இறைவனால் படைக்கப்பட்ட அனைவரும் அவனது வரம்புகளை ஏதோ ஒரு வகையில் மீறுபவர்கள் தான். நாம் தேடும் மன்னிப்பின் காரணமாக இறைவன் கருணை புரிந்து நமது பாவங்களை மன்னிக்கிறான்.
மார்க்கத்தை மக்களுக்கு எடுத்து சொல்லும் ஒரு அழைப்பாளரும் கூட
பல சந்தர்ப்பங்களில் பாவங்களை தொடுபவர்கள் தான். எவரும் இதில் விதிவிலக்கு பெற்றவர்கள் அல்ல.
ஆனால், இறைவனது அச்சத்தை தூண்டும் எண்ணற்ற உபதேசங்களை செய்யும் நபர்கள்,
சொல்பவற்றை அவர்களது வாழ்வில் செயல்படுத்தவில்லை என்றால்....
அவர்கள் தமது குடல்களை கையில் சுமந்த நிலையில் நரக வேதனையில் சுற்றி திரிவார்கள் என்று நபியவர்கள் சொன்னார்கள்.
#ஒரு அழைப்பாளனாக மறுமையின் எனது நிலையை சிந்திக்கிறேன்.
இறைவனது கருணை இல்லை என்றால்????!!!!
No comments:
Post a Comment