அல்லாஹ்வின்
தூதர் (ஸல்) அவர்கள் "ஓரிரு கவளம் உணவை, அல்லது ஓரிரு பேரீச்சம் பழங்களைப்
பெறுவதற்காக இவ்வாறு மக்களிடம் அலைபவன் ஏழையல்லன்" என்று கூறினார்கள்.
மக்கள்,
"அப்படியானால் ஏழை என்றால் யார், அல்லாஹ்வின்
தூதரே?" என்று கேட்டார்கள்.
அதற்கு அல்லாஹ்வின் தூதர்
(ஸல்) அவர்கள், "(தன் தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்ள)
எந்தச் செல்வத்தையும் அவன் பெற்றிருக்கமாட்டான்;
அவனது நிலையை
அறிந்து அவனுக்குத் தர்மமும் வழங்கப்படுவதில்லை. தானும் வலியச்சென்று மக்களிடம் கேட்கமாட்டான்
(அவனே உண்மையான ஏழை)" என்று விடையளித்தார்கள்.
அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி)
முஸ்லிம் 1879.
No comments:
Post a Comment