தினம் ஒரு நபிமொழி


இது அனுமதிக்கப்பட்டது; இது தடுக்கப்பட்டது என்று உங்கள் நாவுகள் வர்ணிக்கும் பொய்யை அல்லாஹ்வின் மீது இட்டுக்கட்டிக் கூறாதீர்கள்! அல்லாஹ்வின் மீது பொய்யை இட்டுக்கட்டியோர் வெற்றி பெறமாட்டார்கள். (அல் குர்ஆன் 16:116).

Wednesday, January 27, 2016

சூரா பகரா பற்றிய பலவீனமான செய்தி - 1



من قرأ سورة البقرة؛ توج بتاج في الجنة


யார் ஒருவர் சூரத்துல் பகராவை ஓதுகின்றாரோ அவருக்கு சுவனத்தில் கிரீடம் அணிவிக்கப்படும். இந்த செய்தி பைஹகீ இமாமின் ஷுஅபுல் ஈமான்எனும் புத்தகத்தில் பதியப்பட்டுள்ளது. இதன் அறிவிப்பாளர் தொடரில் வரும் ‘முஹம்மதிப்னுல் ளவ்ஃ’ என்பவர் பொய்யன் என்று விமர்சனம் செய்யப்பட்டுள்ளார். மேலும் முஹ்ம்மதிப்னு மஹ்தீ என்பவர் நிரகரிக்கப்பட்ட செய்திகளை அறிவிக்கும் மிகப் பலவீனமான நபர் என்று விமர்சிக்கப்பட்டுள்ளார். (ஸில்ஸிலதுல் லஈபா)

ஆகவே இந்த செய்தி பலவீனமான செய்தியாகும்!

No comments:

Post a Comment