நோன்பு துஆ
2010 حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدِ بْنِ يَحْيَى أَبُو مُحَمَّدٍ حَدَّثَنَا عَلِيُّ بْنُ الْحَسَنِ أَخْبَرَنِي الْحُسَيْنُ بْنُ وَاقِدٍ حَدَّثَنَا مَرْوَانُ يَعْنِي ابْنَ سَالِمٍ الْمُقَفَّعَ قَالَ رَأَيْتُ ابْنَ عُمَرَ يَقْبِضُ عَلَى لِحْيَتِهِ فَيَقْطَعُ مَا زَادَ عَلَى الْكَفِّ وَقَالَ كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا أَفْطَرَ قَالَ ذَهَبَ الظَّمَأُ وَابْتَلَّتْ الْعُرُوقُ وَثَبَتَ الْأَجْرُ إِنْ شَاءَ اللَّهُ رواه ابوداود
நபிகளார் நோன்பு துறக்கும் போது, தஹபல் ளமவு வப்தல்லித்தில் உரூக்கு வஸபத்துல் அஜ்ரு இன்ஷா அல்லாஹ் (தாகம் தணிந்தது, நரம்புகள் நனைந்தன, அல்லாஹ் நாடினால் கூலியும் கிடைத்துவிடும்) என்று கூறினார்கள்.
நூல்: அபூதாவூத் (2010), தாரகுத்னீ(2302), பைஹகீ (7922), முஸ்னத் பஸ்ஸார் (5395), ஹாகிம் (1536), ஸுனனுல் குப்ரா-நஸயீ (3329).
இந்த செய்தி இடம் பெற்ற அனைத்து நூல்களிலும்
'மர்வான் பின் ஸாலிம் அல்முகஃப்பவு' என்பவர் இடம் பெறுகிறார். இவர் யாரென அறியப்படாதவர்.
ஆகவே இது பலவீனமான செய்தியாகும். நோன்பு திறக்கும்போது ஓதும் துஆ என்று பிரத்தியேக துஆ ஒன்றுமில்லை.
சாப்பிடத் துவங்கும் முன் ஓதும் பிஸ்மில்லாஹ் போதுமானது.
No comments:
Post a Comment