தினம் ஒரு நபிமொழி


இது அனுமதிக்கப்பட்டது; இது தடுக்கப்பட்டது என்று உங்கள் நாவுகள் வர்ணிக்கும் பொய்யை அல்லாஹ்வின் மீது இட்டுக்கட்டிக் கூறாதீர்கள்! அல்லாஹ்வின் மீது பொய்யை இட்டுக்கட்டியோர் வெற்றி பெறமாட்டார்கள். (அல் குர்ஆன் 16:116).

Monday, April 24, 2017

பொதுத்தளப்பதிவுகளில் கவணம் தேவை!!!




அன்பு இஸ்லாமிய சொந்தங்களே.....!!!

நாம் பதிவிடும் பலவிதமான பதிவுகளை பலருக்கும் டேக் செய்து பரப்பி விடுகிறோம். அவ்வாறு நம்மால் டேக் செய்யப்படும் முகநூல் ஐடியின் சொந்தக்காரர்கள் பலர் இறைவனால் அழைக்கப்பட்டு விட்டார்கள்
அவர்களது ஐடிகள் மட்டும் தான் முகநூலில் உள்ளது என்பது உங்களுக்கு தெரியுமா????
நாளை எனது நிலையும் உங்களது நிலையும் இதுதான் தோழர்களே!!!
நமது முகநூல் பக்கமும் பதிவுகளும் இருக்கும்,
ஆனால் நாம் இருக்க மாட்டோம்....

நாம் பதிந்த பதிவுகள் இறைவன் வெறுக்கும் பதிவுகளாக, இறைவனால் தடுக்கப்பட்ட காரியங்களை பிரதிபலிக்கும் பதிவுகளாக இருக்குமென்றால்
நாம் இந்த உலகை விட்டு பிரிந்த பின்னால் அவற்றால் ஏற்படும் விளைவை நிச்சயமாக உணர்ந்து கொள்வோம் என்பதில் சந்தேகம் இல்லை!!!!
ஆனால் அத்தகைய விளைவை மண்ணறைகளிலும் மறுமையிலும் நமக்கு ஏற்படுத்தும் அந்த பதிவுகளை முகநூலில் இருந்து நீக்கிவிட நம்மால் அன்று இயலாமல் போகும் என்பதை என்றைக்காவது நாம் சிந்தித்தது உண்டா???
மிகுந்த கவணத்தோடு பொதுத்தளங்களில் பதிவுகளை பதிவிடுங்கள்!!!
சிலரது முகநூல் பக்கங்களில்
விபச்சார சிந்தனைகளை உலகில் பரப்பும் சினிமா கூத்தாடிகளின் புகைப்படங்கள்,
ஆபாச புகைப்படங்கள், ஆபாச வீடியோக்கள்,
பிறரது சுயமரியாதையை பாதிக்கும் வகையிலான பதிவுகள் என்று பதிவுகள் தொடர்கிறது.........
மரணம் எப்போது வரும் என்று நம்மால் சொல்ல முடியாது சொந்தங்களே!!!
உங்களுக்கு மரணம் வந்து விட்டால்.......
பல இலட்சம் மக்களால் இதுபோன்ற உங்கள் பதிவுகள் பரப்பப்பட்டுக்கொண்டே இருக்கும்....
பொதுத்தளம் முழுமையாக மூடப்படும் வரைக்கும்...
இந்த பதிவுகளை உங்களால் எப்படி அழிக்க முடியும்??????????????????
இறந்த பின்னும் நமக்கு நன்மைகளை பெற்றுக்கொடுக்கும் வகையிலான செயல்கள் தான் நமது வாழ்வில் இருக்க வேண்டும்.
இறந்த பின்னும் கூட நமது பாவச்சுமைகள் நம்மை தொடரும் வகையில் நாம் வாழ்ந்து மரணிக்கக்கூடாது.
அல்லாஹ் நம்மை பாதுகாப்பானாக!!!

இன்றே பதிவுகளை புரட்டுங்கள், தீமையானவற்றை தூர வீசுங்கள்....
இறைவனை நோக்கி திரும்புங்கள்.....
நமது பதிவுகள் அனைத்தும் நன்மையானதாகவே அமையட்டும்.
நம்பிக்கை கொண்டோரே! அல்லாஹ்விடம் கலப்பற்ற முறையில் பாவமன்னிப்புத் தேடுங்கள்! உங்கள் இறைவன் உங்கள் தீமைகளை அழித்திடக்கூடும். உங்களை சொர்க்கச் சோலைகளில் நுழையச் செய்வான். அவற்றின் கீழ்ப்பகுதியில் ஆறுகள் ஓடும்.
திருக்குர்ஆன் (66:8).

No comments:

Post a Comment