நாம் அதிகமாக நேசிக்கும் ஒன்றை இழந்து விட்டால் அதானல்
ஏற்படும் வலி உணர்வுகளை வார்த்தைகளால் விளக்கிவிட முடியாது.
குறிப்பாக நாம், மனிதரக்ளுள் ஒருவர் இன்னொருவரை அளவுக்கதிகமாக நேசித்து
விட்டால் நாம் விரும்பியோ விரும்பாமலோ அவர்களை பிரிய வேண்டிய சூழல்
ஏற்படுகின்றபொழுது, அந்த வேதனையின் உச்சத்தை உணர்ந்தவர்களால் மட்டுமே
புரிந்துகொள்ள இயலும்.
அவ்வாறுதான் இறைவன் உறவுகளுக்குள் பிரிவு என்கின்ற
புறச்சாதனமில்லா வேதனையை வடிவமைத்துள்ளான். இது புறச்சாதனம் மூலம் கொடுக்கும்
வேதனைகளைக் காட்டிலும் கொடியது.
இறைவன் திருமறையில், இலகுவாக சுவனம் சென்று விடலாம் என்று என்னிக்கொண்டீர்களா??? என நம்மைப்பார்த்து கேட்கிறான். அதே இறைவன் இன்னொரு இடத்தில் பிரிவு எனும் சோதனையை
இறைவனுக்காக நீங்கள் பொறுத்தால் உங்களுக்கு சுவனம் உண்டு என்றும் கூறுகிறான்.
ஆம், பிரிவு எனும் சோதனை என்பது இலகுவான ஒன்றல்ல!!! மிகப்பெரும் சோதனைகளில் இதுவும் ஒன்று என்பதனால் தான்
இறைவன் அதற்குண்டான பரிசாக நமக்கு சுவனம் தருவதாக வாக்களிக்கிறான்!!!
பிரிவுகள் கொடிய வேதனை என்றாலும் இறைவனுக்காக அவற்றை
சகித்துக்கொள்ள நாம் பழக வேண்டும்.
இதுபோன்ற எண்ணங்கள் என் உள்ளத்தில் உதிக்கின்றபோழுது என்
ஆழ்மனதில் தோன்றிய சிந்தனை இதுதான்.....
இவ்வுலகில் நாம் அளவுக்கதிகமாக நேசித்த மனிதர்கள், நம்மை வெறுத்தாலோ, மௌனமாக நம்மைக் கடந்து சென்றாலோ, நம்மை காணாததுபோல் வெறுத்து ஒதுங்கி நின்றாலோ
உள்ளம் வெடித்துவிடுவது போன்ற கொடிய உணர்வை நாம் சுகிக்கிறோம்.....
உள்ளம் வெடித்துவிடுவது போன்ற கொடிய உணர்வை நாம் சுகிக்கிறோம்.....
நம்மை படைத்த ரட்சகன், நாளை மறுமையில் சில மனிதர்களை பார்க்க மாட்டான், அவர்களோடு பேசமாட்டான், அவர்களை பரிசுத்தப்படுத்த மாட்டான் என்று நாம் படித்த
இறைவசனத்தையும் நபிமொழிகளையும் கண்முன்னே நிறுத்திப்பார்ப்போம்.
இறைவன் இவ்வாறு செய்வதற்கான காரணம் இந்த நிலையை அடைந்த
நபர்களுக்கு வேதனையளிக்கவே என்பது ஒருபுறம் இருந்தாலும்,
ஒரு நல்ல இறைவிசுவாசி தாம் செய்த குற்றத்தால் இந்த நிலையை
அடைந்து விடுவாராயின் ஏனையை வேதனைகளைவிட இதுவே அவரது வேதனையின் உச்சகட்டமாக
இருக்கும்.
இறைவனை நேசிக்க தெரியாதவனுக்கோ இறைவனது புறக்கணிப்பு ஓர்
பொருட்டல்ல. அவன் தமக்கு ஏற்படப்போகும் வேதனைகளை குறித்து மட்டுமே அஞ்சுவான்
கவலைப்படுவான் கைசேதப்படுவான்.
ஆனால் இறைவனை நேசித்து வாழும் ஒரு இறைனம்பிக்கையாளரை
பொறுத்த வரையில், இறைவனது மௌனத்தையோ, இறைவனது புறக்கணிப்பையோ அவரால் ஒருபோதும் தாங்கிக்கொள்ள
முடியாது.
இறைவன் தரப்போகும் உடல் சார்ந்த வேதனைகள் ஒன்றாகவும், இறைவன் தம்மை புறக்கணித்து விட்டான் என்ற உள்ளம் சார்ந்த
வேதனை ஒன்றாகவும், மொத்தம் இருவகையான தண்டனைகளை இறைவனை நேசித்து
வாழ்ந்த மனிதன் மட்டுமே அந்த இடத்தில் உணருவான்....
இத்தகைய நிலையில் இருந்து அல்லாஹ் நம்மை அவனது கருனைமூலமாக
பாதுகாக்க வேண்டும்.....
இறைவன் மறுமையில் எதுபோன்ற பாவிகளை பார்க்க மாட்டன், அவர்களோடு பேசமாட்டான், அவர்களை பரிசுத்தப்படுத்த மாட்டன் என்ற மார்க்க விளக்கத்தை
ஒரு முஃமின் கட்டாயம் தெரிந்துகொள்ள வேண்டும். அப்பொழுதுதான் நாம் அறியாமல்கூட
அவற்றில் விழுந்து விடாமல் நம்மை தற்காத்துக்கொள்ள முடியும்.
நேரம் கிடைக்கின்றபொழுது இறைவனும் இறைத்தூதரும் சொல்லும்
இத்தகைய தண்டனைக்குரியோர் யார் என்பதை தொடராக பதிவிடுவோம்....! இனஷா அல்லாஹ்....!
No comments:
Post a Comment