Labels
- அழைப்புப்பணி (3)
- ஆய்வுகள் (20)
- ஆன்ராயடுக்கான இஸ்லாமிய மென்பொருள்கள் (13)
- இறைவசன ஒப்பீடுகள் (3)
- இறைவசனம் & ஹதீஸ் படங்கள் (15)
- கட்டூரைகள் (42)
- கேள்வி & பதில் (4)
- துஆக்கள் (4)
- பயனுள்ள தகவல்கள் (30)
- பயான் அறிவிப்புகள் (2)
- பயான் குறிப்புகள் (4)
- பலவீனமான செய்திகள் (14)
- பிற மதங்கள் (5)
- வீடியோ (62)
தினம் ஒரு நபிமொழி
Tuesday, December 22, 2015
மார்க்க விளக்கக் கூட்டம்!
Monday, December 14, 2015
திருக்குர்ஆன் தமிழாக்கம் அப்டேட்!
அஸ்ஸலாமு அலைக்கும் வரமத்துல்லாஹி வபரக்காத்துஹு!
அன்புள்ள இஸ்லாமிய சகோதர சகோதரிகளே....!
Play Store-ல் Masarik Apps-ன் மூலம் வெளியிடப்பட்டுள்ள சகோதரர் P.ஜைனுல் ஆபிதீன் அவர்கள் மொழிப்பெயர்த்த திருக்குர்ஆன் தமிழாக்கத்தின் புதிய பதிப்பான 14-ஆம் பதிப்பு, முழுமையான முறையில் நமது அப்ளிகேஷனிலும் தற்போது அப்டேட் செய்யப்பட்டுள்ளது.
அதுமட்டுமல்லாமல் ஏற்கனேவே வெளியிட்டிருந்த அப்ளிகேஷனில் இல்லாத பல புதிய தகவல்கள் 14-ஆம் பதிப்பின் படி தற்போது அப்டேட் செய்யப்பட்டுள்ளது.
ஆகவே அனைத்து சகோதர சகோதரிகளும் உடனே பழைய குர்ஆன் அப்ளிகேஷனை அப்டேட் செய்து பயன்பெறுமாறு அன்போடு கேட்டுக் கொள்கிறோம். சிலருக்கு இது போன்ற தகவல் சென்றடையாமல் ஆரம்பத்தில் வெளியிட்ட அப்ளிகேஷனையே அவர்கள் பயன்படுத்துவதை நம்மால் காண முடிந்தது. அவர்களைப் போன்றோருக்கும் இந்தத் தகவலை இயன்றளவிற்கு எத்தி வைக்குமாறும் அன்போடு கேட்டுக் கொள்கிறோம்!
குறிப்பு;
14-ம் பதிப்பின் படி அப்ளிகேஷனை அப்டேட் செய்வதற்கு உதவி செய்த அனைத்து சகோதரர்களுக்கும் மனமார்ந்த நன்றிகள். எல்லாம் வல்ல இறைவன் இதன்மூலம் அளப்பறிய நன்மைகளை உங்கள் அனைவருக்கும் தந்தருள் புரிவானாக!!!
அன்புடன்,
முஹம்மது மஷாரிக்.
அப்ளிகேஷனுக்கான லிங்க்,
Monday, October 19, 2015
தக்லீத் ஓர் ஆய்வு!
புத்தகத்தை பார்வையிட கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பை பயன்படுத்தவும்.
Thursday, October 15, 2015
Monday, October 5, 2015
பொறுப்புக்களை மறந்த மணப்பெண்கள்!!!
அய்லாவின் அதிகாரியாக இருந்த ருஸைக் இப்னு ஹகீம், வாதில்குரா கிராமத்தில், தாம் ஜும்ஆ நடத்தலாமா என இப்னு ஷீஹாபுக்கு எழுதிக் கேட்டார். அப்போது நானும் அவருடன் இருந்தேன். அக்கிரமாத்தில் சூடான் நாட்டவரும் பிறரும் இருந்தனர். இப்னு ஷீஹாப், ஜும்ஆ நடத்துமாறு ருஸைக் இப்னு ஹகீமுக்குக் கட்டளையிட்டார்கள். இப்னு உமர்(ரலி) வழியாக ஸாலிம் அறிவிக்கும் பின்வரும் நபிமொழியை அதற்கு ஆதாரமாக காட்டினார்கள்.
"உங்களில் ஒவ்வொருவரும் பொறுப்பாளர்கள் தம் பொறுப்பின் கீழ் உள்ளவர்கள் பற்றி ஒவ்வொருவரும் விசாரிக்கப் படுவீர்கள். தலைவர் பொறுப்பாளியாவார். அவர் தம் குடிமக்கள் பற்றி விசாரிக்கப் படுவார்கள். ஓர் ஆண் மகன் தன் குடும்பத்துக்குப் பொறுப்பாளியாவான். தன் பொறுப்பிலுள்ளவர்கள் பற்றி அவனும் கேட்கப் படுவான். ஒரு பெண், கணவனின் வீட்டுக்குப் பொறுப்பாளியாவாள். அவள் தன்னுடைய பொறுப்பிலுள்ளவர்கள் பற்றி விசாரிக்கப்படுவாள். ஓர் ஊழியன் தன் முதலாளியின் செல்வத்துக்குப் பொறுப்பாளியாவான். அவன் தன்னுடைய பொறுப்பு பற்றி விசாரிக்கப் படுவான்."
"ஓர் ஆண் மகன் தன் தந்தையின் செல்வத்துக்குப் பொறுப்பாளியாவான்" என்றும் கூறினார்கள் எனக் கருதுகிறேன்.
நூல்:புகாரி 893.
இறைவனால் விசாரிக்கப்படும் முக்கியமான பொறுப்புக்களில் ஒன்று தான் ஒரு பெண் தனது கணவனின் குடும்பத்தைப் பராமரிப்பதாகும். ஆனால் இன்றையக்கால பெண்கள் பெருமளவில் இந்த பொறுப்பை மறந்தும் துடைத்தெரிந்தும் தான் வாழ்கின்றனர்!
கணவனின் வாசல் மிதிக்கும் சில பெண்களோ கணவனுக்கு மட்டுமே சேவையாற்றுகின்றனர். சில பெண்களோ ஒருபடி மேலாக சென்று வாசல் மிதித்த வேகத்தோடு கணவனை மட்டும் அழைத்துக்கொண்டு புதிய வாசல் தேடி சென்று விடுகின்றனர்!
திருமண உறவின்மூலம் கணவனை மட்டும் பராமரித்தால் போதுமானது என்ற சுயநல சித்தனையால் தான் இந்த விபரீதங்கள் அரங்கேறுகின்றன. இந்த விபரீத சிந்தனையை நாளை நமது வாரிசுகள் மூலம் சந்திக்கும் போதுதான் புரியும் வேதனையும் விளைவுகளும்.
எது எப்படியோ, இறைவனை உண்மையாக ஈமான் கொண்ட என் அன்புச்சகோதரிகளுக்கு சொல்கிறேன். இறைவனது கட்டளை, நீங்கள் மணமுடித்து செல்லும் கணவனின் வீட்டினருக்கு நீங்கள் பொறுப்பாளிகள். கணவனோடு மட்டும் நமது வட்டத்தை சுருக்கி கொள்ளக்கூடாது. கணவனின் தாய், தந்தை, சகோதர, சகோதரிகள் ஆகியோரும் உங்களுடைய பொறுப்பிலுள்ளவர்கள் தான்.
ஈமான் கொண்ட பெண்கள் என்றும் இந்த பொறுப்பை மறந்துவிடக் கூடாது. இறைவனது இந்தக் கேள்விக்கு முறையான பதிலளிக்க விரும்புவோர், தனது கணவனின் குடும்பத்தை முறையாக பேணுவார்கள்! பாசத்தோடும் பரிவோடும் பல இன்னல்கள் துன்பங்களுக்கு மத்தியிலும், பல வருடங்கள் பராமரித்து வளர்த்த ஒரு தாயின் மகனை அந்த தாயை விட்டும் பிரிக்க மாட்டார்கள்.
Sunday, September 27, 2015
அடிமையின் மீது கூட அவதூறு கூறக்கூடாது!
مَنْ قَذَفَ مَمْلُوكَهُ، وَهُوَ بَرِيءٌ مِمَّا قَالَ، جُلِدَ يَوْمَ القِيَامَةِ، إِلَّا أَنْ يَكُونَ كَمَا قَالَ
நிரபராதியான தம் அடிமையின் மீது அவதூறு கூறியவருக்கு மறுமை நாளில் சாட்டையடி வழங்கப்படும். அவர் சொன்னதைப்போன்று அந்த அடிமை இருந்தால் தவிர! என்று அபுல் காசிம் (இறைத்தூதர் (ஸல்)) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல்: புகாரி 6858.
மக்கா குறைஷிகளிடம் இருந்த அன்றைய கால அடிமைகள் மனிதர்களாகவே மதிக்கப்படாத நிலையில்தான் இருந்தனர். அவர்களும் உயிருள்ள நபர்கள் என்று எண்ணிக்கூட பார்க்க மனமில்லாத வகையில் தொல்லை படுத்தப்பட்டார்கள் என்பதை நாம் அனைவரும் அறிந்துதான் இருக்கிறோம்.
அப்படிப்பட்ட அடிமைகளின் உரிமைகள் கூட பாதுகாக்கப்பட வேண்டும், அவர்கள் விஷயத்தில் அவதூறு கூறக்கூடாது என்று இறைத்தூதர் நமக்கு போதனை செய்கிறார்கள். அப்படி ஒரு மனிதர் அடிமைதானே என்று அற்பமாக எண்ணிக்கொண்டு அவதூறு பரப்பினால், அவருக்கு அல்லாஹ் மறுமையில் சாட்டையடி வழங்குவான் என்றும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறுகிறார்கள்!
ஆனால், இன்றைய கால சூழலில், தான் நேசித்த ஒரு நபர் தனக்கு ஏதாவதொரு சந்தர்ப்பத்தில் முரன்பட்டுவிட்டால், அடுக்கடுக்காக அவரைப்பற்றி மற்றவர்களிடம் அவதூறு பரப்பும் நிலையில் நம் மக்கள் மக்கள் உள்ளனர்.
மறுமையில் நாம் தண்டிக்கப்படுவோம் என்பதை அஞ்சிக் கொள்வோமாக!
Monday, August 3, 2015
திருமறை குர்ஆன் மீண்டும் அப்டேட்!
அன்பான இஸ்லாமிய சகோதர சகோதரிகளே, அஸ்ஸலாமு அலைக்கும் வரமத்துல்லாஹி வபரகாத்துஹு!
மஷாரிக் ஆப்ஸி(Masarik Apps)ன் மிகவும் இனிமையான தகவலோடு உங்களை சந்திப்பதில் பெரும் மகிழ்ச்சி அடைகிறோம்....!
சகோதரர் பி.ஜெயினுல் ஆபிதீன் அவர்கள் மொழிப்பெயர்த்த தமிழ் குர்ஆன் தர்ஜுமா அப்ளிகேஷன் மீண்டும் சில சிறப்பு அம்சங்களோடு தற்போது அப்டேட் செய்யப்பட்டுள்ளது!
நாம் ஏற்கனவே வெளியிட்டிருந்த திருக்குர்ஆன் அப்ளிகேஷனால் பலரும் பயன்பெற்று வருவதாக பல சகோதரர்களிடமிருந்து தகவல் கிடைத்தது, அல்ஹம்துலில்லாஹ்! மேலும், இந்த குர்ஆன் அப்ளிகேஷனில் தேடல் வசதி இணைக்கப்பட்டால் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்றும் பலர் நம்மிடம் தெரிவித்தனர். பல முயற்சிகளுக்கு மத்தியில், மக்கள் மனதில் நெருடிக் கொண்டிருந்த "தேடல்" வசதியும் கண்டுபிடிக்கப்பட்டு தற்போது நமது இந்த அப்ளிகேஷனில் இணைக்கப்பட்டு விட்டது என்பதை மிகுந்த மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறோம்.
நாம் இந்த குர்ஆன் அப்ளிகேஷனில் தமிழோடு சேர்த்து அரபு மொழியையும் இணைத்தமைக்கு காரணமே, பலவகையான தர்ஜுமாக்களை ஒரே மொபைலில் பயன்படுத்தி சிரமப்பட வேண்டாம் என்பதற்காகத்தான். தேடல் வசதி நமது அப்ளிகேஷனில் இணைக்கப்படாமல் இருந்தமையால் நாம் வேறு தர்ஜுமாவையும் பயன்படுத்தும் நிலை ஏற்பட்டிருக்கலாம். இனி இந்த சுமையும் கவலையும் வேண்டாம்.
நமது ஒரே தர்ஜுமாவிலேயே நமக்கு தேவையான அனைத்து வசதிகளும் பெரும்பாலும் செய்து தரப்பட்டுவிட்டது.
அதுமட்டுமல்லாமல் தற்போது வெளியிடப்பட்ட பதினான்காம் பதிப்பின் அடிப்படையில் அனைத்து குறிப்புக்களும் அப்டேட்டும் செய்யப்பட்டு விட்டது. ஆகவே இந்த புதிய பயனுள்ள வசதிகளை பெற உடனே Play Store சென்று உங்களின் பழைய வெர்சன் குர்ஆனை அப்டேட் செய்து கொள்ளுங்கள். அப்டேட் செய்ய தெரியாதவர்கள் தெரிந்தவர்களிடம் கேட்டு செய்து கொள்ளுங்கள்.
தெரிந்தவர்கள் தெரியாதவர்களுக்கு உதவுங்கள்!
உடனே அப்டேட் செய்யுங்கள்! பயனடையுங்கள்! மக்களிடம் அதிகம் பரப்புங்கள்!
இதற்காக முயற்சித்த, மேலும் ஒத்துழைத்த எனக்காகவும் என் குடும்பத்தாருக்காகவும் வல்ல இறைவனிடம் பிரார்த்தனை செய்யுங்கள்!
குறிப்பு: தமிழில் தேடல் வசதி அமைக்கப்பட்டுள்ளதால், வார்த்தைகளை தேடுவதற்கு தமிழ் தட்டச்சு பலகை தேவை. ஆகவே, அனைவரும் தட்டச்சு செய்ய தனியாக ஏதாவதொரு தமிழ் டைப் ரைட்டிங் (Tamil Type Writing Keyboard) அப்ளிகேஷனை பதிவிறக்கம் செய்து பயன்படுத்திக் கொள்ளுங்கள்.
அன்புடன்,
உங்கள் முஹம்மது மஷாரிக்.
தொண்டி.
அப்ளிகேஷனுக்கான லிங்க்.,
Subscribe to:
Posts (Atom)





