கிராமவாசி ஒருவர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம்
வந்து,
"நான் சொல்லிக் கொள்ள எனக்கு ஏதேனும் (துதி) வாக்கியத்தைக்
கற்றுத்தாருங்கள்" என்று கேட்டார்.
அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள்,
"லாயிலாஹ இல்லல்லாஹு, வஹ்தஹு, லா
ஷரீக்க லஹு,அல்லாஹு அக்பர் கபீரா, வல்ஹம்து
லில்லாஹி கஸீரா, சுப்ஹானல்லாஹி ரப்பில் ஆலமீன், லா
ஹவ்ல வலா குவ்வத்த இல்லா பில்லாஹில் அஸீஸில் ஹகீம்
لَا إِلَهَ إِلَّا اللهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ،
اللهُ أَكْبَرُ كَبِيرًا، وَالْحَمْدُ لِلَّهِ كَثِيرًا، سُبْحَانَ اللهِ رَبِّ الْعَالَمِينَ،
لَا حَوْلَ وَلَا قُوَّةَ إِلَّا بِاللهِ الْعَزِيزِ الْحَكِيمِ "
(அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை. அவன்
தனித்தவன். அவனுக்கு இணை யாருமில்லை. அல்லாஹ் மிகவும் பெரியவன். அவனைப் பெரியவன்
எனப் பெருமைப்படுத்துகிறேன். அனைத்துப் புகழும் அல்லாஹ்வுக்கே உரியது என அதிகமாகப்
புகழுகிறேன். அனைத்துலகின் அதிபதியான அல்லாஹ் (அனைத்துக் குறைபாடுகளிலிருந்தும்)
தூய்மையானவன். மிகைத்தவனும் ஞானமுடைய வனுமான அல்லாஹ்வின் உதவியின்றி
யுக்தியுமில்லை; சக்தியுமில்லை.) என்று
சொல்வீராக!" என்று கூறினார்கள்.
அதற்கு அந்தக் கிராமவாசி,
"இவை என் இறைவனுக்குரியவையாகும். எனக்குரியவை என்ன?"
என்று
கேட்டார். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள்,
"அல்லாஹும் மஃக்ஃபிர்லீ வர்ஹம்னீ வஹ்தினீ
வர்ஸுக்னீ"
اللهُمَّ اغْفِرْ لِي وَارْحَمْنِي وَاهْدِنِي وَارْزُقْنِي
என்று சொல்வீராக! என்றார்கள்.
(பொருள்: இறைவா! எனக்கு மன்னிப்பு வழங்குவாயாக!
எனக்குக் கருணை புரிவாயாக. என்னை நல்வழியில் செலுத்துவாயாக! எனக்கு வாழ்வாதாரம்
வழங்குவாயாக!")
அறிவிப்பவர் : சஅத்
பின் அபீவக்காஸ் (ரலி),
நூல் : ஸஹீஹுல் முஸ்லிம்
தமிழாக்க பிரதி எண் 5226, அரபு மூலப்பிரதி எண் 2696.
No comments:
Post a Comment