தினம் ஒரு நபிமொழி


இது அனுமதிக்கப்பட்டது; இது தடுக்கப்பட்டது என்று உங்கள் நாவுகள் வர்ணிக்கும் பொய்யை அல்லாஹ்வின் மீது இட்டுக்கட்டிக் கூறாதீர்கள்! அல்லாஹ்வின் மீது பொய்யை இட்டுக்கட்டியோர் வெற்றி பெறமாட்டார்கள். (அல் குர்ஆன் 16:116).

Saturday, January 16, 2016

மத வெறியன் உமா சங்கருக்கு பதில் - தொடர் 3



Pon Jesly Engineering College - ல் மாணவர்களுக்காக நடத்தப்பட்ட கேள்வி பதில் நிகழ்ச்சியில், மாணவர்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதில் அளிக்கும் விதமாக சதா இஸ்லாத்தை தொடர்பு படுத்தியே அவதூறுகளை அள்ளி வீசிய மட சாம்பிராணி  உமா சங்கருக்கு நாம் தொடராக பதில் அளித்து வருகிறோம்.

இந்த தொடரில், உமா சங்கர் குறிப்பிட்ட ஈராக்கில் ஜிஹாதிஸ்துகள் வெளியிட்ட ஃபத்வாவைப் பற்றி அலசுவோம். தெளிவாக சொல்வதென்றால் "Genital Mutilation Of Women" பெண்களின் மறை உறுப்புத் துண்டை வெட்டி எடுத்தல் (கத்னா செய்தல்) என்பதை ஈராக்கை சார்ந்த ஒரு சாரார் மார்க்க சட்டமாக வெளியிட்டு அமல்படுத்திக் கொண்டிருக்கின்றனர். இது மார்க்கத்தை முன்வைத்து செயல்படுத்தப்படுகிறது. இது கொடுமையில்லையா? இப்படி ஒரு மார்க்கம் கட்டளையிடுவது தகுந்ததா? இப்படி கூறும் மார்க்கத்தை நாம் பின்பற்றுவதா? என்பதுதான் இந்த மூடனின் வாதம். விவரமறியா இஸ்லாமிய பெயர்தாங்கிகளும் இதுபோன்ற அர்த்தமற்ற வாதங்களுக்கு எந்த எதிர்ப்பும் கூறாமல் அந்த சபையில் அமைதி காத்து விட்டனர். 

சரி, வைக்கப்பட்ட வாதத்திற்கு வருவோம்! இஸ்லாமிய ஜிஹாதிஸ்துகள் என்போர் யார் என்று உலகில் வாழும் இஸ்லாமியர்களான எங்களுக்கே தெரியாது. காரணம் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டிய அளவிற்கு அவர்கள் ஒன்றும் இறைவனால் அனுப்பப்பட்ட தூதர்கள் கிடையாது. இஸ்லாமிய மார்க்கத்தின் அடிப்படையே இறைவனின் வேதமான திருமறைக்குர்ஆனும், அவனால் நபியாக அனுப்பப்பட்ட இறுதித் தூதர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் வழிகாட்டுதலும் மட்டும் தான். இவை அல்லாத எந்தவொரு வழிகாட்டலும் மார்க்கத்தின் பெயரால் கூறப்பட்டால் அவை தெளிவான வழிகேடு ஆகும். அதை நாம் பின்பற்றக்கூடாது. இதுதான் இஸ்லாத்தின் கொள்கை. 

பெண்கள் கத்னா செய்து கொள்ளல் என்ற குழப்பம் ஈராக்கில் மட்டுமல்ல, இந்தியாவிலும் சில பகுதிகளில் வழிகேடர்களால் சொல்லப்படுகின்றன. ஈராக்கில் உள்ளவர்கள் மட்டுமல்ல, உலகிலுள்ள எவர் இஸ்லாமியக் கொள்கை சம்மந்தமாக சொன்னாலும், அது நாம் மேலே சுட்டிக்காட்டியுள்ள இரண்டு அடிப்படை அம்சங்களில் இருந்து தான் வர வேண்டும். அப்படி இல்லாமல் தன்னிச்சையாக தானே ஒன்றை உருவாக்கி அதை இஸ்லாத்தோடு ஒருவர் தொடர்பு படுத்தினால் அதை நாம் ஏற்றுக் கொள்ள மாட்டோம், எதிர்ப்போம். காரணம் அன்று முதல் இன்று வரை எந்தவொரு மாற்றமும் இல்லாமல் இறைவனால் பாதுகாக்கப்படும் தூய்மையான வேதம் திருக்குர்ஆனே எங்களது வேதம்! அதில் புதிதாக ஒன்றை செருகவோ நீக்கவோ முடியாது. கண்டவர்களும் புகுத்திவிட்டு செல்ல, சூழலுக்கு ஏற்ப நீக்கல் செருகல் செய்யப்படும் மூல மொழி அழிந்துபோன பைபிளல்ல எங்கள் வேதம்.  

இந்த அடிப்படையில் பெண்கள் கத்னா செய்தல் என்பது இஸ்லாம் கூறாத ஒரு நடைமுறையாகும். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்தில் வாழ்ந்த எந்த ஒரு பெண்ணும் அவ்வாறு செய்யவும் இல்லை. தமிழக இஸ்லாமியர்களால் இந்த செயல் எதிர்க்கப்படுகிறது எனபதும் குறிப்பிடத்தக்கது. 

எங்கோ ஒரு இஸ்லாம் விளங்கா மடையன் வெளியிட்ட ஃபத்வாவை படித்து விட்டு ஊழையிடும் உமா சங்கர், இயன்றால் இஸ்லாத்தின் மூல ஆதாரங்களில் இருந்து இதை எடுத்துக் காட்டி நிரூபிக்கட்டும்.

அடுத்ததாக தர்க்க ரீதியான பதிலுக்கு வருவோம். இஸ்லாத்தை சார்ந்த ஒரு பகுதியினர் ஒன்றை இஸ்லாம் என்று கூறி செய்து விட்டாலே அது இஸ்லாத்தில் உள்ளதுதான் என்று ஒருவன் கூறினால் அது மடத்தனத்திலும் மடத்தனமாகும். உதாரணத்திற்கு நாம் கிருஸ்துவத்தை பற்றி பேசுகிறோம் என்றால் அதற்கு பைபிளைத் தான் ஆதாரமாக கொண்டு பேச வேண்டும். அது அல்லாமல் தானாக ஒன்றை பிரச்சாரம் செய்து கொண்டு இது கிறிஸ்த்துவத்தில் உள்ளதுதான் என்றால் அது மடமையாகும். 

இன்னும் தெளிவாக விளங்க, அமெரிக்க கிருத்துவ பெண்கள் பெரும்பாலும் தமது தொப்புல்களிலும், தமது மார்புகளிலும், தமது மறை உறுப்புகளிலும் வளையம் பதித்து கொள்ளும் பழக்கம் உடையவர்கள். இந்த செயலை கிருத்தவம் தான் சொல்கிறது என்று அந்த கிருத்தவ பெண்கள் சொன்னால், இதை ஏனைய கிருத்தவர்கள் எப்படி அணுகுவீர்கள்? கிருத்தவத்தவக் கூட்டம் சொன்னாலே அது உணமையான கருத்துதான் என்பீர்களா? அல்லது உண்மை கிறித்தவக் கோட்பாடோடு ஒப்பிட்டு பார்ப்பீர்களா?

இதே நிலைப்பாட்டைத்தான் இஸ்லாத்தோடும் ஒப்பிட்டு பேச வேண்டும். சில கிருத்துவ சபை, பைபிளில் உள்ளதாக சொல்லி ஆணும் ஆணும் திருமணம் செய்வதை அனுமதிக்கிறது. மேலை நாடுகளில் இந்த கேடுகெட்ட செயல் பரவ கிருத்தவ தேவாலயங்களே பெரிதும் காரணமாக திகழ்கின்றன. இந்த கேடுகெட்ட செயலும் கிருத்துவ மதத்தின் பெயரால்தான் பரப்பப்படுகின்றன. 



இது உண்மையில் பைபிளில் கூறப்பட்டுள்ளதா இல்லையா என்பதை வெறு பதிவில் பார்ப்போம். என்றாலும் நாம் கேட்க விரும்புவது, இதுபோன்று மதத்தின் பெயரால் எவன் எதை பரப்பினாலும் அது உண்மைதான் என்று ஏற்றுக் கொள்வது அறிவுடைமையா??? அல்லது அதுபற்றி அந்த மதத்தின் மூல அடிப்படைகளில் ஆய்வு செய்து உண்மையை அறிவது அறிவுடைமையா??? 

இஸ்லாத்தின் மீதுள்ள கால்புணர்வில் ஏதோ ஒரு பகுதி மக்கள் செய்யும் மடத்தனத்தை இஸ்லாத்தோடு தொடர்பு படுத்தி விமர்சிக்கும் விஞ்ஞானி உமா சங்கரே, ஓரினச்சேர்க்கையை கிருத்துவம் தான் சொல்கிறது என்று சில கிருத்துவ பாதிரிகள் கூறும் கருத்தையும் ஏற்றுக் கொள்ளுங்கள்...! உங்கள் சபைகளில் இதை மக்களுக்கு ஆர்வப்படுத்துங்கள்...! செய்வீர்களா??? அதை எப்படி கிருத்துவத்தோடு தொடர்பு படுத்த முடியும் என்று சொல்வீர்கள் என்றால், இதே நிலைப்பாட்டை அனைத்து மதத்திற்கும் கொடுத்து விட்டு மூடிக்கொள்ளும் உமது திருவாயை.

அன்புள்ள சகோதரர்களே சகோதரிகளே! நான் வைத்திருக்கும் இந்த பதில் வாதத்தைப் படிக்கும் நபர்கள் நிச்சயம் எதார்த்தத்தை புரிந்து கொள்வார்கள் என்று நம்புகிறேன், உமா சங்கர் தனது மதத்தை மக்களுக்கு மேன்மையாக காட்டுவதற்காக, கைகளில் கிடைக்கும் ஆதாரமற்ற தகவல்களை எல்லாம் சொல்லி இன்னபிற மதங்களை கொச்சைப்படுத்தும் ஒரு கள்ளக்கிருத்து ஆவார். இன்னும் இதுபோன்று எவர் தவறாக விமர்சிப்பது நமது காதுகளுக்கு எட்டினாலும் அவர்களுக்கு இறைவனின் அருளால் சாட்டையடி(பதில்)கள் காத்துக் கொண்டிருக்கின்றன என்பதை தெரியப்படுத்தி இந்த பதில் பதிவை மூடுகிறோம்....!

No comments:

Post a Comment