ஆவியாகிய தேற்றவாளனே எல்லாவற்றையும் உங்களுக்குப் போதித்து, நான் உங்களுக்குச் சொன்ன எல்லாவற்றையும் உங்களுக்கு நினைப்பூட்டுவார். 

இந்த வசனங்கள் கூறும் அந்த தேற்றவாளன் யார்???

இயேசு சொன்ன ஓரிறைக் கொள்கையை மக்களுக்கு போதித்து, இயேசு இறைவனால் அனுப்பப்பட்ட, நேசிக்கப்பட்ட ஒரு இறைத்தூதர் என்பதை அனைவரும் நம்பிக்கை கொள்ள வேண்டும். அவ்வாறு நம்பாதவர் முஸ்லிமாக முடியாது, ஒரே இறைவனாகிய கர்த்தரை நம்பிக்கை கொண்டவராக முடியாது என்று உலகிற்கு போதனை செய்த இறைத்தூதர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தான். அவர் தான் இயேசு சொன்ன அந்த தேற்றவாளன் என்று நாம் சொல்கிறோம். இதற்கு இன்னும் கூடுதலான தகவலையும் தருகிறோம்.

இந்த வசனங்களில் இடம்பெறும் தேற்றவாளன் என்ற சொல் கிரேக்க மொழியில்  "Peryklytos"  பெரிக்லிடோஸ் என்று இடம்பெறுகிறது. தமிழ் மொழிப்பெயர்ப்பு மற்றும் ஆங்கில மொழிப்பெயர்ப்பு பைபிளைக் காட்டிலும் கிரேக்க மொழியில் உள்ள பைபிள் தான் முதன்மைப் படுத்தப்படும் என்பது கிருத்துவர்களுக்கு தெரியும். காரணம் அதுதான் மூல மொழியிலிருந்து மொழிப்பெயர்க்கப்பட்டதாக கிருத்துவர்களால் கூறப்படும்.

கிரேக்க மொழி பைபிளில் இடம்பெறும் "Peryklytos"  பெரிக்லிடோஸ் என்ற வார்த்தைக்கு ஆங்கில மொழிப்பெயர்ப்பு கொடுத்தால் "Admirable one"  (புகழுக்குரியவர்) என்ற அர்த்தம் வரும். 

அதே "Peryklytos"  என்ற வார்த்தையை அரபியில் மொழிப்பெயர்த்தால் அஹ்மது என்ற சொல் வரும். இதற்கும் அதே அர்த்தம்தான், அதுமட்டுமல்லாமல் இது நபிகள் நாயகத்தின் மற்றுமொரு பெயரும் கூட!!!

அல்லாஹ் திருமறைக்குர்ஆனில் இயேசுவாகிய ஈஷா (அலை) கூறியதாக கூறுகிறான்:

"இஸ்ராயீலின் மக்களே! நான் உங்களுக்கு (அனுப்பப்பட்ட) அல்லாஹ்வின் தூதராவேன். எனக்கு முன் சென்ற தவ்ராத்தை உண்மைப்படுத்துபவன். எனக்குப் பின்னர் வரவுள்ள அஹ்மத் என்ற பெயருடைய தூதரைப் பற்றி நற்செய்தி கூறுபவன்'' என்று மர்யமின் மகன் ஈஸா கூறியதை நினைவூட்டுவீராக! அவர்களிடம் தெளிவான சான்றுகளைக் கொண்டு வந்தபோது "இது தெளிவான சூனியம்'' எனக் கூறினர்.
திருக்குர்ஆன் (61:6).

ஆகவே இயேசுவால் முன்னறிப்பு செய்யப்பட்ட அந்த தேற்றவாளன் அஹ்மது எனப்படும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தான் என்பது மிகவும் உறுதியாகிறது. இயேசு முன்னறிவிப்பு செய்த தேற்றவாளன் இயேசு எத்திவைத்த மார்க்கத்தையே மக்களுக்கு போதிப்பார். அதற்கு மாற்றமாக ஒருக்காலும் போதிக்க மாட்டார்.

காரணம், இயேசுவே கூறுகிறார், நான் உங்களுக்குச் சொன்ன எல்லாவற்றையும் உங்களுக்கு நினைப்பூட்டுவார்....

அப்படியென்றால், நபிகள் நாயகம் போதித்த மார்க்கம் இஸ்லாம். இயேசு போதித்த மார்க்கமும் இஸ்லாம் தான் என்பது விளங்குகிறதா????

கிருத்தவம் என்பது அனைத்து தீர்க்க தரிசிகளும் போதித்த மார்க்கமான இஸ்லாமிய கொள்கைக்கு எதிரியான பவுலால் உண்டாக்கப்பட்ட புதிய கொள்கை, அதற்கும் இயேசுவுக்கும் சம்மந்தமில்லை என்று விளங்குகிறதா???

இதற்குமேல் என்ன சொல்ல என் அன்பு பாமர கிருத்துவ நண்பர்களே?????

சிந்தித்து தெளிவு பெறுங்கள்....! நேரிய பாதையை நோக்கி வாருங்கள்....! 

Thursday, January 7, 2016

கள்ளக்கிருத்து உமா சங்கருக்கு பதிலடி! தொடர் - 2

பலதாரமணம் செய்தல் பெண்களுக்கு இழைக்கப்படும் அநீதியா? PRAT 2


சென்ற பதிவில், உமா சங்கர் என்ற மதவெறியன் இஸ்லாத்தை பற்றி சொல்லித்திரியும் அவதூறுகளில் ஒன்றான பலதாரமணம் பற்றிய தகவல்களை நாம் பகிர்ந்திருந்தோம். அதன் தொடர்ச்சியாக இந்த பதிவில் உலகின் பல நாடுகளில் உள்ள இஸ்லாம் கூறும் எதார்த்த நிலைகளைப்பற்றிய ஒரு தெளிவை தரலாம் என்று எண்ணுகிறேன்.

From : www.geohive.com:-

Total Population by Gender and Gender Ratio, by Country (pop. over 200,000)

Entity
Total
Male
Female
Belgium
10,712,066
5,250,531
5,461,535
Belize
311,627
153,694
157,933
Benin
8,849,892
4,363,677
4,486,215
Bolivia (Plurinational State of)
9,929,849
4,952,471
4,977,378
Bosnia and Herzegovina
3,760,149
1,807,413
1,952,736
Brazil
194,946,470
95,937,239
99,009,231
Bulgaria
7,494,332
3,622,669
3,871,663
Burkina Faso
16,468,714
8,172,271
8,296,443
Burundi
8,382,849
4,113,382
4,269,467
Cambodia
14,138,255
6,916,582
7,221,673
Cameroon
19,598,889
9,782,551
9,816,338
Canada
34,016,593
16,869,134
17,147,459
Central African Republic
4,401,051
2,167,862
2,233,189
Chad
11,227,208
5,582,331
5,644,877
Chile
17,113,688
8,461,864
8,651,824
China, Hong Kong SAR
7,053,189
3,341,850
3,711,339
Colombia
46,294,841
22,774,767
23,520,074
Congo, Democratic Republic of the
65,965,795
32,808,299
33,157,496
Croatia
4,403,330
2,119,803
2,283,527
El Salvador
6,192,993
2,941,733
3,251,260
Ethiopia
82,949,541
41,281,577
41,667,964
France
62,787,427
30,548,615
32,238,812
Georgia
4,352,244
2,049,943
2,302,301
Germany
82,302,465
40,340,771
41,961,694
Guatemala
14,388,929
7,011,884
7,377,045
Haiti
9,993,247
4,956,750
5,036,497
Hungary
9,983,645
4,739,632
5,244,013
Indonesia
239,870,937
119,622,439
120,248,498
Italy
60,550,848
29,615,920
30,934,928
Japan
126,535,920
61,654,165
64,881,755
Kazakhstan
16,026,367
7,694,628
8,331,739
Korea, Dem. People's Republic of (North)
24,346,229
11,944,269
12,401,960
Mexico
113,423,047
55,933,041
57,490,006
Morocco
32,481,912
15,949,320
16,532,592
Myanmar
47,963,012
23,639,885
24,323,127
Nepal
29,959,364
14,862,219
15,097,145
Russian Federation
142,958,164
66,134,540
76,823,624
Sierra Leone
5,867,536
2,866,092
3,001,444
Slovenia
2,029,680
992,732
1,036,948
South Africa
50,132,817
24,824,300
25,308,517
Spain
46,076,989
22,748,323
23,328,666
Sri Lanka
20,859,949
10,299,114
10,560,835
Thailand
69,122,234
33,972,348
35,149,886
Togo
6,027,798
2,985,193
3,042,605
Turkey
72,752,325
36,285,250
36,467,075
Ukraine
45,448,329
20,913,685
24,534,644
United Kingdom
62,035,570
30,515,530
31,520,040
United States of America
310,383,948
153,139,563
157,244,385
Uzbekistan
27,444,702
13,640,744
13,803,958
Viet Nam
87,848,445
43,417,900
44,430,545
Argentina
40,412,376
19,768,407
20,643,969
Armenia
3,092,072
1,439,180
1,652,892
Australia
22,268,384
11,092,660
11,175,724
Austria
8,393,644
4,095,508
4,298,136
Azerbaijan
9,187,783
4,543,839
4,643,944


நாம் மேலே சுட்டிக்காட்டியுள்ள புள்ளிவிவர கணக்குகளை நன்றாக பாருங்கள். இந்த புள்ளி விவர கணக்குகள் மொத்த நாடுகளில் வசிக்கும் ஆண் பெண் ஆகிய இருபாலரின் எண்ணிகையை  நமக்கு தருகின்றன. இதில் நாம் ஒரு சில நாடுகளின் புள்ளி விவரங்களை மட்டுமே இங்கே பதிந்துள்ளோம். இன்னும் அதிகமான விவரங்களை அறிய மேற்கண்ட இணைப்பை கிளிக் செய்தால் பார்வையிடலாம். 

நான் சுட்டிக்காட்டியுள்ள இந்த புள்ளிவிவரக் கணக்கின்படி உலகிலுள்ள அதிகப்படியான நாடுகளில், ஆண்களைக் காட்டிலும் பெண்களே அதிகமாக காணப்படுகின்றனர். இதை நாம் ஏன் இங்கே குறிப்பிடுகிறோம் என்றால், பலதாரமணம் என்பதை விமர்சிக்கும் உமா சங்கரைப் போன்ற உலக எதார்த்தமறியா மடையர்களை நோக்கி, இதை வைத்து சில கேள்விகளை நாம் முன்வைக்க இருக்கிறோம்!

ஒருவனுக்கு ஒருத்தி என்பதுதான் முறையானது, நான்கு பெண்கள் வரை ஒருவர் திருமணம் செய்து கொள்ளலாம் என்று இஸ்லாம் கூறும் கட்டளை முறையற்றது என்று கூறும் இவர்கள், சற்று நாம் மேலே போட்டிருக்கும் பட்டியலை கண்ணை தெளிவாக துடைத்துவிட்டு படிக்கட்டும். 

உலகிலுள்ள அதிகபட்ச நாடுகளில் ஆண்களை விட பெண்கள் தான் அதிகமாக இருப்பதாக இந்த பட்டியல் கூறுகிறது. அப்படியென்றால், உங்களின் வாதப்படி இந்த நாடுகளிலுள்ள அனைத்து ஆண்களும் ஒரே ஒரு பெண்ணையே திருமணம் செய்கின்றனர் என்று வைத்துக் கொள்வோம். அப்படி அனைவருமே திருமணம் செய்துவிட்டால் சில நாடுகளில் நூறாகவும், சில நாடுகளில் ஆயிரமாகவும், சில நாடுகளில் இலட்சமாகவும் திருமணம் ஆகாத பெண்கள் எஞ்சி இருப்பர்! இவர்கள் திருமணம் செய்யக்கூடாது என்பதற்காக திருமணம் செய்யாமல் இல்லை, மாறாக திருமணம் செய்ய ஒரு ஆண்கூட இல்லாத நிலையினால் இந்த நிலைக்கு தள்ளப்படுவர். இத்தகைய சூழலில் மாட்டியிருக்கும் பெண்களுக்கு, உமா சங்கர் போன்ற அறிவாளிகள் என்ன சட்டம் சொல்லப் போகிறார்கள்???

ஒன்று திருமணமான ஆணினுடைய மனைவி இறந்துபோக வேண்டும். ஒருவேளை இப்படியொரு சூழல் அமையுமென்றால் இன்னொரு பெண்ணிற்கு வாழ்வு கிடைக்க வாய்ப்புள்ளது. அதுவும் நாம் எதிர்பார்த்தது போல் அமையாது. காரணம் அந்த பெண் எப்போது இறந்து போவாள் என்று எண்ணியே இளமைக் காலம் முடிந்து விடும். பெரும்பாலும் வயது முதிர்ந்த பருவத்தில்தான் பெண்கள் இறக்கின்றனர் என்பதும் புள்ளிவிவரம் கூறும் மற்றுமொரு  உண்மை. ஆக இந்த வாயிலும் தோழ்வியில் மூடப்படும்.

அப்படி இல்லையென்றால் அடுத்த வாய்ப்பு, அந்த பெண் விபச்சாரத்தில் விழ வேண்டும். காரணம் முறையாக திருமணம் செய்ய ஆண்கள் இல்லை!

அப்படியும் இல்லையென்றால், ஒழுக்கமான பெண்கள் என்பதால் இளமை இறந்து போகும் வரை முதிர் கன்னிகளாக கிடந்தது சாக வேண்டியதுதான்.

இந்த மூன்றைத் தவிர வெறு எந்த சட்டங்களையும் இதற்கு கூற முடியாது!!!

இதுபோன்ற சூழலில் சிக்கித் தவிக்கும் எந்தவொரு ஒழுக்கமான பெண்ணும் இஸ்லாம் கூறும் முறையான திருமண வாழ்வையே தேர்ந்தெடுப்பாள். காரணம் விபச்சாரம் என்பது இஸ்லாம் தடை செய்யாத போதிலும் மானக்கேடான செயல்தான் என்பதை உலகம் அறிந்துதான் இருக்கிறது.

ஆகவே ஒரு ஒழுக்கமுள்ள பெண் விபச்சாரத்தில் விழ மாட்டாள். முதிர்கன்னி பருவம் வரை காலத்தைக் கடத்தவும் மாட்டாள், காரணம் ஆண் பெண் இணைதல் என்பது பசி தாகத்தை போன்ற ஒரு இயற்கையான தேவை. அதற்கான சந்தர்ப்பத்தில் இந்த தேவையை அனைவரும் பெற்றுத்தான் ஆக வேண்டும். இந்த சந்தர்ப்பம் தாமதப்படுமேயானால், ஒருநாள் இல்லை ஒருநாள் தவறான பாதைக்கு நாம் தள்ளப்பட்டு விடுவோம் என்பதையும் எந்த ஒழுக்கமுள்ள பெண்ணும் ஏற்றுக் கொள்வாள்.

ஆகவே இதுபோன்ற சூழலில் வசிக்கும் பெண்கள் கேவலத்தில் விழுவதைக் காட்டிலும், தான் இரண்டாவதாகவோ அல்லது மூன்றாவதாகவோ அல்லது நான்காவதாகவோ ஒரு ஆணால் திருமணம் செய்யப்படுபதையே தேர்ந்தெடுப்பாள். அவ்வாறு தேர்வு செய்யவில்லை என்றால் நஷ்டம் பெண்களுக்குத்தான். இதைத்தான் இஸ்லாம் கூறுகிறது. இஸ்லாம் இறைவனது மார்க்கம் என்பதற்கு இதுவும் ஒரு அழகிய சான்று. ஒரு ஆண் நான்கு பெண்கள் வரை திருமணம் செய்யலாம் என்று இறைவன் சட்டம் சொன்னது போன்று, உலகின் பல நாடுகளில் அதற்கு ஏற்றார்போல் சூழலையும் இறைவன் அமைத்துள்ளான். இந்த உண்மையை எவராலும் மறுக்க முடியாது.

ஒருவன் இரண்டாவது திருமணம் செய்ய விரும்புகிறான் என்றால் அதற்கு அவன் பேண வேண்டிய அவசியமான, நியாமான நியதிகளைப்பற்றி நாம் சென்ற பதிவில் விரிவாகவே விளக்கியுள்ளோம். அந்த நியதிகளுக்கு உடன்படாத ஒருவர் இரண்டாம் திருமணம் செய்ய அனுமதி கிடையாது. ஆகவே ஆண்கள், இரண்டாகவோ மூன்றாகவோ நான்காகவோ திருமணம் செய்து கொள்ளலாம் என்ற சட்டம் சூழல் குறித்த நியாமான சட்டமே அன்றி ஆணுக்கு வழங்கப்பட்ட சலுகை என்று தவறாக புரிந்துகொள்ளக் கூடாது.

இன்னும் ஏராளம் இதுபற்றி விவரிக்கலாம். என்றாலும் இந்த சிறிய விளக்கமே போதும், இஸ்லாம் கூறிய இந்த சட்டம் ஏற்புடையதே என்பதை நியாமான உணர்வு கொண்ட நபர்கள் புரிந்துகொள்ள. இந்தப்பதிவை நம்மை நோக்கி விமர்சிக்கும் உமா சங்கரைப் போன்ற அனைவருக்கும் சமர்ப்பிக்கிறோம்.

பதிந்தவர்
முஹம்மது மஷாரிக்.