தினம் ஒரு நபிமொழி


இது அனுமதிக்கப்பட்டது; இது தடுக்கப்பட்டது என்று உங்கள் நாவுகள் வர்ணிக்கும் பொய்யை அல்லாஹ்வின் மீது இட்டுக்கட்டிக் கூறாதீர்கள்! அல்லாஹ்வின் மீது பொய்யை இட்டுக்கட்டியோர் வெற்றி பெறமாட்டார்கள். (அல் குர்ஆன் 16:116).

Saturday, June 11, 2016

நோன்பு தொடர்பான பலவீனமான செய்தி



நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: எவரொருவர் ரமழான் மாதத்தில் தக்க காரணமின்றி ஒரு நோன்பை விடுகின்றாரோ அவர் காலம் முழுவதும் நோன்பு நோற்றாலும் அவர் (விட்ட) அந்த நோன்புக்கு (சிறப்புக்கு) அது ஈடாகாது.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரழி),
நூற்கள்: அபூதாவுத் 2396, இப்னு மாஜா 1672).

இந்த இரண்டு அறிவிப்புகளிலும் அபுல் முதவ்விஸ் என்பவர் இடம்பெறுகின்றார். இவர் பலவீனமான அறிவிப்பாளர் ஆவார். காரணம் இவரையும் யாரென்று தெரியாது, இவரது தந்தையையும் யாரென்று தெரியாது என ஹதீஸ் துறை அறிஞர்கள் விமர்சித்துள்ளனர்.
மீஸானுல் இஃதித்தால் (574/4).

இமாம் அஹ்மத் அவர்கள் இவரை யாரென்றே தெரியாது என்று குறிப்பிடுகிறார்கள்.
தஹ்தீபுத் தஹ்தீப் 12/ (1081).

இதே தகவல்களோடு இமாம் அல்பானி அவர்கள் தமது லஈஃப் அபூதாவுதில் (273/2)-ம் பக்கத்தில் இது பலவீனமான செய்தி என்று குறிப்பிடுகிறார்கள்.

ஆகவே இந்த செய்தி பலவீனமான செய்தியாகும்.


No comments:

Post a Comment