தினம் ஒரு நபிமொழி


இது அனுமதிக்கப்பட்டது; இது தடுக்கப்பட்டது என்று உங்கள் நாவுகள் வர்ணிக்கும் பொய்யை அல்லாஹ்வின் மீது இட்டுக்கட்டிக் கூறாதீர்கள்! அல்லாஹ்வின் மீது பொய்யை இட்டுக்கட்டியோர் வெற்றி பெறமாட்டார்கள். (அல் குர்ஆன் 16:116).

Thursday, June 15, 2017

லைலத்துல் கத்ர் இரவில் ஓத வேண்டிய துஆ!



லைலத்துல் கத்ர் இரவை தேடுகின்ற கடைசி ஒற்றைப்படை இரவுகளில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கேட்ட பிரார்த்தனை!

ஆடியோ வடிவம்,
மனனமிட்டு கொள்ளுங்கள்!
கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்


Saturday, June 10, 2017

பலவீனமான செய்தி



நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
யார் ஒருவர் பார்வையற்றவருக்காக 40 அடிவரை வழிகாட்டுவாரோ அவருக்கு சுவர்க்கம் வாஜிபாகிவிடும்.

மற்றொரு ரிவாயத்தில் அவருடைய முன் செய்த பாவங்கள் மன்னிக்கப்படுகிறதுஎன்றும் இடம் பெறுகிறது.
அறிவிப்பவர் : இப்னு உமர் (ரலி), நூல் : தப்ரானி.

இந்த செய்தி ஹதீஸ் துறை அறிஞர்களால் கடுமையாக விமர்சிக்கப்பட்ட பலவீனமான செய்தியாகும்.

இந்த செய்தியின் அறிவிப்பாளர் தொடரில் இடம்பெறும் அலீ இப்னு உர்வா என்பவர் பொய்யர் என விமர்சிக்கப்பட்டவர் ஆவார். மேலும் இவரோடு தொடர்பு படுத்தி வரும் அறிவிப்பாளர் தொடர் சார்ந்த செய்திகள் ஏற்றுக்கொள்ளப்படாது என்றும் விமர்சிக்கப்பட்டுள்ளது.

(ஸில்ஸிலத்துல் அஹாதீசுஸ் ளஈஃபா 139/10, ஷுஃபுல் ஈமான் 96/10, மஜ்மவுஸ் ஸவாயித் வ மன்பவுஃப் ஃபவாயித் 138/3, அல்ஜாமிவுஸ் ஸஃகீர் 12500, ஜாமிவுல் அஹாதீஸ் 111/21)

இறைவனது திருமுகத்தை நாடி நாம் செய்யும் எந்த நன்மையாக இருந்தாலும் அதற்கு நிச்சயமாக இறைவனிடம் கூலி உண்டு. அந்த அடிப்படையில் ஒரு மனிதர் பார்வையற்ற நபருக்காக உதவி செய்கிறார் என்றால் நிச்சயமாக இறைவன் நாடுகின்ற அளவு அவருக்கு கூலி கொடுப்பான்.

தாகித்திருந்த ஒரு நாய்க்கு நீர் புகட்டிய காரணத்தால் விபச்சாரம் செய்து வந்த பெண்ணிற்கு கூட இறைவனது மன்னிப்பு கிடைத்துள்ளது. ஆகவே இறைவனது திருமுகத்திற்காக பிற உயிரினங்கள் மீது அன்பு காட்டுதல் கூட நமது பாவங்கள் மன்னிக்கப்பட அல்லது நம்மை சுவனத்திற்கு அழைத்துச்செல்ல போதுமானதாக இருக்கலாம். ஆனால் அதை இறைவன் தான் தீர்மானிப்பான்.

அதேபோன்று தான் பார்வையற்ற மனிதர்கள் மீது இறக்கம் செலுத்தி உதவுதலுக்கும் இறைவன் நாடினால் சுவனம் தரலாம். அதை நாம் உறுதிபட சொல்ல முடியாது.

ஆனால் நாம் மேலே சுட்டிக்காட்டிய செய்தி பார்வையற்ற நபர்களுக்கு உதவி செய்வதால் இறைவனது மன்னிப்பும் சுவனமும் கிடைக்கும் என்பதை உறுதிப்பட சொல்வதைப் போன்று வருகிறது. இது பலவீனமான செய்தி என்பதால் இந்த செய்தியை நம்பி நாம் அமல் செய்ய இயலாது.

Thursday, May 4, 2017

இடது கையை தரையில் ஊன்றி உட்காரலாமா?



பொதுவாக நாம் தரையில் அமரும் போது கையை ஊன்றி அமர்வது வழக்கம். இவ்வாறு அமரும் போது இடது கையைத் தரையில் ஊன்றி அமர்வதற்கு ஹதீஸ்களில் தடை உள்ளது எனச் சிலர் கூறுகின்றனர்.
தொழுகையின் போது இடது கையைத் தரையில் ஊன்றி அமர்வதற்குத் தடை உள்ளதாக ஹதீஸ்களில் காணப்படுகின்றது. ஆனால் தொழுகைக்கு வெளியே இவ்வாறு ஊன்றி உட்கார்வதை தடை செய்தது தொடர்பாக வரும் அனைத்து அறிவிப்புகளும் பலவீனமானவையாகவே உள்ளன.
இது தொடர்பான செய்திகளையும், அந்த அறிவிப்புகள் எவ்வாறு பலவீனமாக உள்ளன என்பதையும் காண்போம்.
அபூதாவூதின் அறிவிப்பு :
அஷ்ஷரீத் பின் ஸுவைத் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள் :
நான் எனது இடது கையை எனது முதுகுக்குப் பின்புறமாக வைத்து என்னுடைய கையின் உள்ளங்கையை ஊன்றி உட்கார்ந்திருந்த நிலையில் நபி (ஸல்) அவர்கள் என்னைக் கடந்து சென்றார்கள். ‘‘அல்லாஹ் எவர்கள் மீது கோபம் கொண்டானோ அவர்களின் இருப்பைப் போன்று நீ அமர்ந்திருக்கின்றாயா? என்று கேட்டார்கள்.
நூல் : அபூதாவூத். (4850)
இடது கையை முதுகிற்குப் பின்புறமாக ஊன்றி உட்காருவது கூடாது என்று கூறுபவர்கள் மேற்கண்ட செய்தியைத் தான் ஆதாரமாகக் காட்டுகின்றனர்.
ஆனால் மேற்கண்ட அறிவிப்பு பலவீன மானதாகும். இதன் அறிவிப்பாளர் தொடரில் ‘‘இப்னு ஜுரைஜ் என்பார் இடம் பெற்றுள்ளார். இவர் முதல்லிஸ் ஆவார். அதாவது அதாவது தம்முடைய ஆசிரியரிடமிருந்து அவர் செவியேற்காத செய்திகளையும் செவியேற்றதைப் போன்று பொருள் தரக்கூடிய வார்த்தைகளைப் பயன்படுத்தி அறிவிப்பவர் ஆவார். இத்தகைய அறிவிப்பாளர்கள் நேரடியாகச் செவியேற்றதற்குரிய வார்த்தைகளைப் பயன்படுத்தி அறிவித்தால்தான் அது ஆதாரமாக ஏற்றுக் கொள்ளப்படும.
இப்னு ஜுரைஜ் என்பார் தத்லீஸ் செய்யக் கூடியவர் என்று பல அறிஞர்கள் விமர்சனம் செய்துள்ளனர்.
இமாம் அஹ்மத் கூறுகிறார் : ‘‘இன்னார் கூறினார், இன்னார் கூறினார் என்றோ ‘‘எனக்கு அறிவிக்கப்பட்டது என்றோ இப்னு ஜுரைஜ் அறிவித்தால் நிராகரிக்கத்தக்க செய்திகளைக் கொண்டுவருவார். ‘‘(அஹ்பரனீ) இன்னார் எனக்கு அறிவித்தார் என்றோ (ஸமிஃத்து) ‘‘நான் செவியேற்றேன் என்றோ கூறினால் அதுதான் அவர் (செய்திகளில்) உனக்கு போதுமானதாகும். .
இப்னு ஜுரைஜ் ‘‘உண்மையாளர் ஆவார். அவர் ‘‘ஹத்தஸனீ என்று கூறினால் அது அவர் நேரடியாகச் செவியேற்றதாகும். அவர் ‘‘அஹ்பரனீ என்று கூறினால் அது அவர் ஆசிரியரிடம் படித்துக் காட்டியதாகும். அவர் ‘‘கால (சொன்னார்) என்று கூறினால் அது அவர் செவியேற்காதவையும், அல்லது ஆசிரியரிடம் படித்துக் காட்டாதவையும் ஆகும்.
இமாம் தாரகுத்னீ கூறுகிறார்: இப்னு ஜுரைஜ் தத்லீஸாக அறிவிப்பவற்றை விட்டும் தூர விலகி விடுங்கள். ஏனெனில் அவர் மிக மோசமாகத் தத்லீஸ் (இருட்டடிப்பு) செய்பவர் ஆவார். அவர் குறை கூறப்பட்ட அறிவிப்பாளர்களிமிடருந்து தாம் செவியேற்றவற்றில் தான் தத்லீஸ் செய்வார்.
இவர் தத்லீஸ் செய்பவராக இருந்தார் என இமாம் இப்னு ஹிப்பான் அவர்களும் விமர்சித்துள்ளார்கள்.
நூல் : தஹ்தீபுத் தஹ்தீப் . பாகம் 6 பக்கம் 359
மேற்கண்ட அறிஞர்களின் விமர்சனங்களிலிருந்து இப்னு ஜுரைஜ் தம்முடைய ஆசிரியரிடமிருந்து நேரடியாக செவியேற்றதற்கான வாசகங்களைப் பயன்படுத்தினால் தான் அது ஸஹீஹான ஹதீஸாகும். இல்லையென்றால் அது பலவீனமானதாகும் என்பதை நாம் அறிந்து கொள்ள முடிகிறது.
ஆனால் மேற்கண்ட செய்தியின் அனைத்து அறிவிப்புகளிலும் இப்னு ஜுரைஜ் நேரடியாகச் செவியேற்றதற்கான எந்த வார்த்தைகளும் வரவில்லை.
இந்தச் செய்தி இடம் பெற்ற அனைத்து அறிவிப்புகளையும் கீழே கொடுத்துள்ளோம்.
அஹ்மதுடைய அறிவிப்பு
مسند أحمد ط الرسالة (32/ 204)
19454 - حَدَّثَنَا عَلِيُّ بْنُ بَحْرٍ، حَدَّثَنَا عِيسَى بْنُ يُونُسَ، أَخْبَرَنَا ابْنُ جُرَيْجٍ، عَنْ إِبْرَاهِيمَ بْنِ مَيْسَرَةَ، عَنْ عَمْرِو بْنِ شَرِيدٍ، عَنْ أَبِيهِ الشَّرِيدِ بْنِ سُوَيْدٍ قَالَ: “ مَرَّ بِي رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَأَنَا جَالِسٌ هَكَذَا، وَقَدْ وَضَعْتُ يَدِي الْيُسْرَى خَلْفَ ظَهْرِي، وَاتَّكَأْتُ عَلَى أَلْيَةِ يَدِي فَقَالَ: “ أَتَقْعُدُ قَعْدَةَ الْمَغْضُوبِ عَلَيْهِمْ 

பைஹகி குப்ராவின் அறிவிப்பு
سنن البيهقي الكبرى (3/ 236)
 5713 - أخبرنا الحسين بن محمد الفقيه أنبأ محمد بن بكر ثنا أبو داود ثنا علي بن بحر ثنا عيسى بن يونس ح وأخبرنا علي بن أحمد بن عبدان أنبأ أحمد بن عبيد الصفار ثنا عبيد بن شريك ثنا عبد الوهاب ثنا عيسى بن يونس عن بن جريج عن إبراهيم بن ميسرة عن عمرو بن الشريد عن أبيه الشريد بن سويد قال : مر بي رسول الله صلى الله عليه و سلم وأنا جالس هكذا وقد وضعت يدي اليسري خلف ظهري واتكأت على ألية يدي فقال أتقعد قعدة المغضوب عليهم لفظ حديث علي بن بحر وفي رواية عبد الوهاب قال وأنا جالس في المسجد واضع يدي اليسرى خلف ظهري متكىء على أليه يدي قال أبو داود قال القاسم أليه الكف أصل الإبهام وما تحته

அல்ஆதாப் லில்பைஹகியின் அறிவிப்பு
الآداب للبيهقي (ص: 105)
256 - أَخْبَرَنَا أَبُو عَلِيٍّ الرُّوذْبَارِيُّ، أَنْبَأَنَا أَبُو بَكْرِ بْنُ دَاسَةَ، حَدَّثَنَا أَبُو دَاوُدَ، حَدَّثَنَا عَلِيُّ بْنُ بَحْرٍ، حَدَّثَنَا عِيسَى بْنُ يُونُسَ، حَدَّثَنَا ابْنُ جُرَيْحٍ، عَنْ إِبْرَاهِيمَ بْنِ مَيْسَرَةَ، عَنْ عَمْرِو بْنِ الشَّرِيدِ، عَنْ أَبِيهِ الشَّرِيدِ بْنِ سُوَيْدٍ قَالَ: مَرَّ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَأَنَا جَالِسٌ هَكَذَا، وَقَدْ وَضَعْتُ يَدِي الْيُسْرَى خَلْفَ ظَهْرِي وَاتَّكَأْتُ عَلَى أَلْيَةِ يَدِي فَقَالَ: «أَتَقْعُدُ قِعْدَةَ الْمَغْضُوبِ عَلَيْهِمْ؟யு . قَالَ أَبُو دَاوُدَ، وَقَالَ الْقَاسِمُ: أَلْيَةُ الْيَدِ: الْكَفُّ أَصْلُ الْإِبْهَامِ وَمَا تَحْتَهُ

இப்னு ஹிப்பான் அறிவிப்பு
صحيح ابن حبان بتحقيق الأرناؤوط - مطابق للمطبوع (12/ 488)
 5674 - أخبرنا أبو عروبة بحران قال : حدثنا المغيرة بن عبد الرحمن الحراني قال : حدثنا عيسى ين يونس عن ابن جريج عن إبراهيم بن ميسرة عن عمرو بن الشريد عن أبيه الشريد بن سويد قال : مر بي رسول الله صلى الله عليه و سلم وأنا جالس قد وضعت يدي اليسرى خلف ظهري واتكأت فقال النبي صلى الله عليه و سلم : ( أتقعد قعدة المغضوب عليهم )  قال ابن جريج : وضع راحتيه على الأرض وراء ظهره

அல்முஃஜமுல் கபீர் லித்தப்ரானியின் அறிவிப்பு
المعجم الكبير للطبراني (6/ 478، بترقيم الشاملة آليا)
7092 - حَدَّثَنَا مُحَمَّدُ بن عَمْرِو بن خَالِدٍ الْحَرَّانِيُّ، حَدَّثَنِي أَبِي، حَدَّثَنَا عِيسَى بن يُونُسَ، عَنِ بن جُرَيْجٍ، عَنْ إِبْرَاهِيمَ بن مَيْسَرَةَ، عَنْ عَمْرِو بن الشَّرِيدِ، عَنْ أَبِيهِ، أَنّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَرَّ بِهِ وَهُوَ قَاعِدٌ هَكَذَا مُتَّكِئٌ عَلَى أَلْيَةِ يَدِهِ خَلْفَ ظَهْرِهِ، فَقَالَ:”هَذِهِ قَعْدَةُ الْمَغْضُوبِ عَلَيْهِمْ”.

அல்முஃஜமுல் கபீர் லித்தப்ரானியின் மற்றொரு அறிவிப்பு
المعجم الكبير للطبراني (6/ 478، بترقيم الشاملة آليا)
7093 - حَدَّثَنَا الْحُسَيْنُ بن إِسْحَاقَ التُّسْتَرِيُّ، حَدَّثَنَا يَحْيَى الْحِمَّانِيُّ، حَدَّثَنَا مِنْدَلٌ، عَنِ ابْنِ جُرَيْجٍ، عَنْ إِبْرَاهِيمَ بن مَيْسَرَةَ، عَنْ عَمْرِو بن الشَّرِيدِ، عَنْ أَبِيهِ، قَالَ: أَبْصَرَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ رَجُلا قَدْ جَلَسَ , فَاتَّكَأَ عَلَى يَدِهِ الْيُسْرَى، فَقَالَ:”هَذِهِ جِلْسَةُ الْمَغْضُوبِ عَلَيْهِمْ”.
அல்அஹ்காமுஸ் ஷரயிய்யா லில் இஸ்பீலி
الأحكام الشرعية للإشبيلي 581 (3/ 125)
أبو داود : حدثنا علي بن بحر ، حَدَّثَنا عيسى بن يونس ، حَدَّثَنا ابن جريج ، عن إبراهيم بن ميسرة ، عن عمر بن الشريد ، عن أبيه الشريد بن سويد قال : مر بي رسول الله صلى الله عليه وسلم وأنا جالس هكذا ، وقد وضعت يدي اليسرى خلف ظهري ، واتكأت على ألية يدي ، فقال : أتقعد قعدة المغضوب عليهم ؟.

முஸன்னஃப் அப்துர் ரஸ்ஸாக் அறிவிப்பு
مصنف عبد الرزاق (2/ 198)
 3057 - عبد الرزاق عن بن جريج قال أخبرني إبراهيم بن ميسرة أنه سمع عمرو بن الشريد يخبر عن النبي صلى الله عليه و سلم أنه كان يقول في وضع الرجل شماله إذا جلس في الصلاة هي قعدة المغضوب عليهم

தொழுகையில் இருப்பில் இருப்பவர் தன்னுடைய இடது கையை (பின்புறமாக ஊன்றி) வைக்கும் விசயத்தில் ‘‘இது எவர்கள் மீது கோபம் கொள்ளப்பட்டதோ அவர்களுடைய இருப்பாகும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறுபவர்களாக இருந்தார்கள்.
அறிவிப்பவர்: அம்ரு இப்னு அஸ்ஸரீத்
நூல்: முஸன்னஃப் அப்துர் ரஸ்ஸாக் (3057)
மேற்கண்ட அறிவிப்பில் இப்னு ஜுரைஜ் தம்முடைய ஆசிரியரான ‘‘இப்ராஹிம் இப்னு மய்ஸரா என்பாரிடமிருந்து நேரடியாக கேட்டதற்கான ‘‘அஹ்பரனீ என்ற வார்த்தையைப் பயன்படுத்தி அறிவித்ததாக வந்துள்ளது.
ஆனால் மேற்கண்ட அறிவிப்பு நபித்தோழர் விடுபட்ட முர்ஸலான அறிவிப்பாகும். அம்ரு இப்னு அஸ்ஸரீத் என்பார் நபியவர்களிடமிருந்து அறிவிக்கின்றார். இவர் தாபியீ (இரண்டாம் தலைமுறை) ஆவார். இவர் நபியவர்களைச் சந்தித்தவர் கிடையாது. எனவே இது அறிவிப்பாளர் தொடர் முறிவடைந்த பலவீனமான செய்தியாகும்.
ஒரு வாதத்திற்கு மேற்கண்ட செய்தியை ஸஹீஹ் என்று வைத்துக் கொண்டாலும் மேற்கண்ட செய்தியில் தொழுகையின் இருப்பில் கைகளை ஊன்றி வைப்பது கூடாது என்றுதான் வந்துள்ளது. எனவே தொழுகை அல்லாத நிலைகளில் அவ்வாறு ஊன்றி இருப்பதைத் தவறு என்று கூறமுடியாது.
தொழுகையின் அத்தஹிய்யாத் இருப்பில் இடது கையைப் பின்புறமாக ஊன்றி இருப்பதைத் தான் நபியவர்கள் தடைசெய்துள்ளார்கள் என்பது ஆதாரப்பூர்வமான அறிவிப்புகளில் மிகத் தெளிவாக வந்துள்ளது.
இப்னு உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:
தொழுகையின் இருப்பின் போது ஒருவர் தனது இரண்டு கைகளின் மீது ஊன்றி இருப்பதை நபியவர்கள் தடை செய்தார்கள்.
நூல்: அஹ்மத் (6347)
மேற்கண்ட  ஹதீஸ் ஸஹீஹானதாகும்.
பின்வரும் அறிவிப்பில் இடது கையின் மீது ஊன்றி இருப்பதைத் தடை செய்தார்கள் என்று வந்துள்ளது.
தொழுகையிலே தமது இடது கையின் மீது ஊன்றி இருந்த ஒரு  மனிதரை நபியவர்கள் தடுத்து ‘‘இது யூதர்களின் தொழுகை என்று கூறினார்கள். 
அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி)
நூல்: ஹாகிம் (1007)
இதுவும் அறிவிப்பாளர்கள் தொடர் வலிமையான ஸஹீஹான ஹதீஸ் ஆகும்.
எனவே தொழுகையின் இருப்பில் இடது கையை ஊன்றி அமர்வது தான் தடை செய்யப்பட்டுள்ளதே தவிர தொழுகை அல்லாத நேரங்களில் அவ்வாறு இருப்பது தவறு கிடையாது. அது தொடர்பாக வரும் செய்திகள் பலவீனமானவையாகும். 

அப்துந்நாசர் Misc

Monday, May 1, 2017

இறைவனது உதவி பெற உறுதியான எண்ணம் வேண்டும்!



தமிழகமெங்கும் காணப்படும் வரட்சியாலும் வீதிகளில் நடமாட முடியாத அளவிலான வெப்பத்தாக்கத்தாலும் ஆங்காங்கே நம் மக்கள் மழைத்தொழுகை நடத்தி வருவதை நாம் அறிவோம். நபி வழியில் தான் மழைத்தொழுகை அமைக்கப்பட வேண்டும் என்று தொழுகை நடத்தப்படுவதற்கு முன்னாள் அதன் சட்டங்கள் அனைத்தையும் சொல்லிக்கொடுக்கும் இமாம்கள் பெரும்பாலும் மழைத்தொழுகையில் பங்கேற்கும் மக்களின் எண்ணங்களும் பிரார்த்தனைகளும் எப்படி இருக்க வேண்டும் என்பதை கற்றுக்கொடுப்பதில்லை என்றே நான் கருதுகிறேன்.

தொழுகை சட்டத்தை அறிந்து வைத்திருப்பதை விட அந்த தொழுகையில் பங்கேற்கும் நபர்களின் எண்ணங்கள் சீர் படுத்தப்படுவதென்பது மிக அவசியமான ஒன்று ஆகும். காரணம் அதிகமான மக்கள் மழைத்தொழுகை என்ற அழைப்பை கேள்வி பட்டதும் ஏதோ ஒரு சடங்குக்காக அதில் பங்கேற்பது போன்று தான் கலந்து கொள்கிறார்கள். இந்த தொழுகையின் மூலம் மழைப்பொழியும் என்பது உறுதி இல்லை என்றாலும் ஒரு கடமைக்கு இதையும் கூடுதலாக நிறைவேற்றி பார்ப்போம் என்ற எண்ணத்தில் தான் கலந்து கொள்கிறார்கள். உண்மையில் இதுபோன்ற எண்ணத்தில் கூட்டப்படும் கூட்டத்தால் இறைவனது உதவி கிடைக்காமல் போவது தான் அதிகம்.

முதலில் நாம் ஏன் மழைத்தொழுகை என்ற பிரார்த்தனையை மேலிட நேரிடுகிறது என்பதை ஒரு முஸ்லிம் சிந்திக்க வேண்டும். மனித சமூகமே ஒன்று திரண்டு முயற்சித்தாலும் தாமாக ஏற்படுத்திக் கொள்ள முடியாத ஒரு அருள் தான் மழை என்பது. அந்த மழை சமீப காலமாக இல்லாத காரணத்தால் எவ்வளவு பெரிய இழப்புக்களை நாம் சந்தித்து கொண்டிருக்கிறோம். இந்த நிலை தொடருமென்றால் உலகில் ஒவ்வொரு பகுதியாக பல அழிவுகளை நாம் சந்திக்க வேண்டி இருக்கும். இந்த நிலையில் இருந்து நம்மை பாதுகாக்க எந்த அரசாங்கத்தாலோ மேதையாலோ செல்வந்தனாலோ முடியவே முடியாது. இந்த நிலை நீடிக்காமல் நம்மை இதிலிருந்து பாதுகாக்க இறைவன் ஒருவனால் மட்டுமே முடியும். அந்த இறைவனிடம் உதவி தேடத்தான் நாம் அழைக்கப்பட்டிருக்கிறோம். நம் இறைவன் மட்டும் உதவி செய்யாமல் விட்டு விடுவான் என்றால் நிச்சயமாக அழிவுகள் பலவற்றை நாம் தொடராக சந்திக்க வேண்டும் என்ற அச்ச உணர்வுகள் தான் நாம் மழைத்தொழுகை நடத்துவதற்கான பிரதான காரணம். ஆகவே இந்த அச்ச உணர்வுகளும், அல்லாஹ் நிச்சயமாக உதவி செய்தே தீருவான் என்ற உறுதியும் மழைத்தொழுகையில் கலந்து கொள்ளும் ஒவ்வொரு முஸ்லிமின் உள்ளத்தையும் பலமாக ஆட்கொண்டிருக்க வேண்டும்.

இந்த தருணத்தை எளிய முறையில் விளங்கப்படுத்த திருமறையில் அல்லாஹ் கூறும் அழகிய சம்பவத்தை நினைவு படுத்துகிறேன்.

அல்லாஹ் கூறுகிறான்:

மீனுடையவர் (யூனுஸ்) கோபித்துக் கொண்டு சென்றார். "அவர் மீது நாம் சக்தி பெற மாட்டோம்'' என்று நினைத்தார். "உன்னைத் தவிர வணக்கத்திற்குரியவன் யாருமில்லை. நீ தூயவன். நான் அநீதி இழைத்தோரில் ஆகி விட்டேன்'' என்று இருள்களிலிருந்து அவர் அழைத்தார். அவரது பிரார்த்தனையை ஏற்றுக் கொண்டோம். கவலையிலிருந்து அவரைக் காப்பாற்றினோம். இவ்வாறே நம்பிக்கை கொண்டோரைக் காப்பாற்றுவோம்.
திருக்குர்ஆன் 21:87,88.

யூனுஸ் நபியவர்கள் இறைவனை கோபித்து கொண்டு சென்ற போது கடலில் ஒரு மிகப்பெரிய மீனுடைய வயிற்றில் சிக்கிய தருணத்தை அல்லாஹ் முஃமின்களுக்கு நினைவு படுத்துகிறான். 

ஆழமான கடல் அதில் வாழும் ஒரு பெரிய மீனின் வயிற்றில் ஒருவர் சிக்கினால் உண்மையில் அவருக்கு உதவி செய்ய எவராலும் முடியாது இறைவன் ஒருவனைத் தவிர. அந்த நிலை தொடருமென்றால் சில மணி நேரங்களில் அவர் இறந்துபோக வேண்டும் என்பது நியதி. ஆனால் யூனுஸ் நபியவர்கள் தமக்கு இறைவனைத்தவிர வேறு எவராலும் உதவ முடியாது என்பதை உணர்ந்து, எவராலும் செவியுற முடியாத ஒரு இடத்தில் இருந்து இறைவனை அழைக்கிறார். இறைவன் பதில் சொல்கிறான் நாம் அவரது அழைப்பை ஏற்று அவருக்கு உதவி செய்தோம் என்று!

அதுமட்டுமல்ல இறைவன் இந்த வசனத்தின் இறுதியில் சொல்கிறான், இவ்வாறு தான் நம்பிக்கை கொண்டோரை நாம் காப்பாற்றுவோம் என்று.

நம்பிக்கை கொண்ட ஒரு அடியான் தமக்கு யாராலும் உதவி செய்ய முடியாது என்ற ஒரு சூழலில் சிக்கி இருக்கின்ற பொழுது அவர் இறைவனது உதவிகளை கண் முன்னே காண வேண்டும் என்றால் யூனுஸ் நபியவர்கள் அந்த நேரத்தில் கொண்டிருந்த முக்கியமான நம்பிக்கை நமது உள்ளத்திலும் துளி அளவு மாற்றம் இல்லாமல் நிறைந்து காணப்பட வேண்டும்.

அதாவது இந்த உலகில் எவராலும் உதவ முடியாத ஒரு சூழலை நாம் அடைந்தாலும் எனது இறைவனால் இந்த சூழலிலும் உதவி செய்ய முடியும் என்ற சிந்தனை இருக்க வேண்டும். சிந்தனையோடு மட்டும் நின்று விடாமல் இறைவன் எனக்கு உதவி செய்தே தீருவான் என்ற எந்தவிதமான சந்தேகமும் இல்லாத கலப்பற்ற பிரார்த்தனை இறைவனை நோக்கி முன்வைக்கப்பட வேண்டும்.

இதைத்தான் யூனுஸ் நபியவர்கள் கையாண்டார்கள். இறைவனது உதவியை கண் முன்னே கண்டார்கள். இறைவன் யூனுஸ் நபிக்கு மாத்திரமல்ல இதுபோன்று அனைத்து முஃமீன்களுக்கும் உதவி செய்வதாக வாக்குறுதியும் அளிக்கிறான்.

இப்போது நாம் சிந்திக்க வேண்டியது......

மழைத்தொழுகைகள் பரவலாக நடத்தப்பட்டும் கூட ஏன் நமது ஊர்களில் மழை இல்லை?????

இறைவனது வாக்குறுதி பொய்யானதா????

அல்லது

நாம் தொழுத மழைத்தொழுகையிலும் நமது எண்ணத்திலும் பிழை உள்ளதா????

நிச்சயமாக இறைவனது வாக்குறுதி பொய்க்காது. அதை தேடும் வழிகளில் நாம் தான் குறைவுடையவர்களாக இருக்கிறோம் என்பதே உண்மை.

எனவே அன்பு இஸ்லாமிய சொந்தங்களே! மழைத்தொழுகை என்ற அழைப்பை கேட்டவுடன் சடங்குக்காக நாம் அதில் பங்கேற்று விடாமல் நாம் மேலே குறிப்பிட்ட உறுதியான நம்பிக்கைகளோடு அந்த தொழுகைகளில் கலந்து கொள்ளுங்கள்.

அழைப்பாளர்கள் மழைத்தொழுகை நடத்தப்படும் நாட்களுக்கு முன்னதாகவே இந்த சிந்தனைகளை ஒரு பயானாக ஜும்ஆ மேடைகளிலோ அல்லது உள்ளரங்கு நிகழ்ச்சிகள் வாயிலாகவோ மக்களுக்கு போதனை செய்து அவர்களது உள்ளங்களை பக்குவப்படுத்துங்கள்.

சீரிய சிந்தனையோடும் உறுதியான உள்ளத்தோடும் நாம் அணுகும் அனைத்திலும் இறைவனது உதவி கிடைக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. அல்லாஹ் நமது பிழைகளை பொருந்தி நமக்கு உதவி செய்வானாக!

مشارق بن نينار علي 

Monday, April 24, 2017

பொதுத்தளப்பதிவுகளில் கவணம் தேவை!!!




அன்பு இஸ்லாமிய சொந்தங்களே.....!!!

நாம் பதிவிடும் பலவிதமான பதிவுகளை பலருக்கும் டேக் செய்து பரப்பி விடுகிறோம். அவ்வாறு நம்மால் டேக் செய்யப்படும் முகநூல் ஐடியின் சொந்தக்காரர்கள் பலர் இறைவனால் அழைக்கப்பட்டு விட்டார்கள்
அவர்களது ஐடிகள் மட்டும் தான் முகநூலில் உள்ளது என்பது உங்களுக்கு தெரியுமா????
நாளை எனது நிலையும் உங்களது நிலையும் இதுதான் தோழர்களே!!!
நமது முகநூல் பக்கமும் பதிவுகளும் இருக்கும்,
ஆனால் நாம் இருக்க மாட்டோம்....

நாம் பதிந்த பதிவுகள் இறைவன் வெறுக்கும் பதிவுகளாக, இறைவனால் தடுக்கப்பட்ட காரியங்களை பிரதிபலிக்கும் பதிவுகளாக இருக்குமென்றால்
நாம் இந்த உலகை விட்டு பிரிந்த பின்னால் அவற்றால் ஏற்படும் விளைவை நிச்சயமாக உணர்ந்து கொள்வோம் என்பதில் சந்தேகம் இல்லை!!!!
ஆனால் அத்தகைய விளைவை மண்ணறைகளிலும் மறுமையிலும் நமக்கு ஏற்படுத்தும் அந்த பதிவுகளை முகநூலில் இருந்து நீக்கிவிட நம்மால் அன்று இயலாமல் போகும் என்பதை என்றைக்காவது நாம் சிந்தித்தது உண்டா???
மிகுந்த கவணத்தோடு பொதுத்தளங்களில் பதிவுகளை பதிவிடுங்கள்!!!
சிலரது முகநூல் பக்கங்களில்
விபச்சார சிந்தனைகளை உலகில் பரப்பும் சினிமா கூத்தாடிகளின் புகைப்படங்கள்,
ஆபாச புகைப்படங்கள், ஆபாச வீடியோக்கள்,
பிறரது சுயமரியாதையை பாதிக்கும் வகையிலான பதிவுகள் என்று பதிவுகள் தொடர்கிறது.........
மரணம் எப்போது வரும் என்று நம்மால் சொல்ல முடியாது சொந்தங்களே!!!
உங்களுக்கு மரணம் வந்து விட்டால்.......
பல இலட்சம் மக்களால் இதுபோன்ற உங்கள் பதிவுகள் பரப்பப்பட்டுக்கொண்டே இருக்கும்....
பொதுத்தளம் முழுமையாக மூடப்படும் வரைக்கும்...
இந்த பதிவுகளை உங்களால் எப்படி அழிக்க முடியும்??????????????????
இறந்த பின்னும் நமக்கு நன்மைகளை பெற்றுக்கொடுக்கும் வகையிலான செயல்கள் தான் நமது வாழ்வில் இருக்க வேண்டும்.
இறந்த பின்னும் கூட நமது பாவச்சுமைகள் நம்மை தொடரும் வகையில் நாம் வாழ்ந்து மரணிக்கக்கூடாது.
அல்லாஹ் நம்மை பாதுகாப்பானாக!!!

இன்றே பதிவுகளை புரட்டுங்கள், தீமையானவற்றை தூர வீசுங்கள்....
இறைவனை நோக்கி திரும்புங்கள்.....
நமது பதிவுகள் அனைத்தும் நன்மையானதாகவே அமையட்டும்.
நம்பிக்கை கொண்டோரே! அல்லாஹ்விடம் கலப்பற்ற முறையில் பாவமன்னிப்புத் தேடுங்கள்! உங்கள் இறைவன் உங்கள் தீமைகளை அழித்திடக்கூடும். உங்களை சொர்க்கச் சோலைகளில் நுழையச் செய்வான். அவற்றின் கீழ்ப்பகுதியில் ஆறுகள் ஓடும்.
திருக்குர்ஆன் (66:8).

Sunday, April 9, 2017

புறக்கணிக்கப்படும் இறைவனது உபதேசம்!



ஒரு மனிதன் சுவனம் செல்ல வேண்டும் என்றால் அவன் இறைவனுக்கும் அவனது தூதருக்கும் கட்டுப்பட்டு நடக்க வேண்டும் என்று இஸ்லாமிய சொந்தங்கள் அனைவருக்கும் தெரியும். குறிப்பாக சொல்வதென்றால், இதே தமிழகத்தில் இறைவனது சட்டங்களையும் இறைத்தூதரின் வழிமுறைகளையும் பலர் புதுமையாக கருதிக்கொண்டிருந்த நிலையில் அவற்றை மிக வீரியமாக தமது வாழ்வில் நிலைநாட்டி அதற்காக ஏராளமான தொல்லைகளை அனுவித்த ஈமானிய சொந்தங்களை நாம் கண்கூடாக கண்டிருக்கிறோம். காரணம் நமது இலக்கும் இலட்சியமும் சுவனம் ஒன்று தான்.

நபியவர்களின் வழிமுறைக்கு மாற்றம் செய்வோருடன் எங்களது உறவுகள் இவ்வாறுதான் என்று, தாம் நேசித்த நபர்களை கூட இறைவனுக்காக வெறுத்து ஒதுக்கிய ஏகத்துவ புறட்சியை நமது வாழ்நாளில் மறக்க முடியாது.

ஆனால் இன்று சில வேதனையான நிகழ்வை நமது சகோதர சகோதரிகளுக்கு மத்தியில் பார்க்க முடிகிறது. எந்த நபியின் வழிகாட்டலை தமது வாழ்வில் பேணுவதற்காக பல்வேறு வகையான சோதனை போராட்டங்களை நாம் சந்தித்தோமோ அதே நபியின் வழிகாட்டல்கள் நாம் அறிந்த நிலையில் பல இடங்களில் செத்து மடிந்து கொண்டிருக்கிறது.

ஒரு இஸ்லாமிய குடும்பம் என்றால் எவ்வாறு இருக்க வேண்டும் என்று அல்லாஹ்வின் தூதர் அழகிய முறையில் வழிகாட்டி சென்றுள்ளார்கள். அவ்வாறு செயல்பட்டால் தான் அவை இஸ்லாமிய குடும்பம் என்று இறைவனது பார்வையில் அமையும். நான் இங்கு அனைத்தையும் குறிப்பிட்டால் எழுத்து நீண்டு விடும். ஆகவே அல்லாஹ்வின் தூதர் அவர்கள் இஸ்லாமிய குடும்பங்கள் வாழும் வீட்டில் பேணப்பட வேண்டிய ஒழுங்கு என்று கடுமையாக எச்சரித்து சொன்ன ஒன்றை மாத்திரம் இங்கு நான் சுட்டிக்காட்டுகிறேன்.

عن عقبة بن عامر أن رسول الله صلى الله عليه وسلم قال: «إياكم والدخول على النساء!»، فقال رجل من الأنصار: يا رسول الله، أفرأيت الحمو؟ قال: «الحمو الموت» (رواه البخاري ، ومسلم.

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் '(அந்நியப்) பெண்கள் இருக்குமிடத்திற்குச் செல்ல வேண்டாம் என உங்களை எச்சரிக்கிறேன்'' என்று கூறினார்கள். அப்போது அன்சாரிகளில் ஒருவர், 'இறைத்தூதர் அவர்களே! கணவருடைய (சகோதரன் போன்ற) உறவினர்கள் (அவள் இருக்கும் இடத்திற்குச் செல்வது) குறித்து தாங்கள் என்ன கூறுகிறீர்கள்?' என்று கேட்டார். நபி(ஸல்) அவர்கள், 'கணவருடைய (சகோதரன் போன்ற) உறவினர்கள் மரணத்திற்கு நிகரானவர்கள்'' என்று கூறினார்கள்.
அறிவிப்பவர் : உக்பா இப்னு ஆமிர்(ரலி), நூல் : புகாரி 5232.

நமது சகோதரனின் மனைவி அல்லது நமது சகோதரியின் கணவன் அல்லது நமது கணவனின் சகோதரன் அல்லது நமது மனைவியின் சகோதரி  சம்மந்தமாகத்தான் அல்லாஹ்வின் தூதர் இந்த நபிமொழியில் எச்சரிக்கை செய்கிறார்கள். நமது சமூகத்தில் குர்ஆன் சுன்னாஹ்வை பேசக்கூடிய பலரும் பலவீனப்பட்டிருக்கும் இடமும் இந்த இடம்தான்.

ஒரு அன்னியப் பெண் தனிமையில் இருந்தால் நாம் எவ்வாறு நடந்துகொள்ள வேண்டும் என்ற சட்டத்தை நபியவர்கள் மக்களுக்கு சொல்கின்றபொழுது தான் இவற்றை சொல்கிறார்கள். ஒரு அன்னியப் பெண்ணிடத்தில் பேண வேண்டிய ஒழுங்குகளை விட நமது சகோதரனின் மனைவியிடமோ அல்லது நமது சகோதரியின் கணவனிடமோ அல்லது நமது கணவனின் சகோதரனிடமோ அல்லது நமது மனைவியின் சகோதரியிடமோ கடுமையான ஒழுகுகளை பேண வேண்டும் என்று நபியவர்கள் எச்சரிக்கிறார்கள்.

இத்தகைய உறவு தான் மரணத்திற்கு நிகரான உறவு என்று நபியவர்கள் அந்த அன்சாரித்தோழருக்கு சொன்ன பதிலில் இருந்து இதை நாம் அறிந்து கொள்ள முடியும்! நமக்கு முன்னாள் மரணம் என்றால் அதைக்கண்டு எவ்வாறு நமக்கு அச்சம் வருமோ அதுபோன்றுதான் இந்த உறவுகளிடம் நாம் பேசும் போதும் பழகும் போதும் அச்சம் வர வேண்டும். தேவைக்கு அதிகமாக இவர்களிடம் பேசவோ பழவோ ஒரு முஸ்லிமிற்கு அனுமதி இல்லை.

நிலைமை இவ்வாறு இருக்க இதுபோன்ற உறவுகளிடம் நமது நடத்தைகள் எவ்வாறு இருக்கிறது என்று உள்ளம் தொட்டு கேளுங்கள்!!!???

கணவனின் சகோதரனோடு சர்வ சாதராணமாக வாகனத்தில் அமர்ந்து உரசிக்கொண்டு நமது பெண்கள் வீதியில் செல்கின்றனர். வெளியூர் பயணம் செல்ல நேரிடும்போது கணவனின் சகோதரனோடு ஒரே சீட்டில் பயணம் மேற்கொள்கின்றனர். சர்வசாதராணமாக இரட்டை அர்த்தமுள்ள வார்த்தைகளை கேலி கிண்டல் என்ற பெயரில் பேசுகின்றனர். கணவனுக்கு முன்னாள் அல்லது மஹ்ரமான உறவுகளுக்கு முன்னாள் மட்டும் அணிவதற்கு அனுமதிக்கப்பட்ட ஆடைகளை அணிந்து கொண்டு இவர்களுக்கு முன்னாள் சாதாரணமாக நடமாடுகின்றனர். இவை எல்லாம் எங்கே உள்ள கலாச்சாரம் தோழர்களே???!!!

இவை அனைத்தும் பெற்றோர்களால், சகோதரர்களால், சகோதரிகளால், பிள்ளைகளால் என்று அனைவராலும் அனுமதி வழங்கப்பட்ட நிலையில்தான் நடந்து கொண்டிருக்கிறது. அல்லாஹு அக்பர்!!!

என் அன்பு இஸ்லாமிய சொந்தங்களே!!! இதுபோன்ற உறவுகளை சர்வ சாதராணமாக பழக விடுவதால் நிகழும் விளைவுகளை நான் சொல்லித்தான் நீங்கள் அறிய வேண்டுமா என்ன???!!!

தாய், தந்தை, பிள்ளை, சகோதரன், சகோதரி, கணவன், மனைவி என்ற உறவுகளையெல்லாம் படைத்தவன் இறைவன். யார் யாரிடம் எவ்வாறு நடக்க வேண்டும் என்பது அவனுக்குத்தான் முழுமையாக தெரியும் சகோதரர்களே. நாம் சொல்லும் வியாக்கியானங்கள் எல்லாம் காலம் காலமாக இந்த இடத்தில் தோற்றுத்தான் போகிறது என்பதை நாம் ஏன் இன்னும் உணராமல் இருக்கிறோம்???

தனது சொந்த தாயை சந்திக்க சொந்த வீட்டிற்குள் நுழைவதற்குக்கூட ஒரு மூன்று தருணங்களில் மட்டும் அனுமதி பெற்றுத்தான் செல்ல வேண்டும் என்ற உயரிய கண்ணியமான கொள்கைகளை சுமந்த மார்க்கம் நமது மார்க்கம் என்பதை மறந்து விட வேண்டாம். இஸ்லாமிய கலாச்சாரங்களை நாம் முழுமையாக பேண பேண அவை அனைத்தும் நம்மை கண்ணியமான இடத்திற்கு உயர்த்துமே அன்றி ஒருபோதும் நம்மை இழிவு படுத்தாது தோழர்களே!

விரல் அசைப்பதற்காக விரல் உடைபட்டோம்.... இறைவனது சட்டங்களையும் இறைத்தூதரின் ஏனைய சுன்னாக்களையும் பேணுவதற்காக உயிர்பறிக்கப்படும் நிலை வரைக்கும் கூட நாம் சோதனைகளை சந்தித்தோம். மறுக்க முடியாது...!!!

ஆனால் அல்லாஹ்வின் தூதர் காட்டித்தந்த "அல்ஹம்வ்" என்ற இந்த சட்டத்தை நமது வீடுகளில் பேணுவதில் மட்டும் நாம் ஏன் பலவீனப்பட்டோம்????!!!

இதற்குமேல் நான் பேச ஒன்றுமில்லை! மாற்றிக்கொள்வோம் இறைவனுக்காக....!