தினம் ஒரு நபிமொழி


இது அனுமதிக்கப்பட்டது; இது தடுக்கப்பட்டது என்று உங்கள் நாவுகள் வர்ணிக்கும் பொய்யை அல்லாஹ்வின் மீது இட்டுக்கட்டிக் கூறாதீர்கள்! அல்லாஹ்வின் மீது பொய்யை இட்டுக்கட்டியோர் வெற்றி பெறமாட்டார்கள். (அல் குர்ஆன் 16:116).

Wednesday, November 9, 2016

FACEBOOK வீடியோக்களை இலகுவாக டவுன்லோடு செய்வது எப்படி?



நம்மில் அதிகமான மக்களுக்கு முகநூல் வீடியோக்களை டவுன்லோடு செய்வது எப்படி என்று தெரியாது. காரணம் அந்த வீடியோக்கள் அனைத்துமே ஆன்லைனில் பிளே செய்து பார்க்கும் வண்ணமாகத்தான் இருக்கும்.

சில மனம் கவரும் வீடியோக்களை நாம் பார்க்க நேரிடும் பொழுது அதை உடனே டவுன்லோடு செய்ய வேண்டும் என்று மனம் சொல்லும். ஆனால் செய்வதற்கு ஆப்ஷன் இல்லை என்ற வருத்தத்தோடு அந்த வீடியோவை வெறுமனே பார்த்துவிட்டு மூடிவிடுவோம். அதுமட்டுமல்லாமல் முகநூல் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நிமிடமும் அப்டேட் செய்யப்படுவதால் நாம் விரும்பிப் பார்த்த அந்த வீடியோ எங்கே சென்றது என்றே நினைவில் வைக்க முடியாத தூரத்தில் அவைகள் சென்று விடவும் வாய்ப்புகள் உள்ளது.

இனி கவலை வேண்டாம்! நீங்கள் விரும்புகின்ற வீடியோக்களை உங்களது கணினியில் பதிவிறக்கம் செய்துவிட இலகுவானதொரு வழி உள்ளது.

அது என்ன வழி என்பதை படங்கள் உதாரணங்களோடு பார்ப்போம் வாருங்கள்....

முதலில் நீங்கள் பதிவிறக்க விரும்புகின்ற விடியோவிற்கு செல்லுங்கள்.

பிறகு அந்த வீடியோவை பிளே செய்து பின்னர் அந்த வீடியோவில் வைத்து உங்களது மவுசில் ரைட் கிளிக்கை சொடுக்கவும். உதாரணத்திற்கு கீழே உள்ள படத்தை பார்க்கவும்.




ரைட் கிளிக் சொடுக்கிய உடன் மூன்று ஆப்ஷன்கள் வரும், அதில் கடைசியாக உள்ள show video URL என்பதை கிளிக் செய்யவும்.

URL பகுதியை கிளிக் செய்த உடன் அந்த வீடியோவிற்கான URL Address முழுமையாக தேர்வு செய்யப்பட்டே காட்சி தரும். அந்த ஊதா நிறத்தால் சூழப்பட்ட பட்டியின் மீது மீண்டும் ரைட் கிளிக் செய்யவும். அதில் காப்பி என்ற ஆப்ஷன் தோன்றும், அதை கிளிக் செய்து கொள்ளவும்.



பின்னர் உங்களது Browser-ல் புதிதாக ஒரு Tab-ஐ உருவாக்கி அதன் URL Address Bar-ல் நீங்கள் ஏற்கனவே காப்பி செய்த Address-Paste செய்யவும்.

உதாரணத்திற்கு கீழே உள்ள படங்களை பார்க்கவும்.



பிறகு அந்த URL-ல் உள்ள www என்பதை நீக்கி விட்டு அந்த இடத்தில் m என்று டைப் செய்து Enter பட்டனை தட்டவும்.




இப்போது கீழே உள்ளது போன்று புதிதாக ஒரு பக்கம் தோன்றும்.



அதில் உள்ள வீடியோவை பிளே செய்து விட்டு, அந்த வீடியோவில் வைத்து ரைட் கிளிக் சொடுக்கினால் அதில் save video as என்ற ஒரு ஆப்ஷன் இருக்கும்.

அதை கிளிக் செய்தால் போதும், நீங்கள் அந்த வீடியோவை உங்களது கம்ப்யூட்டரில் எந்த இடத்தில் பதிவிறக்க வேண்டும் என்று கேட்கும்.

தேர்வு செய்துவிட்டு save பட்டனை தட்டினால் நீங்கள் விரும்பிய வீடியோவின் பதிவிறக்கம் தயாராகிவிடும்.

அன்புடன்
முஹம்மது மஷாரிக்.

Thursday, November 3, 2016

Youtube வீடியோக்களை டவுன்லோடு செய்வது எப்படி?



பெரும்பாலும் Youtube வீடியோக்கள் பல மென்பொருட்களை பயன்படுத்தித்தான் மொபைலில் அல்லது கணினியில் டவுன்லோடு செய்யப்படுகிறது. இது போன்ற எந்த மென்பொருட்களும்(Softwares) இன்றி Youtube-ல் நாம் எந்த இடத்தில் வீடியோக்களை பார்க்கிறோமோ அங்கேயே எளிதாக டவுன்லோடு செய்து கொள்ள முடியும். அதுமட்டுமல்லாமல் நாம் பதிவிறக்க நினைக்கும் வீடியோக்களை Mp4 High, Mp4 Low, 3gp, Mp3 என்று நாம் விரும்புகின்ற அனைத்து வகையிலும் அந்தப் பகுதியில் பதிவிறக்கிக் கொள்ள முடியும்.

பயனுள்ள பல தகவல்களை நாம் Youtube-ல் நேரடியாக சென்று பார்வையிடுவதால் நமது டேட்டாக்கள் விரைவாக முடிந்து விடும். மீண்டும் அவற்றை பார்வையிட மீண்டும் மீண்டும் சென்று அதே வீடியோவை பார்க்கும் நபர்களும் நம்மில் இருக்கின்றனர். இதுபோன்ற நிலைகளை தவிர்த்து நமக்கு பயன்தரும் வீடியோக்களை நாம் விரும்பிய அளவில் பதிவிறக்கம் செய்து கொண்டால் அவற்றை எப்பொழுது வேண்டுமானாலும் இலகுவாக பார்வையிடலாம், டேட்டாவும் மிச்சப்படும்.

இப்பொழுது எவ்வாறு Youtube-ல் நேரடியாக பதிவிறக்கம் செய்வது என்பதைப்பற்றி பார்ப்போம்.

முதலில் நீங்கள் ஏதேனும் ஒரு பிரவுசரை (Browser Like Chrome, UC Browser, Firefox) திறந்து அதன் மூலமாக Youtube செல்ல வேண்டும்.


பிறகு உங்களுக்கு தேவையான வீடியோவை கிளிக் செய்து கீழே உள்ள படத்தில் உள்ளதை போன்று தேர்வு செய்து கொள்ளவும்


பிறகு அந்த பக்கத்தின் மேலே உள்ள URL பக்கத்திற்கு சென்று அதில் இருக்கும் வார்த்தைகளில் https:// என்பதை மட்டும் அழித்து விடவும். அதாவது www என்ற வார்த்தைக்கு முன்னாள் உள்ள அனைத்தையும் அழித்து விட வேண்டும்.

புரிந்து கொள்ள கீழே உள்ள படத்தை கவனிக்கவும்.


கம்ப்யூட்டர் மூலமாக பதிவிரக்குவதாக இருந்தால்


இந்த படத்தில் உள்ளதை போன்று தான் உங்களது வீடியோவின் URL-ம் இருக்க வேண்டும்.

அடுத்ததாக நீங்கள் செய்ய வேண்டியது www. என்ற வார்த்தைக்கு பின்னால் ss என்ற வார்த்தையை இணைக்க வேண்டும். உதாரணத்திற்கு கீழே உள்ள படத்தை பார்க்கவும்.


அல்லது மொபைல் மூலமாக பதிவிறக்கம் செய்வதாக இருந்தால் m.youtube.com/watch?v=1wKcVOluCou என்று www இருக்க வேண்டிய இடத்தில் m இருக்கும். அதில் எந்த மாற்றமும் செய்யக்கூடாது.

அங்கு m. என்ற வார்த்தைக்கு அடுத்ததாக ss என்ற வார்த்தையை இணைக்க வேண்டும். அதாவது m.ssyoutube.com/watch?v=1wKcVOluCou இதுபோன்று இருக்க வேண்டும்.

வேலை முடிந்தது, இனி ss என்று டைப் செய்த பின்னர் கம்ப்யூட்டராக இருந்தால் Enter பட்டனை தட்டவும். மொபைலாக இருந்தால் GO என்பதை  கிளிக் செய்யவும்.
இறுதியாக கீழே உள்ளதை போன்று ஒரு பகுதி திறக்கும்.


இதற்கு மேல் சொல்வதற்கென்ன, உங்களுக்கே தெரியும் அடுத்த நிலைப்பற்றி. ஆம் Download என்ற Box-ன் இறுதியாக உள்ள அம்புக்குறியை கிளிக் செய்யவும். என்னென்ன வகைகளில் அந்த வீடியோவை பதிவிறக்கலாம் என்ற விவரம் தோன்றும்.


இந்த பட்டியலில் உங்களுக்கு எது வேண்டுமோ அதை தேர்வு செய்தால் போதும்,  உங்களது பதிவிறக்கம் தயாராகிவிடும்.

நம்மையான விஷயங்களை பெற்றுக் கொள்வதற்காக இந்த தகவல் பகிரப்படுகிறது. அறியாதவர்களுக்கு தெரியப்படுத்துங்கள்.

அன்புடன்,
முஹம்மது மஷாரிக்

Tuesday, October 18, 2016

நபியவர்கள் கேட்ட அழகிய பிரார்த்தனைகள் - 1



நபி(ஸல்) அவர்கள் (பின்வருமாறு) பிரார்த்தித்துவந்தார்கள்

اللَّهُمَّ اغْفِرْ لِي خَطِيئَتِي وَجَهْلِي، وَإِسْرَافِي فِي أَمْرِي، وَمَا أَنْتَ أَعْلَمُ بِهِ مِنِّي. اللَّهُمَّ اغْفِرْ لِي هَزْلِي وَجِدِّي وَخَطَايَايَ وَعَمْدِي، وَكُلُّ ذَلِكَ عِنْدِي

அல்லாஹும்ம ஃக்ஃபிர் லீ கத்தீஅத்தீ, வ ஜஹ்லீ, வ இஸ்ராஃபீ ஃபீ அம்ரீ, வமா அன்த்த அஃலமு பிஹி மின்னீ, அல்லாஹும்ம ஃக்ஃபிர் லீ ஹஸ்லீ, வ ஜித்தீ, வ கத்தாயாய, வ அம்தீ, வ குல்லு தாலிக இந்தீ.

(பொருள்: யாஅல்லாஹ்! என்னுடைய குற்றங்களையும் என்னுடைய அறியாமையால் விளைந்த தவறுகளையும் என்னுடைய செயல்களில் நான் வரம்பு மீறியதையும் நீ மன்னித்தருள்வாயாக! இவைகளைப் பற்றி என்னைவிட நீயே நன்கறிந்தவன். யாஅல்லாஹ்! நான் விளையாட்டாகவோ, வேண்டுமென்றோ, அறியாமலோ, அறிந்தோ செய்தவைகளையும் மேலும் என்னிடம் நிகழ்ந்த அனைத்து பாவங்களையும் மன்னித் தருள்வாயாக!
அறிவிப்பவர்: அபூ மூஸா அல் அஷ்அரீ(ரலி)
நூல்: புஹாரி 6399.

Friday, October 14, 2016

Surah Arrahman Recited By Sister Barah (Dead)

மக்கள் கூடும் இடத்தில் தொழுகை - 1

மக்கள் தங்களது தேவைகளை நிறைவேற்றுவதற்காக பஜார்களுக்கு செல்கின்ற பொழுது அதிக பட்சமாக அவர்கள் தொழுகையை நிறைவேற்றுவது கிடையாது. தொழுகை நேரம் கடந்த பின்னர் மிகவும் உடல் சோர்வோடு அப்படியே வீடு சென்று உறங்கி விடும் நபர்கள் தான் நம்மில் அதிகம் உள்ளனர். 

நமது பலவீனத்தின் காரணத்தினால் இவைகள் ஏற்படுகின்றன என்பது உண்மை. ஆனால் இவற்றை சொல்லி நாம் இறைவனிடம் தப்பிக்க முடியாதல்லவா.

ஆகவே இதற்கான மாற்று வழியை அறிந்து அரபு நாடுகளின் சில பகுதிகளில் மக்கள் கூடும் இடங்கள் தோறும் பாங்கு அழைப்பு கொடுக்கப்பட்டு தொழுகை நடத்தப்படுகிறது. அதிகமான மக்கள் அந்த தொழுகைகளில் கலந்தும் கொள்கின்றனர்.

இதுபோன்ற ஏற்பாடுகளை இயன்றால் நாமும் செய்யலாம் என்பது எமது அவா.

Tuesday, August 30, 2016

ஒட்டகம் குர்பானி கொடுப்போருக்கான சிறிய நினைவூட்டல்!



அன்பு இஸ்லாமிய சொந்தங்களே! நமது தமிழகத்தில் வழமையாக ஈதுல் அள்ஹா (ஹஜ்ஜுப் பெருநாள்) தினத்தன்று வெளி மாநிலங்களில் இருந்து ஒட்டகம் கொண்டு வரப்பட்டு உள்ஹியா (குர்பானி) கொடுக்கப்பட்டு வருகிறது.

ஆனால் நான் பார்த்த வரையில் ஒட்டகத்தை எவ்வாறு அறுக்க வேண்டும் என்ற ஒரு சரியான முறைமை விளங்காமல் தான் மக்கள் பெருமளவில் உள்ஹிய்யா கொடுக்கிறார்கள். ஒட்டகத்தோடு தொடர்புடைய மாநிலமாக நமது மாநிலம் இல்லாமல் இருப்பதும் அதற்கு காரணமாக இருக்கலாம். எது எப்படியோ, இறைவனுக்காக நாம் நிறைவேற்ற இருக்கின்ற இந்த உள்ஹியா என்ற வணக்கம் இறைவன் கட்டளையிட்டதை போன்று தான் நிறைவேற்றப்பட வேண்டும்.

இங்கு உள்ஹியா கொடுப்பது தொடர்பான அனைத்து சட்டங்களையும் நாம் விளக்கப் போவதில்லை. அவைகள் பெரும்பாலான மக்களுக்கு நினைவூட்டப்பட்டுக் கொண்டுதான் இருக்கின்றன. அதிகளவில் நினைவூட்டப்படாத ஒட்டகத்தை எவ்வாறு அறுக்க வேண்டும் என்ற சட்டத்தை மட்டும் நான் நினைவூட்ட ஆசைப் படுகிறேன்.

இது தொடர்பாக இறைவனே திருமறையில் தனி ஒரு பாடமாக மக்களுக்கு சொல்லித் தருகிறான். அந்த வசனம் இதோ:

“(பலியிடப்படும்) ஒட்டகங்களை உங்களுக்காக அல்லாஹ்வின் (மார்க்க) சின்னங்களில் ஒன்றாக ஆக்கியுள்ளோம். அவற்றில் உங்களுக்கு நன்மையுள்ளது. நிறுத்தி வைக்கப்பட்ட நிலையில் அதன் மீது அல்லாஹ்வின் பெயரைக் கூறுங்கள்! அது விலாப்புறமாக விழுந்ததும் அதை உண்ணுங்கள்! யாசிப்பவருக்கும், யாசிக்காதவருக்கும் உண்ணக் கொடுங்கள்! நீங்கள் நன்றி செலுத்திட இவ்வாறே அதை உங்களுக்குப் பயன்படச் செய்தான்.
திருக்குர்ஆன் (22:37).

மேலே கூறப்பட்டுள்ள இறைவசனம் ஒட்டகத்தை நிறுத்தி வைத்துத்தான் அறுக்க வேண்டும் என்று கட்டளை பிறப்பிக்கிறது.

ஆனால் நான் முன்பு சொன்னதைப் போன்று இந்த சட்டம் பலருக்கும் விளங்காமல், ஒட்டகத்தை தாறுமாறாக கட்டி, அதை தரையில் வீழ்த்தி, பல நபர்கள் சேர்ந்து அதனுடைய நீண்ட கழுத்தை முறுக்கி பிடித்துக்கொண்டு அல்லது கால்களால் அழுத்திக்கொண்டு அறுக்கின்றனர்.

இப்படித்தான் அறுக்க வேண்டும் என்று இறைவன் சொல்லிவிட்டான் என்றால், அதற்கு மாற்றமாக ஒட்டகத்தை நாம் எவ்வாறு அறுத்தாலும் அது இறைவனின் கட்டளைக்கு மாறு செய்யும் நிலையை நமக்கு உண்டாக்கி விடும். அதுமட்டுமல்லாமல் நிறுத்தி வைத்துத்தான் ஒட்டகத்தை அறுக்க வேண்டும் என்று இறைவன் சொல்கிறான் என்றால் அதில் காரணம் இல்லாமல் இறைவன் சொல்ல மாட்டான். இறைவன் சொன்ன முறைமைக்கு மாற்றமாக ஒட்டகமும் செயல்படாது, நாமும் அதற்கு மாற்றமாக செயல்படவும் கூடாது. இறைவன் சொன்ன அடிப்படையில் ஒட்டகத்தை அறுப்பது தான் அந்த ஒட்டகத்திற்கு அமைதியளிப்பதாகும். மாறாக கட்டி வைத்து தாறுமாறாக மண்ணில் புரட்டி அறுப்பதென்பது நிச்சயமாக அந்த ஒட்டகத்திற்கு நோவினை ஏற்படுத்துவதாகும் என்பதை இஸ்லாமிய சமூகம் புரிந்து கொள்ள வேண்டும்.

இறைவன் நமக்காகவே இந்த உலகிலுள்ள அனைத்தையும் படைத்துள்ளான் என்பதில் மாற்றுக் கருத்தில்லை. ஆனால் அதற்காக நாம் இது போன்ற பிராணிகளை எப்படி வேண்டுமானாலும் வதை செய்து சாப்பிடலாம் என்று யாரும் எண்ணி விடக்கூடாது. இன்னும் சில நொடிகளில் இறந்து விடத்தானே போகிறது, இதனிடம் இனி தன்மையாக நடந்து என்ன நடக்க போகிறது என்ற எண்ணத்தில் ஆடு மாடுளை அறுக்கும் நபர்கள், மிகவும் கொடூரத் தன்மையோடு அந்த உயிரினங்களிடம் நடந்து கொள்வதை நாம் அன்றாடம் காண்கிறோம். இது தவாறான அணுகுமுறை ஆகும்.

உண்மையில் சொல்வதாக இருந்தால் நாம் அறுத்து சாப்பிடும் பிராணிகளை அல்லாஹ் தான் நமக்கு வசப்படுத்தி தந்துள்ளான். பிராணிகளை அறுத்து சாப்பிடும் மனிதனை விட, பல மடங்கு பலத்தால் உயர்ந்த ஆடும் மாடும் அந்த மனிதனுக்கு பயந்து பணிகிறது என்றால் இதற்கு காரணம் இறைவன் என்பதை நாம் ஒருபோதும் மறந்து விடக்கூடாது.

பிராணிகளுக்கு அமைதியளிக்கும் வகையில் இலகுவாக அவைகளை கையாண்டு அறுத்து சாப்பிட வேண்டும் என்ற வரையறையை இஸ்லாம் நமக்கு விதித்துள்ளது.

உங்களில் ஒருவர் தனது கத்தியை கூர்மையாக்கிக் கொள்ளட்டும். (விரைவாக அறுப்பதன் மூலம்) தனது பலிப்பிராணிக்கு நிம்மதியை கொடுக்கட்டும்!
(முஸ்லிம், அபூதாவூத் 2817, திர்மிதி 1409)
ஆகவே இறைவனும் இறைத்தூதரும் பிராணிகளை எவ்வாறு அறுக்க வேண்டும் என்று கட்டளை பிறப்பித்துள்ளார்களோ, அந்த அடிப்படையில் பிராணிகளை அறுத்து இறைவன் கடமையாக்கிய உள்ஹியா என்ற வணக்கத்தை முறையாக நிறைவேற்றுவோமாக! இறைவன் அதற்கு உதவுவானாக!

குறிப்பு: ஒட்டகம் அறுக்க நாடும் நபர்கள் ஒட்டகத்தை நிற்க வைத்து அறுக்க வேண்டும். மற்ற உயிரினங்களுக்கு இவ்வாறுதான் அறுக்க வேண்டும் என்ற சட்டம் சொல்லப்படவில்லை. ஆகவே நாம் இயல்பாக ஆடுகளையும் மாடுகளையும் எவ்வாறு படுக்க வைத்து அறுப்போமோ அவ்வாறே அறுக்கலாம். அறுப்பதற்கு முன்பாக கழுத்து முறிந்து போகும் அளவிற்கு வதை செய்து அறுப்பதை தவிர்த்து தன்மையான முறையில் அறுக்கவும்.

Wednesday, July 20, 2016

அஷ்ஷாமிலா நூலகத்தின் மொழியை அரபாக மாற்றுவது எப்படி?


அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹ்....!


மார்க்கக் கல்வியை கற்றுக் கொண்டிருக்கும் அல்லது கற்ற மாணவர்களுக்கு மக்தபதுஷ் ஷாமிலா என்ற மென்பொருளை பற்றி தெரியாமல் இருக்க வாய்ப்பிருக்காது என்றே கருதுகிறேன். உலகத்தில் பல லட்சக்கணக்கான உலமாக்களால் மார்க்க அறிவு தேடலுக்காக பயன்படுத்தப்படும் முதன்மையான மென்பொருள் இந்த மக்தபதுஷ் ஷாமிலா என்று சொல்லலாம். மக்தபதுஷ் ஷாமிலா பற்றிய விவரங்களை நாம் பதிவிட வரவில்லை என்பதால் இதைப்பற்றிய விவரத்தை இதோடு நிறுத்திவிட்டு விஷயத்திற்கு வருவோம்.

மக்தபதுஷ் ஷாமிலா பற்றிய விவரம் தெரிந்த பல நபர்கள் அந்த மென்பொருளை தமது கணினியில் இன்ஸ்டால் செய்து பயன்படுத்த முனைகின்றபொழுது அதன் மொழி ஏதோ புரியாத வகையில் இருக்கும். அரபி மொழியாக இருக்காது. அரபு மொழியில் இருந்தால் மட்டும் தான் அந்த மென்பொருளை வாசிக்கவும் பயன்படுத்தவும் முடியும். 

இப்படி சிக்கல் ஏற்படும் போது என்ன செய்வது என்று பலருக்கும் தெரிவதில்லை. இதனால் பயனுள்ள இந்த மென்பொருளை பயன்படுத்த முடியாமல் நிறைய நபர்கள் தவிப்பதுண்டு. கவலை வேண்டாம். 

நாம் கீழே பதிவேற்றி இருக்கும் படங்களை அப்படியே பார்த்து உங்களது கணினியில் மாற்றம் செய்யுங்கள். அரபு மொழியாக மாற்றப்பட்ட ஷாமிலா உங்களது கணினியில் இலகுவாக கிடைத்துவிடும்.

செய்ய வேண்டியவை:

STEP 1:




STEP 2:


STEP 3:


STEP 4:


STEP 5:


STEP 6:


STEP 7:

அவ்வளவுதான் விஷயம்....