தினம் ஒரு நபிமொழி


இது அனுமதிக்கப்பட்டது; இது தடுக்கப்பட்டது என்று உங்கள் நாவுகள் வர்ணிக்கும் பொய்யை அல்லாஹ்வின் மீது இட்டுக்கட்டிக் கூறாதீர்கள்! அல்லாஹ்வின் மீது பொய்யை இட்டுக்கட்டியோர் வெற்றி பெறமாட்டார்கள். (அல் குர்ஆன் 16:116).

Sunday, February 7, 2016

தொழுகையாளிக்கு கிடைக்கும் சிறந்த கூலிகள்!



அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

ஒரு முஸ்லிமான அல்லது முஃமினான (இறைநம்பிக்கை கொண்ட) அடியார் அங்கத்தூய்மை (உளூ) செய்யும்போது முகத்தைக் கழுவினால், கண்களால் பார்த்துச் செய்த பாவங்கள் அனைத்தும் (முகத்தைக் கழுவிய) நீருடன் அல்லது நீரின் கடைசித் துளியுடன் முகத்திலிருந்து வெளியேறுகின்றன.

அவர் கைகளைக் கழுவும்போது கைகளால் பற்றிச் செய்திருந்த பாவங்கள் அனைத்தும் (கைகளைக் கழுவிய) தண்ணீருடன் அல்லது தண்ணீரின் கடைசித் துளியுடன் வெளியேறுகின்றன.

அவர் கால்களைக் கழுவும்போது, கால்களால் நடந்து செய்த பாவங்கள் அனைத்தும் (கால்களைக் கழுவிய) நீரோடு அல்லது நீரின் கடைசித்துளியோடு வெளியேறுகின்றன. 

இறுதியில், அவர் பாவங்களிலிருந்து தூய்மை அடைந்தவராக (அந்த இடத்திலிருந்து) செல்கிறார்.

அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி),
நூல் : முஸ்லிம் 412.

அன்புள்ள இஸ்லாமிய சகோதர சகோதரிகளே! நம்மில் எத்துனை நபர்களுக்கு இந்த செய்தி தெரியும்????

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறும் இந்த பாக்கித்தை தொழுகையாளியைத் தவிர வேறு ஒருவர் பெற முடியாது, என்றாலும் அந்த தொழுகையில் நாம் போடும்போக்காகத்தான் இருக்கிறோம். இதுபோன்ற அளப்பரிய நன்மைகளை இழந்து கொண்டுதான் இருக்கிறோம். காரணம் தொழுகையால் நமக்கு கிடைக்கும் நன்மைகளை நாம் சரியாக அறிந்து கொள்ளவில்லை.

வேதனை, திருமண மண்டபத்தில் போடப்படும் ஆஃபர் பொருட்களை வாங்குவதற்கு முண்டியடித்து செல்லும் இஸ்லாமிய பெண்கள் கூட்டத்தை நம்மால் பார்க்க முடிகிறது. ஆனால் மிக மிக சிறியதொரு வணக்கத்திற்கு இறைவன் அள்ளித்தூவும் நன்மைகளை அள்ளிக் கொள்ள ஏன் என் இஸ்லாமிய பெண்களுக்கு மனம் வருவதில்லை????

10 நிமிட வணக்கத்திற்கு இறைவன் வழங்கும் மிக உயர்ந்த பாக்கியங்களை அடைந்துகொள்ள, ஒரு 10 நிமிடம் இறைவனை நினைவுகூர ஏன் வியாபாரிகளுக்கு மனம் வருவதில்லை????

உங்கள் இறைவன் உங்களுக்கு வாக்களித்திருப்பது, நீங்கள் எதனை திரட்டுவதற்காக அற்ப 10 நிமிடம் கூட  இறைவனை நினைவுகூர மறக்கிரீர்களோ அதைவிட அற்பமானதா???? 

இல்லை என் அன்பு இஸ்லாமியர்களே! இறைவன் வாக்களிக்கும் ஒவ்வொன்றும் இந்த உலகிலுள்ள எதனோடும் ஒப்பிட முடியாதவைகளாகும். இந்த உலகின் அற்ப இலாபத்திற்காக நிலையான மறுமை வாழ்வை இழந்து நிற்காதே தோழா! 

எழுந்து வா! இறைவனின் பக்கம் மீண்டுவிடு!

No comments:

Post a Comment