தினம் ஒரு நபிமொழி


இது அனுமதிக்கப்பட்டது; இது தடுக்கப்பட்டது என்று உங்கள் நாவுகள் வர்ணிக்கும் பொய்யை அல்லாஹ்வின் மீது இட்டுக்கட்டிக் கூறாதீர்கள்! அல்லாஹ்வின் மீது பொய்யை இட்டுக்கட்டியோர் வெற்றி பெறமாட்டார்கள். (அல் குர்ஆன் 16:116).

Sunday, June 14, 2015

அமைதி மார்க்கம் இஸ்லாம்!

இஷாவிற்கு பின் நடைபெற்ற உள்ளரங்கு நிகழ்ச்சி!

இடம்: மஸ்ஜிதுல் முபீன் தவ்ஹீத் பள்ளிவாசல்,
தொண்டி.

உரை: முஹம்மது மஷாரிக்.

https://www.youtube.com/watch?v=BvXY6XEY4Bg

Friday, June 12, 2015

திருக்குர்ஆன் அப்ளிகேஷன் - ஆங்கில பதிப்பு!





அஸ்ஸலாமு அலைக்கும் வரமத்துல்லாஹி வபரகாத்துஹு!

அன்பார்ந்த இஸ்லாமிய சகோதர சகோதரிகளே!

ரமலான் மாதத்தை அடையவிருக்கும் இந்த இனிய தருணத்தில், மீண்டும் ஒரு புதிய இஸ்லாமிய அப்ளிகேஷனை எம் சொந்தங்களுக்காக வெளியிடுவதில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறோம்.


நாம் ஏற்கனவே வெளியிட்டிருந்த சகோ பி.ஜெயினுல் ஆபிதீன் மொழிப்பெயர்த்த திருக்குர்ஆன் தமிழாக்கம் 
சில சகோதரர்களால் ஆங்கிலத்தில் அழகிய வடிவில் மொழிப்பெயர்க்கப் பட்டுள்ளடு. அந்த ஆங்கிலப் பதிப்பைத்தான் தற்போது நாம் அப்ளிகேஷனாக வெளியிட்டுள்ளோம். அல்ஹம்துலில்லாஹ்!


நாம் இந்த மொழிப்பெயர்ப்பை அதிகம் உபயோகிக்க காரணம் இதில் தரப்பட்டிருக்கும் குர்ஆன் மற்றும் சுன்னாஹ்வின் அடிப்படையிலான அழகிய விளக்கங்கள், மாற்றுமத நண்பர்களின் இஸ்லாம் குறித்த தேடல்களை மிக எளிமையாக விளக்கும் விளக்க உரைகள், மக்கள் விளங்கிக் கொள்ளத்தக்க எளிய தமிழ்நடையில் இந்த மொழிப்பெயர்ப்பு அமைந்திருத்தல் போன்றவைதான்!

இதே சிறப்பு அம்சங்களோடு ஆங்கில மொழிப்பெயர்ப்பும் ஆன்லைனில் வெளியிடப்பட்டுள்ளது. இந்த தமிழாக்கம் தமிழ் உலகில் எப்படி மிகவும் பயனுள்ளதாகவும், இறைவனின் உதவியால் பலர் இஸ்லாத்தை ஏற்க உதவியாகவும் இருந்து வருகிறதோ,

இதே சூழல்கள் அல்லாஹ்வின் உதவியோடு உலகம் முழுவதும் ஏற்பட வேண்டும் என்பதே எங்களது நோக்கம். அந்த நோக்கத்தின் விளைவாக உலகில் பேசப்படும் பொதுமொழி ஆங்கிலத்தில் இந்த அப்ளிகேஷன் அறிமுகம் செய்யப்படுகிறது.


இவை எமது நோக்கம் மட்டுமல்ல, ஒவ்வொரு சிறந்த முஸ்லிமுடைய நோக்கமும் இவையாகத்தான் இருக்கும். நோக்கம் நிறைவடைய அல்லாஹ் உதவி செய்திருக்கிறான். இப்போது நீங்கள் செய்ய வேண்டிய உதவி என்னவென்றால், ஆங்கிலம் தெரியாவிட்டாலும் இந்த அப்ளிகேஷனை அனைவரும் பதிவிறக்கம் செய்யுங்கள்.

நான் முன்பே தெரியப்படுத்தியது போல, பிளே ஸ்டோரின் தேடல் பட்டியில் இந்த குர்ஆன் இடம்பிடிக்க வேண்டுமானால் அதிகம் பதிவிறக்கம் செய்யப்பட்டிருக்க வேண்டும். ரமலான் மாதத்தை அடைவதற்கு முன்னால் இயன்றளவு இந்த செய்தியை மக்களுக்கு பரப்பி பதிவிறக்கம் செய்ய சொல்லுங்கள்.

காரணம், ரமலான் மாதத்தில் கண்டிப்பாக உலகம் முழுவதிலும் இஸ்லாமியர்களால் அதிகம் வாசிக்கப்படும் ஒன்று இருக்கிறதென்றால் அது திருமறை தான். ஆகவே கூகுள் பிளேயில் குர்ஆனை தேட உலக நாடுகளில் வாழும் பல இஸ்லாமியர்கள் வருவார்கள். அவர்கள் பார்வையில் சகோ. பி.ஜெயினுல் ஆபிதீன் அவர்கள் மொழிப்பெயர்த்த இந்த குர்ஆன் தென்பட வேண்டும். அவர்களும் இதன் மூலம் உண்மையை விளங்கி பயனடைய வேண்டும்! மொத்தத்தில் உலகில் வாழும் எல்லா மக்களிடமும் இது சென்றடைய வேண்டும். இந்த நோக்கம் நிறைவேற தமிழ் மக்கள் ஒருமுறையாவது இந்த குர்ஆனை பதிவிறக்கம் செய்ய வேண்டும்.

தேடலில் வந்துவிட்டால், இன்ஷா அல்லாஹ் நமது இலட்சியத்தை நாம் அடைந்து விடுவோம். அல்லாஹ் நாடினால் நாளை நாம் பார்த்திராத எத்தனையோ நபர்கள் இதன் மூலம் நேர்வழி பெறலாம், அதற்காக அல்லாஹ் மறுமையில் உங்களுக்கும் அளப்பரிய கூலி வழங்கலாம்.

அதிகம் பரப்புங்கள! பதிவிறக்கம் செய்யுங்கள்!

அன்புடன்,
முஹம்மது மஷாரிக்.
தொண்டி.


அப்ளிகேஷனுக்கான லிங்க்,

Sunday, May 17, 2015

மொத்த நபிமார்கள் எத்தனை?‎




உலகம் படைக்கப்பட்டது முதல்  நபிகள் நாயகம் (ஸல்) ‎அவர்கள் வரை அனுப்ப்ப்பட்ட மொத்த நபிமார்களின் எண்ணிக்கை ஒரு ‎லட்சத்து 24 ஆயிரம் என்று பரவலாக ஆலிம்களால் ‎சொற்பொழிவுகளில் கூறப்பட்டு வருகிறது. இதற்கு ஆதாரம் ‎உள்ளதா?‎
ஏ.சுலைமான், விருத்தாசலம்.‎
பதில்:‎
நபிமார்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்து 24 ஆயிரம் என்று ‎நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியதாக முஸ்னத் அஹ்மத், ‎தப்ரானி ஆகிய நூல்களில் ஒரு ஹதீஸ் பதிவு செய்யப்பட்டுள்ளது.‎
இது பலவீனமான ஹதீஸாகும். இதன் அறிவிப்பாளர் தொடரில் ‎அலீ பின் யஸீத் அல் ஹானி என்பவர் இடம் பெறுகிறார். இவர் ‎பலவீனமானவராவார்.‎
இது போல் மற்றொரு ஹதீஸ் இப்னு ஹிப்பான் நூலில் பதிவு ‎செய்யப்பட்டுள்ளது. இதுவும் பலவீனமான ஹதீஸாகும்.‎
இதன் அறிவிப்பாளர் தொடரில் இப்ராஹீம் பின் ஹிஷாம் ‎அல்கஸ்ஸானி என்பவர் இடம் பெறுகிறார். இவர் பொய்யர் ‎என்று சந்தேகிக்கப்பட்டவர் என்பதால் இதுவும் பலவீனமான ‎ஹதீஸாகும்.‎
அல்லாஹ் ஏராளமான நபிமார்களை அனுப்பியுள்ளான். ‎அவர்களின் எண்ணிக்கை நமக்குச் சொல்லப்படவில்லை என்பதே ‎சரியான நம்பிக்கையாகும்.‎
இந்த எண்ணிக்கையை விட அதிகமான நபிமார்கள் ‎அனுப்பப்பட்டு இருந்தால் அவர்களை நாம் மறுத்த குற்றம் ‎ஏற்படும்.‎
அதை விட குறைவான எண்ணிக்கையில் நபிமார்கள் ‎அனுப்பப்பட்டு இருந்தால் நபியல்லாதவர்களை நபி என்று நம்பிய ‎குற்றம் ஏற்படும். இதைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.
Source: www.onlinepj.com

Thursday, May 14, 2015

இறைவன் அனுமதித்த முறையில் பொருளீட்டுவோம்!


முக்கிய அறிவிப்பு - அவசரம் காட்டவும்!




அன்பார்ந்த சகோதர சகோதரிகளே, அஸ்ஸலாமு அலைக்கும் வரமத்துல்லாஹி வ பரகாத்துஹு...!

அல்லாஹ்வின் அருளால் இஸ்லாம் சார்ந்த பல பயனுள்ள ஆண்ட்ராய்டு மென்பொருட்களை நாம் தயாரித்து வெளியிட்டு வருவதை அனைவரும் அறிவீர்கள். மென்மேலும் இதுபோன்ற மென்பொருட்களை வெளியிட வேண்டும் என்ற நோக்கத்தோடு இந்த தகவலை உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன்.

நாங்கள் எங்களது கம்பெனியின் லோகோவாக ஓர் இறைவனை உணர்த்தும் ஏகத்துவ முத்திரையாக ஒரு விரலை வைத்திருந்தோம். நீங்கள் எனது எந்த மென்பொருளை திறந்தாலும் அதுதான் முதலாவதாக வரும்.

இந்த விரல் முத்திரை தற்போதைய சூழலில் சில தீவிரவாத அமைப்பினராலும் பயன்படுத்த படுவதால், இது அவர்களது இயக்கத்தின் முத்திரை என்பதை போன்றும், யாரெல்லாம் அதை பயன்படுத்துகிறார்களோ அவர்களும் அந்த தீவிரவாத அமைப்பை ஆதரிக்கின்றனர் என்பதை போன்றும் கருத்து தற்போது தமிழகத்தில் நிலவ ஆரம்பித்துள்ளது. 

முதலில் ஒன்றை பதிய வைத்து கொள்கிறேன். நான் ஒரு முஸ்லிம், அதிலும் தமிழகத்தின் சமூக பேரியக்கமான தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் ஒரு உறுப்பினரும் கூட. 
எனது ஜமாஅத் கடந்த பல வருடங்களாக இஸ்லாமியர்களுக்கும் பிற மத சகோதரர்களுக்கும் மத்தியில் நல்லிணக்கம் ஏற்படுத்த எந்த அளவிற்கு உழைத்திருக்கிறது என்பதை அனைத்து மீடிக்களும், உளவுத்துறையினரும் அறிந்துதான் வைத்துள்ளனர்.
அந்த அமைப்பை சார்ந்த நான், தீவிரவாதத்திற்கு எதிரானவன்...
தீவிரவாத அமைப்பினர் இஸ்லாமியர்களாக இருந்தாலும் அவர்களை எதிர்ப்பதில் நானும் முதலாமவன்.
எந்த தீவிரவாத அமைப்பிற்கும் நான் ஆதரவாளன் அல்ல!

அப்படி சிந்தனையை தூண்டும் வகையில் சில அயோக்கியர்கள் விரல் முத்திரையை பயன்படுத்தியதால், அந்த கயவர்களை எங்களோடு தொடர்பு படுத்தி பேசிவிடக்கூடாது (விரல் முத்திரை இஸ்லாத்தின் அடையாளமல்ல) என்பதற்காக எங்களது கம்பெனியின் லோகோ இன்றோடு மாற்றப்பட்டுவிட்டது!

#குறிப்பு:
இந்த இஸ்லாமிய மென்பொருட்கள் தடைபடாமல் உங்களை வந்தடைய வேண்டுமென்றால், இதன்மூலம் எங்களுக்கு எதுவும் பாதிப்புகள் வராமல் இருக்க வேண்டுமென்றால், இந்த தகவலை அதிகம் அதிகம் அனைத்து மக்களுக்கும் பரப்புங்கள்! 

உடனே நாங்கள் வெளியிட்ட அனைத்து மென்பொருட்களையும் அப்டேட் செய்து கொள்ளுங்கள்! அப்படி செய்தால் மட்டும் தான் அனைவரது மொபைலிலும் லோகோ மாற்றப்படும்!

தளத்திற்கு செல்லும் லிங்க்,
https://play.google.com/store/apps/developer?id=Masarik%20Apps&hl=en

அன்புடன்,
முஹம்மது மஷாரிக்.

Monday, April 27, 2015

பேரழிவுகள் கற்றுத்தரும் பாடம்!

بسم اللة الرحمن الرحيم


                         

நாம் வாழக்கூடிய இன்றைய காலகட்டத்தில் அறிவியல் வளர்ச்சியும் முன்னேற்றங்களும் மிகவும் அதிகமாகவே காணப்படுகின்றது. இது போன்ற வளர்ச்சியினை அடைந்து கொண்ட விஞ்ஞானிகளும், அவர்களின் அறிவை பயன்படுத்தி ஆதாயம் அடையும் சில நாடுகளும் இதைக் கொண்டு எதையும் சாதித்து விடலாம் என்ற கற்பனை மோகத்தில் காலம் கடத்தி வருகின்றனர்.

இந்த அறிவியல் வளர்ச்சியின் ஒரு பகுதிதான், அப்பாவி மக்களை பயங்கர ஆயுதங்களை கொண்டு அழித்தொழித்து நாட்டை அபகரிக்க கூடிய கொடூர செயல் ஆகும். இது போன்ற செயல்களின் மூலம் இவர்கள் உணர்த்த வருவது, நம்மை மிஞ்ச எவனுமில்லை என்பதைத்தான்!

ஆனால் இந்த கருத்து வெறும் பகல் கனவு தானே தவிர உண்மை கிடையாது. இதைத் தான் அவ்வபோது நடைபெறும் இயற்கை பேரழிவுகள் நமக்கு உணர்த்துகிறது!

அறிவியல் வளர்ச்சியால் எதையும் சாதிக்க இயலும் என்ற மமதையில் திரியும் நபர்கள் சிந்திக்க வேண்டும். இறைவன் இந்த உலகத்தை படைத்ததிலிருந்து இன்றைய காலம் வரைக்கும் பல சமூகங்களை அல்லது பல ஊர்களை அழித்துள்ளான். அவற்றை அழிக்க அல்லாஹ் பயன்படுத்திய ஆயுதங்களை திருமறை நமக்கு விளக்குகிறது, காற்று, சூடேற்றப்பட்ட கல், பெரும் சப்தம், கடல் சீற்றம், நில அதிர்வுகள் ect., போன்றவற்றால் தான் இறைவன் அழிவை ஏற்படுத்துவதாக திருமறை கூறுகிறது!

ஒரு நாடு இன்னொரு நாட்டால் சந்திக்கும் அழிவுகளை எதிர்கொள்ள இராணுவப்படை, கடற்படை, காலாட்படை என்று பல படைகளும் உள்ளது. அந்த அத்துனை படைகளும் தம்மை அழிக்க வருபவர்களை எதிர்க்கவும் செய்கிறது.

ஆனால், இது போன்ற வீர மிக்க படைகள் இறைவனால் அனுப்பப்படும் இயற்கை சீற்றங்களை கண்டால் எதிர்த்து நிற்கிறதா??? அல்லது ஓட்டமெடுக்கிறதா???

எவ்வளவு சிறந்த உயர்ந்த விஞ்ஞானப் படைப்பாக இருந்தாலும் அவை இறைவனது ஆற்றல்களுக்கு முன்னால் மண்டியிட்டுத்தான் ஆக வேண்டும். இறைவன் இந்த உலகில் ஏற்படுத்தும் அழிவுகளின் அழிக்கும் முறை என்பது ஒன்று தான்! அவற்றில் அவன் இன்று வரை மாறுபடவில்லை. மனித அறிவு வளர்ச்சிக்கு ஏற்ப அழிக்கும் செயற்பாடுகளை அவன் மாற்றவுமில்லை. புதிய நவீன கருவிகளால் அழிவை அவன் ஏற்படுத்தவுமில்லை. என்றாலும், அறிவிலும் நவீன கண்டுபிடிப்புக்களிலும் அதீத வளர்ச்சி அடைத்திருக்கும் மனிதர்களுக்கு அதை எதிர்த்து நிற்கும் சக்தி இல்லை. இறைவனின் ஆற்றல் எதனின் ஆற்றலை விடவும் மிகப்பெரியது என்பதைத் தான் இது போன்ற பேரழிவுகள் நமக்கு உணர்த்துகின்றன.

நவீன கண்டுபிடிப்புகளின் உச்சாணி கோபுரத்தில் இருக்கும் நாடுகள் என்றால் அவற்றில் தவறாமல் ஜப்பான் அமேரிக்காவை நாம் இணைத்து விடுவோம். அந்த ஜப்பானில் சில வருடங்களுக்கு முன்னால் ஏற்பட்ட சுனாமி என்ற பேரழிவை ஜப்பான் நாட்டின் அரசாங்கத்தாலோ அறிவியல் வளர்ச்சியாலோ அல்லது இராணுவ படையாலோ தடுத்து நிறுத்த முடிந்ததா?

அமெரிக்காவில் சமீபத்தில் ஏற்பட்ட புழுதிப்புயலை அமேரிக்கா அரசால் தடுக்க இயன்றதா?

இது போன்று ஏராளம் கூறலாம், இருப்பினும் இவைகள் அனைத்தும் நமக்கு உணர்த்தக் கூடியது ஒன்றைத்தான்! நமக்கு மிஞ்சிய மிகப்பெரிய சக்தி ஒன்று உள்ளது. அவற்றை எதிர்க்க எவராலும் இயலாது. அதுதான் வல்ல இறைவனின் ஆற்றல். அந்த இறைவனை நாம் அஞ்சி நடக்க வேண்டும். அதற்காக தான் அல்லாஹ் தவறுகள் மிகைக்கும் இடங்களில் அவ்வபோது இதுபோன்ற சில பேரழிவுகளை ஏற்படுத்துகிறான். இறைவனை மறந்து வாழும் மக்கள், இந்த அழிவிலிருந்து தப்பித்திருந்தால் அது உங்களது அறிவாலோ ஆற்றலாலோ கிடையாது. மாறாக அல்லாஹ் உங்களுக்கு இவைகளைக் காண்பித்து எச்சரிக்கை செய்கிறான், நீங்கள் திருந்த வேண்டும் என்பதற்காக மீண்டுமொரு வாய்ப்பளித்துள்ளான் என்பதை உணர்ந்து கொள்ளுங்கள்!

மேலும், இதுபோன்ற அழிவுகளில் சில நல்ல மனிதர்களும் சேர்த்து அழிக்கப்படுகிறார்கள், இதற்கு என்ன காரணம் என்று பலரும் சிந்திக்க வாய்ப்புள்ளது. இதற்கு விளக்கமளிக்கும் வகையில் ஒரு நபிமொழி புகாரியில் இடம் பெறுகிறது.

"ஒரு படையினர் கஅபாவின் மீது படையெடுப்பார்கள்; வெட்ட வெளியான ஒரு பூமியில் அவர்கள் இருக்கும்போது அவர்களில் முதலாமவர் முதல் கடைசி நபர்வரை உயிருடன் பூமிக்குள் புதையுண்டு போவார்கள்!' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். 'இறைத்தூதர் அவர்களே! அவர்களில் முதலாமவர் முதல் கடைசி நபர் வரை எவ்வாறு புதையுண்டு போவார்கள்? அங்கே அவர்களைச் சேராதவர்களும் இருப்பார்கள். கடைவீதிகளும் இருக்குமே!" என கேட்டேன். அதற்கு நபி(ஸல்) அவர்கள் 'அவர்களில் முதலாமவர் முதல் கடைசி நபர் வரை புதையுண்டு போகத்தான் செய்வார்கள்; எனினும் (அதற்குப்) பின்னர் அவரவரின் எண்ணத்திற்கேற்ப எழுப்பப்படுவார்கள்!" என்றார்கள். 
அறிவிப்பவர்: ஆயிஷா(ரலி) ,புகாரி 2118. 

இந்த நபிமொழியின் அடிப்படையில் அழிவுகளில் சிக்கும் நல்ல மனிதர்கள் மறுமையில் அவர்களது எண்ணத்திற்கேற்ப கூலி கொடுக்கப்பட்டு விடுவார்கள். மரணம் என்பது எந்நிலையில் வேண்டுமானாலும் நம்மை அணுகலாம், நல்லவர்களுக்கு அது ஒரு பாதிப்பு கிடையாது. அதில் ஒரு வகைதான் இது என்பதை விளங்கிக் கொண்டால் தெளிவு கிடைத்துவிடும்.

"வானத்தில் உள்ளவன் பூமியில் உங்களை புதையச் செய்வதில் பயமற்று இருக்கிறீர்களா?"
திருக்குர்ஆன் 67:16.

"அவனே சிரிக்க வைக்கிறான். அவனே அழவும் வைக்கிறான்"
திருக்குர்ஆன் 53:43.

தர்பிய்யா-கீழக்கரை தெற்கு



இராமநாதபுரம் தெற்கு மாவட்டம் கீழக்கரை தெற்கு கிளை சார்பாக நடைபெற்ற தர்பிய்யா நிகழ்ச்சி!