தினம் ஒரு நபிமொழி


இது அனுமதிக்கப்பட்டது; இது தடுக்கப்பட்டது என்று உங்கள் நாவுகள் வர்ணிக்கும் பொய்யை அல்லாஹ்வின் மீது இட்டுக்கட்டிக் கூறாதீர்கள்! அல்லாஹ்வின் மீது பொய்யை இட்டுக்கட்டியோர் வெற்றி பெறமாட்டார்கள். (அல் குர்ஆன் 16:116).

Friday, October 14, 2016

மக்கள் கூடும் இடத்தில் தொழுகை - 1

மக்கள் தங்களது தேவைகளை நிறைவேற்றுவதற்காக பஜார்களுக்கு செல்கின்ற பொழுது அதிக பட்சமாக அவர்கள் தொழுகையை நிறைவேற்றுவது கிடையாது. தொழுகை நேரம் கடந்த பின்னர் மிகவும் உடல் சோர்வோடு அப்படியே வீடு சென்று உறங்கி விடும் நபர்கள் தான் நம்மில் அதிகம் உள்ளனர். 

நமது பலவீனத்தின் காரணத்தினால் இவைகள் ஏற்படுகின்றன என்பது உண்மை. ஆனால் இவற்றை சொல்லி நாம் இறைவனிடம் தப்பிக்க முடியாதல்லவா.

ஆகவே இதற்கான மாற்று வழியை அறிந்து அரபு நாடுகளின் சில பகுதிகளில் மக்கள் கூடும் இடங்கள் தோறும் பாங்கு அழைப்பு கொடுக்கப்பட்டு தொழுகை நடத்தப்படுகிறது. அதிகமான மக்கள் அந்த தொழுகைகளில் கலந்தும் கொள்கின்றனர்.

இதுபோன்ற ஏற்பாடுகளை இயன்றால் நாமும் செய்யலாம் என்பது எமது அவா.

No comments:

Post a Comment