தினம் ஒரு நபிமொழி


இது அனுமதிக்கப்பட்டது; இது தடுக்கப்பட்டது என்று உங்கள் நாவுகள் வர்ணிக்கும் பொய்யை அல்லாஹ்வின் மீது இட்டுக்கட்டிக் கூறாதீர்கள்! அல்லாஹ்வின் மீது பொய்யை இட்டுக்கட்டியோர் வெற்றி பெறமாட்டார்கள். (அல் குர்ஆன் 16:116).

Friday, December 25, 2015

ஹதீஸ் கலையின் எதார்த்த நிலைப்பற்றி பற்றி சவூதி அறிஞர்கள்!




ஹதீஸின் "மத்னை" பார்க்காமல் அறிவிப்பாளரை மட்டும் வைத்து ஹதீஸை சரி காண்பது நுனிப்புல் மேய்வதே-சவூதி அறிஞர்கள்.
ஸலபிகளின் கோட்டையான சவுதியில் உள்ள "ஜாமிஆ இஸ்லாமியா பல்கலைகழத்தின் உத்தியோக பூர்வ இணையளத்தில் கூறப்பட்ட இந்த வாசகத்தை இங்கு பதிகிறேன்.
"மதனை" பார்க்காமல் அறிவிப்பாளரை மட்டும் பார்க்கும் நுனிப்புல் மேயும் நிலை எங்கிருந்து உள்ளது?அவை இரண்டும்(சனத் மதன்) ஒன்றை ஒன்று பிரியாத நண்பர்கள் இல்லையா?
(இவர்கள் சொல்லும்)இந்த கூற்று (ஸனதை மட்டும் பார்க்கும் கூற்று) எந்த அடிப்படையில் வந்தது?இந்த நிலைபாட்டில் உள்ளவர்கள் ஹதீஸ் கலை நூல்களை வாசித்தால் இதை கூற முடியுமா?(வாசித்த பின்பும்)அவர் நிலை அதுதானா?
ஒரு வாசிக சாலைக்கு சென்று ஹதீஸ் கலை நூல்களின் ஆரம்ப பக்கத்தின் சிறு பகுதியை மட்டும் வாசிக்கும் ஒருவர் ஹதீஸ் கலை என்றால் என்ன என்ற வரைவிலக்கணத்துக்கு அறிஞர்கள் இவ்வாறு கூறுவதை கண்டு கொள்வார்.
"இந்த கலையானது ஏற்பதற்கோ மறுப்பதற்கோ அறிவிப்பாளர் நிலை பற்றியும் "மதன்" நிலை பற்றியும் அறியக்கூடிய சட்டதிட்டங்களை கொண்ட அறிவாகும்"
ஹதீஸ் துறை அறிஞர்களிடத்தில் மிகவும் நுணுக்கமான மிகவும் தெளிவான ஒரு விதியை நாம் பெற்றுள்ளோம். அது எல்லோராலும் ஏகோபித்த ஒரு விதியாகும் அதில் அவர்கள் இவ்வாறு உறுதிப்படுத்துகின்றனர்.
"சிலபோது "ஸனத்" சரியானாலும் "மதன்" "ஷுதூத்" "இல்லத்" காரணத்தால் பிழையாகும் "மதன்" சரியானாலும் "ஸனத்" பிழையாகும்."
இந்த விதியானது அரிதான விதி அல்ல எல்லா ஹதீஸ் கலை நூல்களிலும் காணக்கூடிய ஒன்றுதான்"
இவ்வாறு சவுதியின் பிரபல்யமான பல்கலைகழகம் கூறியுள்ளது.
ஆதாரம்: சவுதியின் ஜாமியா இஸ்லாமியா பல்கலைகழகத்தின் இணையதளதின் வெளியீடு.
நன்றி: அஹ்மத் ஜம்ஷத் அஸ்ஹரீ.

Monday, December 14, 2015

திருக்குர்ஆன் தமிழாக்கம் அப்டேட்!


அஸ்ஸலாமு அலைக்கும் வரமத்துல்லாஹி வபரக்காத்துஹு!
அன்புள்ள இஸ்லாமிய சகோதர சகோதரிகளே....!
Play Store-ல் Masarik Apps-ன் மூலம் வெளியிடப்பட்டுள்ள சகோதரர் P.ஜைனுல் ஆபிதீன் அவர்கள் மொழிப்பெயர்த்த திருக்குர்ஆன் தமிழாக்கத்தின் புதிய பதிப்பான 14-ஆம் பதிப்பு, முழுமையான முறையில் நமது அப்ளிகேஷனிலும் தற்போது அப்டேட் செய்யப்பட்டுள்ளது.

அதுமட்டுமல்லாமல் ஏற்கனேவே வெளியிட்டிருந்த அப்ளிகேஷனில் இல்லாத பல புதிய தகவல்கள் 14-ஆம் பதிப்பின் படி தற்போது அப்டேட் செய்யப்பட்டுள்ளது.
ஆகவே அனைத்து சகோதர சகோதரிகளும் உடனே பழைய குர்ஆன் அப்ளிகேஷனை அப்டேட் செய்து பயன்பெறுமாறு அன்போடு கேட்டுக் கொள்கிறோம். சிலருக்கு இது போன்ற தகவல் சென்றடையாமல் ஆரம்பத்தில் வெளியிட்ட அப்ளிகேஷனையே அவர்கள் பயன்படுத்துவதை நம்மால் காண முடிந்தது. அவர்களைப் போன்றோருக்கும் இந்தத் தகவலை இயன்றளவிற்கு எத்தி வைக்குமாறும் அன்போடு கேட்டுக் கொள்கிறோம்!
குறிப்பு;
14-ம் பதிப்பின் படி அப்ளிகேஷனை அப்டேட் செய்வதற்கு உதவி செய்த அனைத்து சகோதரர்களுக்கும் மனமார்ந்த நன்றிகள். எல்லாம் வல்ல இறைவன் இதன்மூலம் அளப்பறிய நன்மைகளை உங்கள் அனைவருக்கும் தந்தருள் புரிவானாக!!!

அன்புடன்,
முஹம்மது மஷாரிக்.
அப்ளிகேஷனுக்கான லிங்க்,

Monday, October 19, 2015

தக்லீத் ஓர் ஆய்வு!




புத்தகத்தை பார்வையிட கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பை பயன்படுத்தவும்.


Monday, October 5, 2015

பொறுப்புக்களை மறந்த மணப்பெண்கள்!!!




அய்லாவின் அதிகாரியாக இருந்த ருஸைக் இப்னு ஹகீம், வாதில்குரா கிராமத்தில், தாம் ஜும்ஆ நடத்தலாமா என இப்னு ஷீஹாபுக்கு எழுதிக் கேட்டார். அப்போது நானும் அவருடன் இருந்தேன். அக்கிரமாத்தில் சூடான் நாட்டவரும் பிறரும் இருந்தனர். இப்னு ஷீஹாப், ஜும்ஆ நடத்துமாறு ருஸைக் இப்னு ஹகீமுக்குக் கட்டளையிட்டார்கள். இப்னு உமர்(ரலி) வழியாக ஸாலிம் அறிவிக்கும் பின்வரும் நபிமொழியை அதற்கு ஆதாரமாக காட்டினார்கள். 
"உங்களில் ஒவ்வொருவரும் பொறுப்பாளர்கள் தம் பொறுப்பின் கீழ் உள்ளவர்கள் பற்றி ஒவ்வொருவரும் விசாரிக்கப் படுவீர்கள். தலைவர் பொறுப்பாளியாவார். அவர் தம் குடிமக்கள் பற்றி விசாரிக்கப் படுவார்கள். ஓர் ஆண் மகன் தன் குடும்பத்துக்குப் பொறுப்பாளியாவான். தன் பொறுப்பிலுள்ளவர்கள் பற்றி அவனும் கேட்கப் படுவான். ஒரு பெண், கணவனின் வீட்டுக்குப் பொறுப்பாளியாவாள். அவள் தன்னுடைய பொறுப்பிலுள்ளவர்கள் பற்றி விசாரிக்கப்படுவாள். ஓர் ஊழியன் தன் முதலாளியின் செல்வத்துக்குப் பொறுப்பாளியாவான். அவன் தன்னுடைய பொறுப்பு பற்றி விசாரிக்கப் படுவான்." 
"ஓர் ஆண் மகன் தன் தந்தையின் செல்வத்துக்குப் பொறுப்பாளியாவான்" என்றும் கூறினார்கள் எனக் கருதுகிறேன்.
நூல்:புகாரி 893.

இறைவனால் விசாரிக்கப்படும் முக்கியமான பொறுப்புக்களில் ஒன்று தான் ஒரு பெண் தனது கணவனின் குடும்பத்தைப் பராமரிப்பதாகும். ஆனால் இன்றையக்கால பெண்கள் பெருமளவில் இந்த பொறுப்பை மறந்தும் துடைத்தெரிந்தும் தான் வாழ்கின்றனர்!

கணவனின் வாசல் மிதிக்கும் சில பெண்களோ கணவனுக்கு மட்டுமே சேவையாற்றுகின்றனர். சில பெண்களோ ஒருபடி மேலாக சென்று வாசல் மிதித்த வேகத்தோடு கணவனை மட்டும் அழைத்துக்கொண்டு புதிய வாசல் தேடி சென்று விடுகின்றனர்! 

திருமண உறவின்மூலம் கணவனை மட்டும் பராமரித்தால் போதுமானது என்ற சுயநல சித்தனையால் தான் இந்த விபரீதங்கள் அரங்கேறுகின்றன. இந்த விபரீத சிந்தனையை நாளை நமது வாரிசுகள் மூலம் சந்திக்கும் போதுதான் புரியும் வேதனையும் விளைவுகளும்.

எது எப்படியோ, இறைவனை உண்மையாக ஈமான் கொண்ட என் அன்புச்சகோதரிகளுக்கு சொல்கிறேன். இறைவனது கட்டளை, நீங்கள் மணமுடித்து செல்லும் கணவனின் வீட்டினருக்கு நீங்கள் பொறுப்பாளிகள். கணவனோடு மட்டும் நமது வட்டத்தை சுருக்கி கொள்ளக்கூடாது. கணவனின் தாய், தந்தை, சகோதர, சகோதரிகள் ஆகியோரும் உங்களுடைய பொறுப்பிலுள்ளவர்கள் தான்.

ஈமான் கொண்ட பெண்கள் என்றும் இந்த பொறுப்பை மறந்துவிடக் கூடாது. இறைவனது இந்தக் கேள்விக்கு முறையான பதிலளிக்க விரும்புவோர், தனது கணவனின் குடும்பத்தை முறையாக பேணுவார்கள்! பாசத்தோடும் பரிவோடும் பல இன்னல்கள் துன்பங்களுக்கு மத்தியிலும், பல வருடங்கள் பராமரித்து வளர்த்த ஒரு தாயின் மகனை அந்த தாயை விட்டும் பிரிக்க மாட்டார்கள்.


Sunday, September 27, 2015

அடிமையின் மீது கூட அவதூறு கூறக்கூடாது!




مَنْ قَذَفَ مَمْلُوكَهُ، وَهُوَ بَرِيءٌ مِمَّا قَالَ، جُلِدَ يَوْمَ القِيَامَةِ، إِلَّا أَنْ يَكُونَ كَمَا قَالَ
நிரபராதியான தம் அடிமையின் மீது அவதூறு கூறியவருக்கு மறுமை நாளில் சாட்டையடி வழங்கப்படும். அவர் சொன்னதைப்போன்று அந்த அடிமை இருந்தால் தவிர! என்று அபுல் காசிம் (இறைத்தூதர் (ஸல்)) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல்: புகாரி 6858.

மக்கா குறைஷிகளிடம் இருந்த அன்றைய கால அடிமைகள் மனிதர்களாகவே மதிக்கப்படாத நிலையில்தான் இருந்தனர். அவர்களும் உயிருள்ள நபர்கள் என்று எண்ணிக்கூட பார்க்க மனமில்லாத வகையில் தொல்லை படுத்தப்பட்டார்கள் என்பதை நாம் அனைவரும் அறிந்துதான் இருக்கிறோம்.

அப்படிப்பட்ட அடிமைகளின் உரிமைகள் கூட பாதுகாக்கப்பட வேண்டும், அவர்கள் விஷயத்தில் அவதூறு கூறக்கூடாது என்று இறைத்தூதர் நமக்கு போதனை செய்கிறார்கள். அப்படி ஒரு மனிதர் அடிமைதானே என்று அற்பமாக எண்ணிக்கொண்டு அவதூறு பரப்பினால், அவருக்கு அல்லாஹ் மறுமையில் சாட்டையடி வழங்குவான் என்றும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறுகிறார்கள்!

ஆனால், இன்றைய கால சூழலில், தான் நேசித்த ஒரு நபர் தனக்கு ஏதாவதொரு சந்தர்ப்பத்தில் முரன்பட்டுவிட்டால், அடுக்கடுக்காக அவரைப்பற்றி மற்றவர்களிடம் அவதூறு பரப்பும் நிலையில் நம் மக்கள் மக்கள் உள்ளனர். 

மறுமையில் நாம் தண்டிக்கப்படுவோம் என்பதை அஞ்சிக் கொள்வோமாக!